மரண அறிவித்தல்


நீராவியடி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, நடனசபேசன் பொன்னுசாமி அவர்கள், சனிக்கிழமை 29.06.2019 அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுசாமி - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா - திலகவதி (றோஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அருமைக் கணவரும், சுகலன், சுஜிந்தா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

கனி அமுது, விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரூபன், அர்ஜுன், ஐஷானி ஆகியோரின் பாசமிகு பேரனாரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், இராஜசுந்தரம், இராமச்சந்திரன் மற்றும் கமலாம்பிகை, கருணாகரன் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல், பார்வைக்காக வியாழக்கிழமை, 04.07.2019 அன்று காலை 9:30 மணி முதல் - 10:30 மணிவரை Palm chapel, Macquarie Park Crematorium தில் வைக்கப்பட்டு 10:30 மணி முதல் 12:30 மணிவரை கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

-->
தகவல் : சுகலன் - 0405 337 075

No comments: