லயனல் வென்ட் அரங்கில் விருது பெற்ற பேராசிரியர் மௌனகுரு

.

லயனல் வென்ட் அரங்கில் இலங்கை நாடகப் பங்களிப்புக்காக
உலக நாடக தின விருது பெற்ற பேராசிரியர் மௌனகுரு

உலக நாடக தினத்தை முன்னிட்டு உலகநாடக தினம் இம்மதம் 25, 26, 27  ஆம் திகதிகளில் கொண்டாடப்பட்டது.

 27 ஆம் திகதி உலக நாடக தினத்தை முன்னிட்டு கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் இலங்கை நாடகத் துறையில் தம் அர்ப்பணிப்பான  தொடர் செயற் படுகளால் பெரும் பணி புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற  நான்கு பெரும்  நாடகக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டனர். இவர்களுள்  ஜெயலத் மனோரத்ன, லூசியன் புலத் சிங்கள, , ஜெயந்த டி மென்டிஸ் ஆகிய மூவர் சிங்கள நாடகக் கலைஞர்கள். சிங்கள நாடகத் துறையில் பெரும் பங்களிப்புச்செய்தவர்கள்  அரும்பணியாற்றியவர்கள். ஆற்றிக்கொண்டிருப்பவர்கள்.

தமிழ் நாடகக் கலைஞரான பேராசிரியர் சி மௌனகுருவுக்கும் இது நாள் வரை  அவர் இலங்கைத் தமிழ் நாடகக் கலைக்கு ஆய்வுத் துறையிலும் ஆற்றுகைத்துறையிலும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பெரும் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினர்களாக பிரபல ஊடகவியலாளர் சுனந்த மஹேந்திராவும், பழம் பெரும் சினிமா,நாடக நடிகையும் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில விரிவுரையாளருமான அய்ராங்கனி சேரசின்காவும் கலந்துகொண்டனர்.