09/03/2016 மலையகமெங்கும் தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. 
இதனால் மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் போதியளவு நீரின்றி  காணப்படுகின்றது. 
மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென அஞ்சப்படுகின்றது.

இதேவேளை மவுசாகலை நீர்த்தேக்கத்தின்  நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது. 
இதனால் நீர்த்தேக்கத்தில் மூழ்கி இருந்த  ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது மீண்டும் வெளியில் தெரிகின்றது.