பெண்ணை வாழவிடுங்கள்

அந்தப் படம்தான் பெண்ணை வாழவிடுங்கள். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான எம் கர்ணன் தயாரித்தார். ஏ கே சுப்பிரமணியன் படத்தின் மூலக்கதையை எழுதியிருந்தார்.

ஆனால் சர்ந்தர்ப்ப வசத்தினால் ஷீலா மீது சந்தேகம் கொண்டு திருமணத்தினத்தன்றே அவரை விட்டு நீங்குகிறார். பேற்றோர்கள் அவருக்கு கே ஆர் விஜயாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். விஜயாவின் முயற்சியினால் ஜெய் திருந்துகிறார். சட்டத்தரணியான விஜயாவைத் தேடி ஷீலா ஒரு நாள் வருகிறார். தம் இருவருடைய கணவனும் ஒருவனே என்று அறியாமல் தன் கணவனுடன் சேர்ந்து வாழ சட்டத்தின் மூலம் உதவும்படி விஜயாவை ஷீலா கோர விஜயாவும் அவர் வழக்கை ஏற்று உதவ முன்வருகிறார். அப்போதுதான் இருவர் கணவரும் ஒருவரே என்று விஜயா அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

தன்னால் உணர்ச்சிகரமான பாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் ஜெய்சங்கர் காட்டியிருந்தார். கே ஆர் விஜயாவுடன் அவர் தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பானவை. மலையாளத்தில் புகழ் பெற்ற ஷீலா இதில் தன் நடிப்பை வழங்கியிருந்தார். வி கே ராமசாமி, நாகேஷ், சுந்தரிபாய் ஆகியோர் உணர்ச்சிகரமாகவும் மற்றைய காட்சிகளில் நகைச்சுவையாகவும் தங்கள் நடிப்பை காட்டியிருந்தார்கள். வில்லனாக வரும் எம் ஆர் ஆர் வாசு தன் தந்தை எம் ஆர் ராதாவை நினைவூட்டுகிறார். இவர்களுடன் எஸ் வி சகஸ்ரநாமம், வி எஸ் ராகவன் சைலஸ்ரீ ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தை பிரபல படத்தொகுப்பாளர் ஆர் தேவராஜன் இயக்கியிருந்தார். எடிட்டர் என்பதால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வித்தை அவருக்கு தெரிந்திருந்தது.
வித்தியாசமான கதையைக் கொண்ட இந்தப் படத்தை 1969ம் ஆண்டு தயாரித்த கர்ணன் பின்னர் குடும்பக் கதைகளை தயாரிப்பதை தவிர்த்து அக்ஷன் கவ்போய்! படங்களை அடிதடிப் படங்களை தயாரித்து ஒளிப்பதிவு செய்து டைரக்ட்டும் செய்து புகழ் பெற்றார்.
No comments:
Post a Comment