30/06/2019 வளை­குடா பிராந்­தி­யத்தில் ஸ்திரத் தன்­மையை நிலை­நாட்டும் நோக்கில், ஈரான் விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். 
ஜி 20 நாடு­களின் இரண்டு நாள்  உச்­சி­மா­நாடு, ஜப்­பானின் ஒசாகா நகரில் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது. இதில், பிர­தமர் நரேந்­திர மோடி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிர­தமர் ஷின்ஸோ அபே உள்­ளிட்ட பல தலை­வர்கள் பங்­கேற்­றுள்­ளனர். 
இந்த உச்­சி­மா­நாட்­டி­னி­டையே,  அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்புடன் பிர­தமர் மோடி வெள்­ளிக்­கி­ழமை இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.
இந்தப் பேச்­சு­வார்த்தை தொடர்­பாக, இந்­தியப் பிர­தமர் மோடி தனது டுவிட்டர் பக்­கத்தில் வெளி­யிட்ட பதிவில்  தெரி­வித்­துள்­ள­தா­வது, 
அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யுடன்  பல்­வேறு விவ­கா­ரங்கள் தொடர்­பாக விவா­தித்தேன். தொழில்­நுட்ப மேம்­பாடு, பாது­காப்பு, வர்த்­தகம் உள்­ளிட்ட துறை­களில் இரு­நா­டு­க­ளுக்­கி­டையே நிலவி வரும் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பாக இரு­வரும் விவா­தித்தோம். அமெ­ரிக்­கா­வு­ட­னான பொரு­ளா­தார மற்றும் கலா­சார ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த இந்­தியா உறு­தி­கொண்­டுள்­ளது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
இந்தச் சந்­திப்பு குறித்து, வெளி­யு­ற­வுத்­துறை செயலர் விஜய் கோகலே செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது,
ஜனா­தி­பதி ட்ரம்ப் -– பிர­தமர் மோடி இடை­யி­லான சந்­திப்பு ஆக்­கப்­பூர்­வ­மா­ன­தாக இருந்­தது. பாது­காப்பு விவ­கா­ரங்கள் குறித்து இரு­வரும் ஆலோ­சனை நடத்­தினர். எஸ் - 400 விவ­காரம் குறித்து ஆலோ­சனை நடத்­தப்­ப­ட­வில்லை. இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய இரு நாடு­களின் நலன்­களை கருத்தில் கொண்டு, வளை­குடா பிராந்­தி­யத்தில் ஸ்திரத் தன்­மையை நிலை­நாட்டும் நோக்கில், ஈரான் விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இரு தலை­வர்­களும் ஒப்புக் கொண்­டனர். 
'மேக் இன் இந்­தியா' திட்­டத்தின் இலக்­கு­களை நிறை­வேற்ற, 5ஜி தொழில்­நுட்பம் வழங்கும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்­வது தொடர்­பா­கவும் இந்த சந்­திப்பில் விவா­திக்­கப்­பட்­டது.இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­தக விவ­காரம் தொடர்­பாக இரு நாட்டு வர்த்­தக அமைச்­சர்­களும் விரைவில் சந்­தித்து பேச முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,  ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, சீனா, பிரேஸில், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி