
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா சிறப்பு அதிதிகளாக கதை சொல்லி டாக்டர் எம்.எம்.நௌஷாத் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ்அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். ரி.எம். ரிம்சான் பிரபல ஊடக வியலாளர் வி.ரி. சகாதேவராஜா இலக்கிய ஆளுமைகள் சமூக சேவை மகளிர் அமைப்புக்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கவியரங்கில் கவிஞர் திருமதி. றியாசா வாஹிர் கவிஞர் செல்வி. றிப்னா றியாஸ் கவிஞர் திரு. ஆசுகவி அன்புடீன் கவிஞர் திருமதி. யுகதாரிணி கவிஞர் திரு. எம்.எச்.அலியார் கவிஞர் செல்வி. மு.ஸாஹிரா பானு கவிஞர் திரு.கே.எம்.ஏ. அசிஸ் கவிஞர் திரு. அருளானந்தம் சுதர்சன் ஆகியோர்களின் கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.
உலகறிந்த தென்னிந்தியாவின் பன்முக ஆளுமைக்கவிஞர் பாடலாசிரியர் எழுத்தாளர் வித்யாசாகர் அங்கு உரையாற்றுகையில்:

பெண்கள் அடக்கமாக இருக்கவேண்டும். அடக்கம் என்பது அடக்குதல் அல்ல இணைந்து போதல் அடக்கமாக ஒன்றித்தல் என்று பேராசிரியர் றமீஸ்அப்துல்லா சொன்னார்கள். அது உண்மை. அருமையான வாசகம்.
ஒரு தடவை மலேசியாவில் இலக்கியக்கூட்டம் நடைபெற்றுகே கொண்டிருக்கையில் டாக்டர் சொக்கலிங்கம் என்பவர் இப்படிச்சொன்னார். அதாவது பார்வையாளர்கள் கைதட்டுங்கள். கைதட்டினால் ஆயள்கூடுகிறது. இதயம் நன்றாக வேலை செய்கிறது. என்றார்.

சிறப்புக் கவிஞர்களாக சந்தக்கவிஞர் திரு. முகம்மது இஸ்மாயில் அச்சிமுகம்மட் கவிஞர் திரு. வேலணையூர் ரஜிந்தன் கவிதாயினி திருமதி. சம்மாந்துறை மஷூறா கவிதாயினி திருமதி. ஏம்.ஐ.சித்தி றபீக்கா ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறப்புக் கவிதைகளும் இடம் பெற்றன.
அத்தோடு இலக்கிய ஆளுமைகளுக்கு தமிழா ஊடக வலையமைப்பினால் 'இலக்கிய முரசு' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் வித்தியாசாகர் அவர்களின் கடல் கடந்த இலக்கிய செயற் பாட்டிற்காகத் தமிழா ஊடக வலையமைப்பினால் 'கவிவேந்தர் ' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். அதுபோல், மலேய பல்கலைக் கழகத்தில் மூன்று நாட்களாக நடந்தேறிய "உலக திருக்குறள் மாநாட்டில்" கவிஞர் வித்யாசாகருக்கு மலேசியாவின் பினாங் மாநிலத்து முதலமைச்சரின் திருக்கரங்களால் "தமிழ் படைப்பிலக்கியச் செம்மல்" எனும் உலகளாவிய பெருவிருது தந்து கௌரவிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்களின் பிறந்த ஊரின் மக்களுக்காகவும் மொழிக்காகவும் பெண்ணிய நல்விடிவுக்காகவும் அரும் பாடுபட்டு பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடாத்தி வருகின்றமைக்காக "முகில் பதிப்பகத்தினால் 'மக்கள் காவலன்' எனும் பட்டம் கவிஞர் வித்தியாசாகர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கவிஞர் வித்தியா சாகர் அவர்களின் முகில் பதிப்பகத்தின் வெளியீடாக திரை மொழி மற்றும் வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (வாழ்வியல் கட்டுரைகள்) எனும் நூற்கள் வெளியிடப்பட்டன. முதல் பிரதியினை மனித நேயன் இர்சாட் ஏ காதர் பெற்று கொண்டார். அத்துடன் கவிஞர் வித்யாசாகரின் 'வெளிநாட்டு வாழ் தமிழர்களுடைய' வாழ்க்கையைப் பற்றி பேசும் உருக்கமான பாடல் அடங்கிய இறுவட்டும் வெளியீடும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், கவிஞர் வித்யாசாகரின் படைப்புக்களை விற்று கிடைக்கும் வருவாயில் இலங்கையிலுள்ள வறுமைமிக்க எளிய ஊர்களின் பள்ளிக்கூடங்களுக்கு கழிப்பறை வசதியும் நூலக ஏற்பாடும் செய்து தரப்படவுள்ளதாக தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்
சம்மாந்துறை, அம்பாறை மாவட்டம்,இலங்கை

No comments:
Post a Comment