பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி
இந்தோனேசிய விமானத்தில் பயணித்த 54 பேரது சடலங்களும் மீட்பு
இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் பெண்கள் படையணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி
பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி
17/08/2015 தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 27 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த இந்து வழிபாட்டுத் தலத்திற்கு பௌத்த மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தரும் இடமாகும்.
சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமான ஒரு இடமாகவும் குறித்த ஆலயம் திகழ்கிறது. நன்றி வீரகேசரி
இந்தோனேசிய விமானத்தில் பயணித்த 54 பேரது சடலங்களும் மீட்பு
19/08/2015 இந்தோனேசியாவின் மலைப் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான திறைகனா விமானசேவை விமானத்தில் பயணம் செய்த 54 பேரினதும் சடலங்கள் மீட்புப் பணியாளர்கால் மீட்கப்பட்டுள்ளன.
பகுதியாக எரிந்து முழுமையாக அழிவடைந்திருந்த அந்த விமானத்தின் சிதைவை தாம் கண்டுபிடித்துள்ளதாக மேற்படி மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் 44 வயதுவந்தவர்களும் 5 சிறுவர்களும் 5 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். அத்துடன் மேற்படி விமானத்தில் 486,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சமூகப் பணிகளுக்கான பணமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. நன்றி வீரகேசரி
இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
19/08/2015 இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜி தனது 74 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சவ்ராவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. அவரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் நேற்று செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
சுர்வாவின் உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.
சுர்வாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தல்கதோராவில் உள்ள பிரணாப்முகர்ஜியின் மகனும் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதேவேளை, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடலுக்கு அதிகளவானோர் அஞ்சலி செலுத்தினர். நன்றி வீரகேசரி
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் பெண்கள் படையணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி
19/08/2015 தமது இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்களை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பழிதீர்க்கும் முகமாக ஈராக்கிய யஸிடி இனத்தைச் சேர்ந்த முன்னாள் பாடகியொருவர் பெண்களை மட்டுமே உள்ளடக்கிய படையணியொன்றை உருவாக்கி தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
ஸேட் ஷின்காலி (30 வயது) என்ற மேற்படி பாடகி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடும் முகமாக 'சண் கேர்ல்ஸ்' (சூரிய பெண்கள் ) என்ற முற்று முழுதாக பெண்களைக் கொண்ட படையணியொன்றை உருவாக்கியுள்ளார்.
அவரது படையணியைச் சேர்ந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் பட்சத்தில் அவர்களால் கொல்லப்படவும் பாலியல் அடிமையாக நடத்தப்படவும் கூடிய அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட ஈராக்கிய பிராந்தியத்தில் யஸிடி இனத்தவர்களது கிராமப்புற பாடல்களைப் பாடுவதில் பிரசித்தி பெற்ற ஷின்காலிக்கு மேற்படி படையணியை ஸ்தாபிப்பதற்கு குர்திஷ் ஜனாதிபதி அங்கீகாரம் அளித்துள்ளார்.
அவரது படையணியில் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 123 பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு வட ஈராக்கின் சின்ஜார் மாகாணத்திலுள்ள கிராமங்களைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் இயஸிடி இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கடத்திச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த பெண்கள்இ தாம் தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டும் அந்த தீவிரவாதிகளை திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
'சண் கேர்ல்ஸ்' படையணியில் அங்கத்துவம் வகிக்கும் இளம் பெண் படைவீரரான ஜேன் பாரெஸ் (17 வயது) விபரிக்கையில்இ ஐ.எஸ். தீவிரவாதிகள் சின்ஜார் பிராந்தியத்தைக் கைப்பற்றிய போது தனது சகோதரனுடன் அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்தார்.
தான் இந்தப் பெண்கள் படையணியில் இணைந்து போராடுவது குறித்து தனது தந்தை பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment