கைவிலங்கு, சிறைக்கூடம் என்பவற்றால் எமது ஜனநாயக போராட்டத்தை நிறுத்திவிட முடியாது - விடுதலையான சம்பிக்க
இராணுவ சிப்பாயின் கழுத்தை அறுத்து துப்பாக்கி கொள்ளை!
தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும்
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனை
கிழக்கு மாகாண ஆளுநா் மட்டக்களப்புக்கு விஜயம்
கைவிலங்கு, சிறைக்கூடம் என்பவற்றால் எமது ஜனநாயக போராட்டத்தை நிறுத்திவிட முடியாது - விடுதலையான சம்பிக்க
(நா.தனுஜா)
24/12/2019 ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நோக்கிய எமது போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். கைகளுக்கு விலங்கு பூட்டுவதன் மூலமும், சிறைக்கூடங்களின் ஊடாகவும் எமது அந்தப் போராட்டத்தை நிறுத்திவிட முடியாது என்று சிறையிலிருந்து பிணையில் விடுதலையான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய அவர், சிறைச்சாலை முன்றலில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் எமது நல்லாட்சி அரசாங்கம் சுயாதீன பொலிஸ் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தி, நியாயமான தீர்ப்பைப் பெறக்கூடிய நிலையை ஏற்படுத்தியமைக்காக முதலில் நன்றி கூறுகின்றேன்.
சிலர் அதனை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்தாலும் கூட நீதிமன்றம் அதன் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்து, உறுதிப்படுத்திக் கொண்டமைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதன்போது கூறினார். நன்றி வீரகேசரி
இராணுவ சிப்பாயின் கழுத்தை அறுத்து துப்பாக்கி கொள்ளை!
25/12/2019 வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள 7 ஆவது சிங்க றெயிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்ததுதும் இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார்.
இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர்.
சம்பவத்தில் எம்.ரத்நாயக்க வயது 24 என்ற இராணுவ வீரரே படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
25/12/2019 இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள நிலையில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக அரச நிர்வாக அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி மரம் நடும் திட்டத்தையும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுதந்திர தினத்தில் இடம்பெற ஏற்பாடாகி இருக்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு நிகழ்வுகளை ஒத்திகை பார்க்கும்போது, மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவகையில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடந்த 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இலங்கையில் முதல் தடவையாகத் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனை
26/12/2019 சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15 ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இன்று காலை 7.30மணியளவில் இடம்பெற்றது.

சிவகுகநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சிவஶ்ரீ, பிரபாகரகுருக்கள், மயூரக்குருக்கள், திவாகரகுருக்கள், இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குகனேஸ்வரசர்மா, ஆலயக்குருமார்கள், பரிபாலன சபையினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






நன்றி வீரகேசரி
கிழக்கு மாகாண ஆளுநா் மட்டக்களப்புக்கு விஜயம்
25/12/2019 கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பிற்கு தமது உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொணடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார் .
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மற்றும் உரிய பிரதேச செயலாளர்களும் உடன் சமூகமளித்திருந்திருந்தனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாண்டி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் புலி பாய்ந்த கல் பால வீதியின் வெள்ள நிலமை மக்களின் போக்குவரத்து தொடர்பாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலார் பிரிவில் காவத்தமுனை போன்ற இடங்களுக்கு சென்று மக்களின் நிலமைகளை அவதானித்தார்.
மேற்குறித்த பிரதேச மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இதேவேளை கோறளை மத்தி பிரதேச செயலகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள்.நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் உயர் அதிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment