உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு

.

வீசும்தென்றல் காற்றுகூட
பிறர்சுவாசம் பெற்றிடத்தான்!
உதிக்கும் சூரியனதுகூட
பிறர்வெளிச்சம் பெற்றிடவே!

மணம்தரும் மலர்கள்கூட
தேன்தந்துதான் உதிர்கிறது!
விழும்மழைத் துளிகள்கூட
விளைச்சலைப் பெருக்கவே!

வளரும் செடிகள்கூட
பிறர்புசிக்க காய்கள்தரும்!
வளர்ந்த மரங்கள்கூட
பறவைகளின் புகலிடமாம்!

பிறருக்கு உதவிடவேநம்
பிறப்பு இருந்திடவேண்டும்!
இறக்கும்போது எல்லோர்மனதிலும்
இடம்பெற்றிருக்க வேண்டும்!

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா.