கவிஞர் அம்பி 17.02.2020 இல் அகவை 91 இல் காலடி எடுத்து வைக்கிறார்.

.


சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் ஈழத்தின் மூத்த ஆளுமை கவிஞர் அம்பி 17.02.2020 இல் அகவை 91 இல் காலடி எடுத்து வைக்கிறார். அவரை மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு வருகை தந்த எழுத்தாளர் லெ,முருகபூபதி அண்ணாவுடன் இன்று சந்தித்தோம். 
கவிஞர் அம்பியின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது பற்றிய பேச்சு வ்ந்த போது 2004 இல் கன்பராவில் நடந்த எழுத்தாளர் விழாவில் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்ததைப் பேசிய போது நினைவில் வைத்து ஆட்களைக் குறிப்பிட்டார். முருகபூபதி அவர்களின் "இலங்கையில் பாரதி" நூலை அம்பி அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கினார். அம்பி தனது "கொஞ்சும் தமிழ்" நூலை எனக்குத் தரும் போது மறவாமல் பெயரை ஞாபகம் வைத்து கானா பிரபாவுக்கு என்று எழுதி ஆச்சரியப்படுத்தினார்.

கவிஞர் அம்பி ஐயா நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.
எழுத்தாளர் லெ.முருகபதி, கவிஞர் அம்பியோடு நிகழ்த்திய உரையாடலின் சிறு பகுதியோடு, படங்களையும் இத்தால் பகிர்கிறேன்.






No comments: