10/03/2016 ஈரா­னா­னது இரு புதிய ஏவு­க­ணை­களை புதன்­கி­ழமை ஏவி­ய­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் தெரி­வித்­தது.
அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து புதி­தாக விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­க­ளுக்கு மத்­தியில் நீண்ட தூரம் பய­ணிக்கும் வல்­ல­மையைக் கொண்ட காடர்-–எச் மற்றும் காடர்- –எப் ஆகிய ஏவு­க­ணை­களை ஈரான் ஏவிப் பரி­சோ­தித்­துள் ­ளது.
வட ஈரா­னி­லி­ருந்து தென் கிழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள இலக்­கு­களை சென்று தாக்கும் வகையில் இந்த ஏவு­க­ணைகள் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்­டன.

மேற்­படி ஏவு­க­ணை­க­ளா­னது 1400 மைலுக்கும் அதி­க­மான தூரம் பய­ணித்து உரிய இலக்கைச் சென்று தாக்கக் கூடி­ய­வையாகும். இதையொத்த ஏவு­க­ணை­களை ஏவும் பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முதல்நாள் செவ்­வாய்க்­கி­ழ­மையும் மேற்­கொள்­ளப்­பட்­டன.
இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை குறித்து அந்­நாட்டு புரட்­சி­கர காவல் படையைச் சேர்ந்த பிரதித் தலைவர் ஜெனரல் ஹொஸைன் சலாமி தெரி­விக்­கையில், “ஈரானின் ஏவு­கணைப் பரி­சோ­த­னை­க­ளா­னது அனைத்து இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கும் சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் ஆத­ர­வையும் அதி­கா­ரத்­தையும் பெற்றுத் தரும் என்று கூறினார்.
தமது நாட்டின் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு எந்­நே­ரத்­திலும் பதி­லடி கொடுக்கத் தயா­ராக பெரு­ம­ளவு ஏவு­க­ணை­களின் கையி­ருப்பு தம்­மி­ட­முள்­ள­தாக அவர் கூறினார்.
இதற்கு முன்னர் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனைகளுக்காக அந் நாட்டின் மீது அமெரிக்கா ஒரு தொகை தடைகளை கடந்த ஜனவரி மாதம் விதித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி