.
உரும்பிராய் தனில்பிறந்து உலகறிய எழுதிநின்றார்
அருண்விஜய ராணியெனும் அழகுமிகு தமிழ்நங்கை
விரும்பியவர் தமிழெடுத்தார் விதம்விதமாய் பலபடைத்தார்
அருந்திநிற்கத் தமிழ்தந்தார் அவரைநாம் காண்பதெப்போ !
எழுதுவதைதன் தவமாய் ஏற்றுநின்ற மங்கைநல்லாள்
எழுதிநின்ற அத்தனையும் எமையெண்ண வைக்கிறது
பழுதில்லா எழுத்தாலே பலபேரின் மனமுறைந்தார்
அழுதுநிற்க வைத்துவிட்டு அவ்வுலகுலகு சென்றதேனோ !
சங்கம் பலவற்றில் தலைமையவர் வகித்தாலும்
இங்கிதமாய் எல்லோரின் இனியநட்புக் கிலக்கானார்
தங்கநிகர் விஜயராணி சபையேறிப் பேசுவதை
எங்குநாம் காண்பதென ஏங்கிநின்று அழுகின்றோமே !
கங்காரு நாட்டினிலே கால்பதித்த நாள்முதலாய்
சிங்கார முகத்தோடு சிறந்தபல பணிசெய்தாய்
உன்காரம் உணர்ந்தவர்கள் உனையுயர வைத்தார்கள்
அன்பான அருணம்மா அழவிட்டுப் போனதெங்கே !
பெண்ணியத்தை ஆதரித்துக் கண்ணியத்தை வளர்த்தவரே
உன்முகத்தைக் காணாது ஓலமிட்டு அழுகின்றோம்
மண்மீது விஜயராணி மறுபடியும் வரவேண்டும்
பெண்ணினமே உன்வரவை பெருமையுடன் பார்க்கிறது !
( எமைவிட்டுப் பிரிந்த மறக்க முடியாத மாண்புடை மங்கை
எழுத்தாளர் அருண்விஜயராணி அவர்களுக்கு எனது கவிதாஞ்சலியைச்
சமர்பித்து அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.)
உரும்பிராய் தனில்பிறந்து உலகறிய எழுதிநின்றார்
அருண்விஜய ராணியெனும் அழகுமிகு தமிழ்நங்கை
விரும்பியவர் தமிழெடுத்தார் விதம்விதமாய் பலபடைத்தார்
அருந்திநிற்கத் தமிழ்தந்தார் அவரைநாம் காண்பதெப்போ !
எழுதுவதைதன் தவமாய் ஏற்றுநின்ற மங்கைநல்லாள்
எழுதிநின்ற அத்தனையும் எமையெண்ண வைக்கிறது
பழுதில்லா எழுத்தாலே பலபேரின் மனமுறைந்தார்
அழுதுநிற்க வைத்துவிட்டு அவ்வுலகுலகு சென்றதேனோ !
சங்கம் பலவற்றில் தலைமையவர் வகித்தாலும்
இங்கிதமாய் எல்லோரின் இனியநட்புக் கிலக்கானார்
தங்கநிகர் விஜயராணி சபையேறிப் பேசுவதை
எங்குநாம் காண்பதென ஏங்கிநின்று அழுகின்றோமே !
கங்காரு நாட்டினிலே கால்பதித்த நாள்முதலாய்
சிங்கார முகத்தோடு சிறந்தபல பணிசெய்தாய்
உன்காரம் உணர்ந்தவர்கள் உனையுயர வைத்தார்கள்
அன்பான அருணம்மா அழவிட்டுப் போனதெங்கே !
பெண்ணியத்தை ஆதரித்துக் கண்ணியத்தை வளர்த்தவரே
உன்முகத்தைக் காணாது ஓலமிட்டு அழுகின்றோம்
மண்மீது விஜயராணி மறுபடியும் வரவேண்டும்
பெண்ணினமே உன்வரவை பெருமையுடன் பார்க்கிறது !
எழுத்தாளர் அருண்விஜயராணி அவர்களுக்கு எனது கவிதாஞ்சலியைச்
சமர்பித்து அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.)