kalam...


.


தெற்கின் விதையாகி
வடக்கே விருட்சமாகி
தமிழரின் புகழை
தரணியெங்கும் நிலைநாட்டியவர்..

குழந்தைகளோடு குழந்தையாய்
மாறி கலக்க அவரால் மட்டுமே
முடியும்..

அரசுப்பள்ளியின் நம்பிக்கைநட்சத்திரம்
கனவு காணச்சொன்னவர்
கனவாய் மாறினார்....

முதியோர்களினால் பயனில்லை என
மாணவர்களைப்பண்படுத்தியவர்..

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தமிழனின் குரலாய் அன்னிய தேசத்தில்
தழைத்தோங்கியத்தலைவா...



அக்னிச்சிறகுகள் உனைத்தழுவிக்கொண்டதோ

உனைப்போல உயர
உன்னதகுழந்தைகளை உருவாக்க
நீயே சாட்சியானாய்...

குழந்தைகளின் முக்கியத்துவத்திற்கும்
கிராமங்களின் உயர்வுக்கும்
காரணமானவரே.....

எளிமைக்கே எளிமையாய் வாழ்ந்தவரே
நீ இருந்தபோது மட்டுமே
குடியரசு மாளிகை பெருமையாலும்
எளிமையாலும் புகழ்பெற்றது,,,

தன் குருவைமறக்காத குருவே
உன் வாழ்க்கையே தமிழருக்கு
வழிகாட்டியாய்,
ஆசிரியராய்,விஞ்ஞானியாய்,
இந்தியாவின் முதல் மகனாய்
வாழ்ந்தவரே...

உங்களின் பிரிவால் கலங்கி நிற்கின்றோம்...அய்யா..

No comments: