மறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.

.


  
நீண்ட காலம் அவுஸ்ரேலியா மெல்பேனில் வாழ்ந்துவந்த இலங்கை எழுத்தாளர் அருண் விஜயராணி அவர்கள் இன்று காலமாகி விட்டார் என்று முருகபூபதி தந்த துயரச்செய்தி நம்மை வாட்டுகின்றது. சமுதாய சீர்கேடுகளை தயங்காது தன் சிறுகதைகள் மூலம் வன்மையாக கண்டித்து வரும் நேர்மையான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளரின் மறைவை கேட்டு  கலங்கி நிற்கிறோம் . கன்னிகாதானங்கள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .