இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா
பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று
அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு
இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா
17/08/2017 ஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் தனது வரவேற்புரையில்,
“அவுஸ்திரேலியாவானது பெண்களுக்கு தலைமைத்துவ பொறுப்புக்களையும் பொருளாதர தரத்தில் அவர்களை மேம்படுத்தவும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கவும் முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான முதலீடுகல் பெண்கள் மூலம் அரச மற்றும் தனியார் பொருளாதாரத் துறை வளர்ச்சியடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய எலிசபத் பிரொட்ரிக்,
“இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பெண்களின் வகிபங்கு அவர்களது சுய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள தான் மிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று
அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நன்றி வீரகேசரி
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு
பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று
அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு
இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா
17/08/2017 ஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் தனது வரவேற்புரையில்,
“அவுஸ்திரேலியாவானது பெண்களுக்கு தலைமைத்துவ பொறுப்புக்களையும் பொருளாதர தரத்தில் அவர்களை மேம்படுத்தவும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கவும் முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான முதலீடுகல் பெண்கள் மூலம் அரச மற்றும் தனியார் பொருளாதாரத் துறை வளர்ச்சியடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய எலிசபத் பிரொட்ரிக்,
“இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பெண்களின் வகிபங்கு அவர்களது சுய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள தான் மிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு
16/08/2017 பாகிஸ்தானுக்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுடைய 70
ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில்
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுமார் 2300 வருட தொடர்பை கொண்டாடும்
வகையில் “என் என்டரிங் ஃப்ரென்டஸிப் : ஸ்ரீ லங்கா என்ட் பாகிஸ்தான்” ( An Enduring Friendship; Sri Lanka and Pakistan ) எனும் புத்தகத்தை நேற்று வெளியிட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸர்ப்ராஸ் அஹமட் கான் ஸிப்ரா,
பாகிஸ்தான் மற்றும் இலங்கையானது சமுத்திர தொடர்புடையது எனவும் இத்
தொடர்பானது ஏறத்தாழ 2300 வருட பழைமையானதெனவும் 1948 இல் பாகிஸ்தான்
சுதந்திரமடைந்ததன் பின்னர் அப்போதைய இலங்கை பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின்
பாகிஸ்தானுக்கான விஜயத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்டது எனவும்
தெரிவித்தார்.
மேலும் புத்தகத்தின் ஆசிரியரான அர்ஷாட் காஸிம் தனது உரையில்,
இப் புத்தகமானது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இராணுவ
ஆக்கிரமிப்பு தலையீடு இல்லாத சுமுகமான உறவு முறை மற்றும் ஆரம்பகால தொடர்பு
அது வளர்ச்சி அடைந்த விதம் என பல தகவல்களை சுமந்துள்ளது என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரியவும் சிறப்பு
விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பாண்டாரநாயக்க
குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரிஷாட்
பதியுதீன், தயா கமகே, எ.எச்.எம் பௌஷி, எம.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ், அனோமா
கமகே, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு
சிறப்பித்ததோடு புத்தகத்தின் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் தேசிய
கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டமையானது
அனைவரினதும் பாராட்டைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!
16/08/2017 நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 19 மாவட்டங்களில்
ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியினால் மூன்று இலட்சத்து 36 ஆயிரத்து
487 குடும்பங்களில் வாழும் 12 இலட்சத்து 42 ஆயிரத்து 140 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் தற்போது தொடர்ச்சியான
மழைவீழ்ச்சி கிடைத்தாலும் தொடர்ந்தும் வரட்சியான சூழல்
நீடிக்கின்றது. வரட்சி காரணமாக சுமார் ஐந்து இலட்சத்துக்கும்
அதிகமானோர் குடிநீரின்றி அவதியுறுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் தொடரும் வரட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 802
குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து மூவாயிரத்து 183 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் ஒரு
இலட்சத்து 28 ஆயிரத்தி 652 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு
இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 46 ஆயிரத்து 841 குடும்பங்களை சேர்ந்த ஒரு
இலட்சத்து 58 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த
மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 951 பேரும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 65ஆயிரத்தி 642 பேரும், அம்பாறை
மாவட்டத்தில் 57ஆயிரத்து 248 பேரும் கடும் பாதிப்புக்களுக்கு
முகங்கொடுத்துள்ளனர்.
வட மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 163 குடும்பங்களை
சேர்ந்த 3 இலட்சத்து 65 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 2 இலட்சத்து
703 பேரும், புத்தளம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 463
பேரும் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனை தவிர அம்பாந்தோட்டை, இரத்தினபுரி ,பதுளை மொனராகலை, கண்டி,
கம்பஹா, மாத்தளை போன்ற மாவட்டங்களிலும் வரட்சியால் மக்கள்
பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் தற்போது தொடர்ச்சியான
மழைவீழ்ச்சி கிடைத்தாலும் தொடர்ந்தும் வரட்சியான சூழல்
நீடிக்கின்றது. வரட்சி காரணமாக சுமார் ஐந்து இலட்சத்துக்கும்
அதிகமானோர் குடிநீரின்றி அவதியுறுகின்றனர் எனவும்
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்திருக்கும்
மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் தொடர்ந்தும்
குடிநீர் உட்பட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கி
வருகின்றது.
அத்துடன் வரட்சி நீடிக்கின்றமையினால் பிரதான குளங்கள் பலவற்றில்
நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள்
அழிவடைந்துள்ளன. அத்துடன் பெரும்போகம் மற்றும் சிறு போக பயிர்ச்செய்கையும்
முற்றிலும் பாதிப் படைந்துள்ளது. மேலும் சரணாலயங்களில் விலங்குகளும்
பாதிப்பினை எதிர் நோக்கியுள் ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று
16/08/2017 கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில்
டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி
மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி
பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு,
சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏனையோர் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள 585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு
உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில்
கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சைபெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய்
காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் சராசரியாக நாளொன்றிற்கு டெங்குநோய்த்தொற்றுக்கு ஆளாகிய
நிலையில் குறைந்தது 3 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத்தினமும்
வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ் நெருக்கடியான நிலையில் மாவட்டத்தின் மக்களைப் பாதுகாக்கும் வகையில்
கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் சிறு செய்திக் குறிப்பு ஒன்றினையும்
வெளியிடுள்ளனர்.
குறித்த செய்திக் குறிப்பில்,
புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள்
ஆகிய இடங்களை பொதுமக்கள் பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள்
காணப்படுமாயின் அவை டெங்கினால் பாதிக்கப்பட்டநோயார்களின் டெங்கு வைரஸ்
கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.
இவ்வாறு டெங்கு வைரஸின் தாக்கம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
வரும் நோயாளர்களிடம் இருந்து டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினைக்
கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின், அந்த
நுளம்புகளினால் கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும். இதனால்
கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போல அதிதீவிரமாக
பரவத்தொடங்கும்.
இந்த அபாய நிலையைக் கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும்
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில்
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள்
மற்றும் பொது அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன்
தொடர்புகொண்டு இந்த உயிர்க்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு
வேண்டுகிறோம் என அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
15/08/2017 மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்று
வரும் காணி அபகரிப்பை கண்டித்து மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்துக்கு
முன்பாக அம்பிடிய சுமண ரட்ன தேரரின் தலைமையில் மக்கள் கவனயீர்ப்பு
போராட்டத்திலும் சாந்திக்கிரியையிலும் ஈடுப்பட்டனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தை சிங்கள தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப கட்டமாக சமய வழிப்பாட்டினை
தொடர்ந்து தற்போதய காணி அபகரிப்பு தொடர்பாக சிறுபாண்மை மக்களின் உரிமைகளும்
காணிகளும் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என
வலியுறுத்தினர்.
பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஈடுப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை
தொடர்ந்து அபகரிக்கப்பட்டுள்ள மிராவோடை பாடசாலை மைதானத்திற்கு
ஏற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களும் சென்றனர்.
நன்றி வீரகேசரி
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு
15/08/2017 வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற
புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல
முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்
இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.
எனவே, இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி
அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி
புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மறித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை
உறுப்பினர் தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்
மயுரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வவுனியா பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி மகிந்த ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.
இவ் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிகமாக மூவரை மாதாந்தம் 7500
ரூபா சம்பளம் அடிப்படையில் நியமிப்பதாகவும் உங்கள் கிராமத்திலிருந்து மூவரை
தருமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த தெரிவித்தார்.
அதனையடுத்து பொதுமக்கள் புகையிரத்திற்கு முன்னாள் நின்று அகன்று புகையிரதம்
செல்வதற்கு வழி விட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புகையிரம் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விரைவில் இவ்விடத்திற்கு பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்காவிட்டால் போராட்டம் தொடருமென பொதுமக்கள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment