இலங்கை செய்திகள்


106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி

பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த

தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்

மலை­ய­கத்­தி­லி­ருந்து எட்டு தமிழ் பிர­தி­நி­திகள் தெரிவு

தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி


106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்
19/08/2015 நடை­பெற்று முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 106ஆச­னங்­களை பெற்று ஆளும் ஐக்­கிய தேசிய கட்சி வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் 95 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் தோல்­வியை தழு­வியுள்­ளது.



இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்தில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 6ஆச­னங்­க­ளையும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பெற்றுக்­கொண்­டுள்­ளன. அத்­துடன் சிறி­லங்கா முஸ் லிம் காங்­கி­ரஸும் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியும் தலா ஒரு ஆசனம் வீதம் பெற்­றுள்­ளன.
நடந்து முடிந்த தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 5,098,927 (45.66மூ) வாக்­கு­க­ளையும் ஐக்கிய மக் கள் சுதந்­திர முன்­னணி 4,732,669 (42.38மூ) வாக்­கு­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 543,944 (4.87%) வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 515,963 (4.62ம%) வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.
ஈழ மக்கள் ஜன­நா­ய கக் கட்சி 33இ481 (0.30மூ) வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளது. அத்­துடன் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி44,193 (0.40%) வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது.
எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தேசிய பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்சி 13 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 12 ஆச­னங்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 2 ஆச­னங்­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளன.
மாவட்ட ரீதியில் பார்க்­கும்­போது ஐக்­கிய தேசிய கட்சி 11 மாவட்­டங்­களில் வெற்­றி­பெற்­றுள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 8 மாவட்­டங்­களை வெற்­றி­பெற்­றுள்­ள­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 3 மாவட்­டங்­க­ளிலும் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி பொலன்­ன­றுவை, திரு­கோ­ண­மலை, கண்டி, கம்­பஹா, கொழும்பு, கேகாலை, பதுளை, நுவ­ரெ­லியா, மாத்­தளை, திகா­ம­டுல்ல, புத்­தளம் மாவட்­டங்­களில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அம்­பாந்­தோட்டை, காலி, மாத்­தறை, அனு­ரா­த­புரம், குரு­ணாகல், மொன­ரா­கலை, இரத்­தி­ன­புரி, களுத்­துறை, ஆகிய மாவட்­டங்­களில் வெற்­றியை உறுதி செய்­து­கொண்­டுள்­ளது. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பாணம், வன்னி மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.
அந்­த­வ­கையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அறுதிப் பெறும்­பான்­மையை எந்­த­வொரு கட்­சியும் பெறாத நிலையில் தேர்­தலில் கூடிய ஆச­னங்­களை வெற்­றிக்­கொண்­டுள்ள ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளது. அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கு­மான பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.
நடந்து முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் கடும் போட்டி நில­வி­யது. நேற்­றுக்­காலை தேர்தல் முடி­வுகள் வெளி­வ­ரும்­வரை எந்தக் கட்சி வெற்­றி­பெறும் என்ற ஊகிக்க முடி­யா­த­ள­வுக்கு போட்டி காணப்­பட்­டது. எனினும் ஐக்­கிய தேசிய கட்சி 105 ஆச­னங்­களை பெற்று வெற்­றியை தன­தாக்­கிக்­கொண்­டது.
பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றி­ருந்­தனர். எனினும் தேர்­தலில்11684098 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். அவற்றில்517123 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலையில் 11166975 வாக்­குகள் செல்­லு­ப­டி­யா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டன.
12314 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் நடை­பெற்ற தேர்தல் வாக்­க­ளிப்பு நேற்று முன்­தினம் மாலை நான்கு மணிக்கு நிறை­வ­டைந்­தது. 225 உறுப்­பி­னர்கள் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­காக கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டி­ருந்­தனர்.
கொழும்பு மாவட்டம்
ஐக்­கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்­டத்தில் 640,743 வாக்­கு­க­ளையும் 11 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 474,063 வாக்­கு­க­ளையும் 7 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 81,391 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது. கொழும்பு மாவட்­டத்தில் 1586598 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றி­ருந்­தனர். அத்­துடன் 792 பேர் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தனர்.
கம்­பஹா
ஐக்­கிய தேசிய கட்சி கம்­பஹா மாவட்­டத்தில் 577,004 வாக்­கு­க­ளையும் 9 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 549,958 வாக்­கு­க­ளையும் 8 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 87,880 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது. இந்த மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றி­ருந்­தனர்.
களுத்­துறை
ஐக்­கிய தேசிய கட்சி களுத்­துறை மாவட்­டத்தில் 310,234 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 338,801 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 38,475 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது.
கண்டி
ஐக்­கிய தேசிய கட்சி கண்டி மாவட்­டத்தில் 440,761 வாக்­கு­க­ளையும் 7 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 309,152 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 30,669 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
நுவ­ரெ­லியா
ஐக்­கிய தேசிய கட்சி நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 228,920 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 147,348 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 5,590 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
மாத்­தளை
ஐக்­கிய தேசிய கட்சி மாத்­தளை மாவட்­டத்தில் 138,241 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 126,315 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 10,947 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.

பதுளை
ஐக்­கிய தேசிய கட்சி பதுளை மாவட்­டத்தில் 258,844 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி179,459 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 21,445 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
மொன­ரா­கலை
ஐக்­கிய தேசிய கட்சி மொன­ரா­கலை மாவட்­டத்தில் 110,372 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 138,136 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 13,626 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
இரத்­தி­ர­ன­புரி
ஐக்­கிய தேசிய கட்சி இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 284,117 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 323,636 வாக்­கு­க­ளையும் 6 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 21,525 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.

கேகாலை
ஐக்­கிய தேசிய கட்சி கேகாலை மாவட்­டத்தில் 247,467 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 227,208 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 18,184 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
குரு­ணாகல்
ஐக்­கிய தேசிய கட்சி குரு­ணாகல் மாவட்­டத்தில் 441,275 வாக்­கு­க­ளையும் 7 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 474,124 வாக்­கு­க­ளையும் 8 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 41,077 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது. எனினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு எந்த ஆச­னமும் கிடைக்­க­வில்லை.
புத்­தளம்
ஐக்­கிய தேசிய கட்சி புத்­தளம் மாவட்­டத்தில் 180,185 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 153,130 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 12,211 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
அனு­ரா­த­புரம்
ஐக்­கிய தேசிய கட்­சி­அ­னு­ரா­த­புரம் மாவட்­டத்தில்213,072 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 229,856 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 28,701 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
பொலன்­ன­றுவை
ஐக்­கிய தேசிய கட்சி பொலன்­ன­றுவை மாவட்­டத்தில்118,845 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 103,172 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 13,497 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
அம்­பாந்­தோட்டை
அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் . ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 196,980 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்சி 130,433 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 36,527 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
காலி
காலி மாவட்­டத்தில் . ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 312,518 வாக்­கு­க­ளையும் 6 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்சி 265,180 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 37,778 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
மாத்­தறை
மாத்­தறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 250,505 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்சி 186,675 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி 35,270 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.
திகா­ம­டுல்லை
ஐக்­கிய தேசிய கட்சி திகா­ம­டுல்லை மாவட்­டத்தில் 151,013 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 89,334 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. இலங்கை தமி­ழ­ரசு கட்சி 45,421 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்தை பெற்­றுக்­கொண்­டது. அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 33,102 வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆனால் இந்தக் கட்­சி­யினால் எந்­த­வொரு ஆச­னத்­தையும் பெற­வில்லை.
திரு­கோ­ண­மலை
ஐக்­கிய தேசிய கட்சி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 83,638 வாக்­கு­க­ளையும் 2 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி 45,894 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 38,463 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னங்­க­ளையும் பெற்­றது.
யாழ்ப்­பாணம்
யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் இலங்கை தமி­ழ­ரசு கட்சி 207,577 வாக்­கு­க­ளையும் 5 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 30,232 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்­சியும் 20,025 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது.
வன்னி
வன்னி மாவட்­டத்தில் இலங்கை தமி­ழ­ரசு கட்சி 89,886 வாக்­கு­க­ளையும் 4 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 20,965 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்­சியும் 39,513 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது.
மட்­டக்­க­ளப்பு
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இலங்கை தமி­ழ­ரசு கட்சி 127,185 வாக்­கு­க­ளையும் 3 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. முஸ்லிம் காங்­கிரஸ் 38,477 வாக்­கு­க­ளையும்1 ஆச­னங்­க­ளையும் பெற்­றது. ஐக்­கிய தேசிய கட்­சியும் 32,359 வாக்­கு­க­ளையும் 1 ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டது. இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கை­களில் 125000 அரச ஊழி­யர்­களும் வாக்கு எண்ணும் செயற்­பா­டு­களில் 75000 ஈடு­பட்­டனர். அத்­துடன் 70 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பொலி­ஸாரும் தேர்தல் வாக்­க­ளிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி­களில் ஈடு­பட்­டனர்.
30 ஆயிரம் பேர் கண்­கா­ணிப்பில்
தேர்தல் வாக்­க­ளிப்பை கண்­கா­ணிக்கும் செயற்­பா­டு­களில் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் ஈடு­பட்­டனர். பொது­ந­ல­வாய தேர்தல் கண்­கா­ணிப்பு குழு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்பு குழு மற்றும் தெற்­கா­சிய தேர்தல் கண்­கா­ணிப்பு அதி­கா­ர­சபை போன்ற சர்­வ­தேச கண்­கா­ணிப்பு நிறுவனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் இன்று அல்லது நாளை தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளன. பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவின் 9 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். உள்நாட்டு கண்காணிப்பை பொறுத்தவரை பெப்ரல் அமைப்பு 12,314 தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலும் மொத்தமாக 30 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் தேர்தலை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன் நாடளாவிய ரீதியில் 70 வீதமான வாக்களிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் 65 வீதத்தை தாண்டிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. ஆங்காங்ககே சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும் நாடளாவிய ரீதியில் பொதுவாக எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
தேர்தல் வாக்களிப்பை பொறுத்தவரை எந்தவொரு மாவட்டத்திலும் பாரியளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நேற்றுக்காலை 7 மணிமுதல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றதுடன் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர்.   நன்றி வீரகேசரி 







ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

19/08/2015 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதையிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். நன்றி வீரகேசரி 









தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி

19/08/2015 நடந்து முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி படு தோல்­வி­ய­டைந்­துள்­ளது. ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் படு தோல்­வி­ய­டைந்­துள்ளார். 
இம்­முறை கொழும்பு மாவட்­டத்தில் வெறு­மனே 5,238 வாக்­கு­களை மட்­டுமே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது. அது மட்­டு­மன்றி நாட­ளா­விய ரீதி­யிலும் மிகவும் குறைந்­த­ள­வி­லான வாக்­கு­க­ளையே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது.
கம்­பஹா மாவட்­டத்தில் 4,706 வாக்­கு­களை மட்­டுமே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது. அந்த மாவட்­டத்தில் சரத் பொன்­சே­காவின் பாரியார் அனோமா பொன்­சேகா போட்­டி­யிட்­டி­ருந்தார். அவரும் படு­தோல்­வி­ய­டைந்­துள்ளார்.
கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து ஜன­நா­யக தேசியக் கூட்­டணி என்ற பெயரில் போட்­டி­யிட்ட சரத் பொன்­சே­காவின் கட்சி நாட­ளா­விய ரீதியில் ஏழு ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. 110683 வாக்­கு­களை பெற்று இரண்டு ஆச­னங்­களை பெற்­றி­ருந்­தது.
எனினும் இம்­முறை ஒரு ஆச­னத்­தை­யேனும் அக்­கட்­சி­யினால் பெற முடி­ய­வில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலில் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 








பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த

19/08/2015 எனக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி பாராளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தல் நிறைவுற்ற நிலையில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"2015 பொதுத் தேர்தல் முவுகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். 
தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்  எமது கட்சிக்காக படுபட்டு உழைத்த கட்சி ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்தும் செய்வேன் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 










தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்

19/08/2015 வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் உறு­தி­யையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர். அவர்­களின் நம்­பிக்­கை­யையும் விசு­வா­சத்­தையும் எப்­பொ­ழுதும் நாம் காப்­பாற்­றுவோம். நன்றி கூறவும் கட­மைப்­பட்­டுள்ளோம்.என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்தார். "
தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற் றுள்ள வெற்றி தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்­மீது கொண்ட நம்­பிக்­கையை மீண்டும் உலகம் அறிய நிரூ­பித்­துள்­ளார்கள். அவர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க நாம் கட­மைப்­பட்­ட­வர்கள்.
அவர்களின் நம்­பிக்­கையை எப்­பொ­ழுதும் நாம் காப்­பாற்­றியே தீருவோம். வடக்கு கிழக்கில் போட்­டி­யிட்ட மக்கள் செல்­வாக்­கற்ற சில கட்­சி­களின் விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரத்­தி­னாலும் நட­வ­டிக்­கை­ளி­னாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்­கட்­சி­களால் தடைப்­பட்­டு­விட்­டது. நாம் அக்­கட்­சி­களை தமிழ் மக்­களின் நன்மை கருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்­ய­வில்லை. இன்று அவர்கள் எமது மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர்.
நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்­றியைப் பெற்­றுள்­ளது. பெறப்­பட்ட ஆச­னங்­களின் எண்­ணிக்கை எதிர்­பார்த்­த­திலும் பார்க்க சற்று குறை­வாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் உறு­தி­யையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர். தமிழ்க் கூட்டமைப்பை வட – கிழக்கு மக்கள் தங்­க­ளு­டைய நம்­பிக்­கைக்­கு­ரிய பிர­தி­நி­தி­யாக இத்­தேர்­தலில் தெரிவு செய்­தி­ருக்­கின்­றார்கள். இதில் எவ்­வித சந்­தே­கத்­துக்கும் இட­மில்லை. துர­திஷ்­ட­வ­ச­மாக தேர்­த­லுக்கு முன்­பாக சில விஷமத் தன­மான பிர­சா­ரங்கள் எம்­மீது மேற்­கொள்­ளப்­பட்­டன. துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.
இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எமது செயற்­பாட்டைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விட­யத்தில் கால தாமதம் செய்­யாமல் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென்­பது கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மா­னதும் உறு­தி­யா­னது­மான நிலைப்­பா­டாகும். இது விடயம் குறித்து எடுக்க வேண்­டிய முயற்­சி­களை இனி வேக­மாக மேற்­கொள்வோம்.
எம்மை பொறுத்தவரையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக புதிதாக அமை­ய­வி­ருக்கும் அர­சாங்கம் இருக்க வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்­களால் வழங்­கப்­பட்ட ஆணையை தொடரும் வகையில் அமை­ய­வி­ருக்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.
அவ்­வி­த­மான நிலை­மைக்கு நாங்கள் ஆத­ர­வாக இருப்­போ­மென்று கூற முடியும். அமை­ய­வி­ருக்கும் புதிய அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் தீர்க்­க­மான ஒரு அர­சியல் தீர்வை கொண்டு வரு­வ­தற்கு கடு­மை­யான காத்­தி­ர­மான முயற்­சி­களை கால­தா­மதம் இன்றி மேற்­கொள்ள வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்பாகும்.
யாழ். மாவட்­டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆச­னங்­களைப் பெற்று பாரிய சாதனை படைத்­தி­ருக்­கின்ற போதும் 6 ஆச­னங்களை பெறு­வ­தற்­கு­ரிய வாய்ப்பை மிக மிக சொற்­ப­ளவு வாக்­கான 6 வாக்­கு­களால் இழந்­துள்­ளது என்­பது கவலை தரு­கின்ற விடயமாகும். நாம் இவ் விடயம் சம்­பந்­த­மாக தேர்­த­லுக்கு முன்பே கூறி­யுள்ளோம். சிறு கட்­சிகள் அதா­வது ஒரு ஆச­னத்தைக் கூட பெற தகு­தி­யற்ற கட்­சிகள் மக்­க­ளு­டைய செல்­வாக்கைப் பெறாத கட்­சிகள் இவ்­வா­றா­ன­தொரு நிலைக்கு மக்­களைத் தள்­ள­லா­மென முன்பே கூறி­யி­ருந்தோம்.
இதன் கார­ண­மாக மக்­க­ளு­டைய உரி­மைக்கு பாதகம் ஏற்­ப­டு­மெனக் கூறினோம். இக்­கட்­சி­களை தேர்­தலில் இருந்து வில­கும்­படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் வில­க­வில்லை. அடம்­பி­டித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. யாழ்.மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன.
இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்.  நன்றி வீரகேசரி  






மலை­ய­கத்­தி­லி­ருந்து எட்டு தமிழ் பிர­தி­நி­திகள் தெரிவு

19/08/2015  எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்று முடிந்த தேர்தலில் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் விதத்தில் எட்டு பிரதிநிதிகள் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­யுள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் சார் பில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம்,வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் மற்றும் எம்.தில­கராஜ் ஆகி­யோரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் இ.தொ.கா. வின் பொதுச்­செ­ய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான்,தலைவர் முத்­து­சி­வ­லிங்கம் ஆகி­யோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளை மாவட்­டத்தில் இருந்து ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ,தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப தலைவர் அ. அர­விந்த குமார் ஆகி­யோரும் கண்டி மாவட்­டத்தில் இருந்து ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் உப தலைவர் வேலு­கு­மாரும் தெரிவாகியுள்ளனர். அந்தவகையிலேயே மலை­யக தமிழ் பிரதிநிதிகள் எட்டு பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­யுள்­ளனர்.
மேலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஆர்.யோக­ராஜன்,பி.இரா­ஜ­துரை மற்றும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.உத­ய­குமார், எஸ்.சதா­சிவம் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனு­ஷியா சிவ­ராஜா ஆகி­யோர் தோல்வியடைந்துள்ளனர்.
கண்டி மாவட்­டத்தில் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள் சாமி, மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ்.சிவ­ஞானம் , சப்­ர­க­முவ மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான கண­பதி ராம­சந்­திரன் ,அண்­ணா­மலை பாஸ்­கரன் , ஊவா மாகாண சபை உறுப்­பினர் ஆறு­முகம் கணேச மூர்த்தி ஆகிய தமிழ் வேட்­பா­ளர்கள் தோல்­வியை தழு­விக்­கொண்­டனர் .
விருப்பு வாக்­கு­வி­பரம்
நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட தொழி­லாளர் .தேசிய சங்­கத்தின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பழனி திகாம்­பரம் 105528 வாக்­கு­களை பெற்று முத­லி­டத்தில் தெரி­வா­கி­யுள்ளார். இவரை அடுத்து அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் 87375 , எம். தில­கராஜ் 67761 , நவீன் திஸா­நா­யக்க 66716 , கே.கே. பிய­தாச 48365 என்ற அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசிய கட்சியில் தெரிவு செய்யப்பட்டோர் விருப்பு வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.
இதே வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட இ.தொ.கா. பொதுச்­செ­ய­லாளர் ஆறு­முகன் தொண்­ட­மான 61897 ,சீ.பீ ரத்­நா­யக்க 45649 , இ.தொ.க. தலைவர் முத்­து­சி­வ­லிங்கம் 45352 என்ற விருப்பு வாக்கு வித்­தி­யா­சத்­திலும் வெற்­றிப்­பெற்­றுள்­ளனர்.
முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பீ.இரா­ஜ­துரை 28982,ஆர்.யோக­ராஜன் 17225 , மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.உத­ய­குமார் 26025 ,எஸ்.சதா­சிவம் 6747 ,முன்னாள் தழிழ் கல்வி அமைச்சர் அனு­ஷியா சிவ­ராஜா 44809 என்றவாறு விருப்பு வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் தோல்­வியை தழு­வி­யுள்­ளனர்.
இதே வேளை பதுளை மாவட்­டத்தில் தமிழ் வேட்­பா­ளர்­க­ளான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப தலைவர் அ.அர­விந்த குமார் 53 741 , ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் 52378 என்ற ரீதி­யிலும் விருப்பு வாக்­கு­களை பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 200206 என்ற அதிக பட்ச விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் . இதே போன்று ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளரம் முன்னாள் எதிர்கட்சித் தலைருமான நிமல் சிறிபால டி சில்வா 135406 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.   நன்றி வீரகேசரி  








தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி

19/08/2015 நாம் விதைத்­ததை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்­க­ளானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லுக்கு வியாக்­கி­யானம் தெரி­வித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக, மக்­க­ளுக்­கான எமது போராட்டம் பாரா­ளு­மன்­றத்­திற்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்­பொ­ருந்­திய அர­சியல் போராட்­டத்­திற்­கான பலம் உள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
பொதுத் தேர்தல் நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மாக இடம்­பெற்­றது. சில சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றாலும் பொது­வாக அமை­தி­யான தேர்தல் நடை­பெற்­றது.
இதற்­காக தேர்­தல்கள் ஆணை­யாளர் உட்­பட தேர்­தல்கள் திணைக்­கள ஊழி­யர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்­களம் உட்­பட அரச அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் எமது நன்­றி­களை தெரி­விப்­ப­தோடு எமக்கு வாக்­க­ளித்த வாக்­க­ளிக்­காத அனைத்து மக்­க­ளுக்கும் எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறோம்.
கடந்த காலங்­களில் சிறிய பிர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த போதும் மக்­க­ளுக்­காக குரல் கொடுத்தோம்.

நடந்து முடிந்த தேர்­தலில் நாம் எதிர்­பார்த்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­காத போதும் எமக்கு கிடைத்­துள்ள எம்.பி. பத­வி­களை நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­துவோம். தற்­போ­தைய சூழ்­நி­லையில் கூட்­ட­ர­சாங்­கமே அமையப் போகின்­றது. இந்த அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக நாம் இருக்க மாட்டோம்.
பாரா­ளு­மன்­றத்­திற்குள் எதிர்­கட்­சிக்­குள்ள பொறுப்பை நிறை­வேற்­றுவோம். மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் நன்மை வழங்கும் திட்­டங்­களை அரசு கொண்டு வந்தால் ஆத­ரிப்போம். இல்­லா­விட்டால் எதிர்ப்போம். 19 ஆவது திருத்­தத்­திற்கு அமைய அர­சி­ய­ல­மைப்பு சபையில் எமது பங்­க­ளிப்பை பெற முயற்­சித்தால் அதற்கு எமது பங்­க­ளிப்பை வழங்­குவோம்.
அதே­வேளை செயற்­கு­ழுக்­களில் அங்கம் வகிப்­ப­திலும் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் எமது போராட்டம் வெறு­மனே பாரா­ளு­மன்றக் கட்­டி­டத்­திற்குள் மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­டது அல்ல.
அதற்கு வெளியே தொழிற்­சங்கம் மாணவர் சங்கம் என பல்­வேறு வடி­வங்­களில் எமக்கு பரந்­து­பட்ட அர­சியல் பலம் உள்­ளது. இப்­ப­லத்தை நாம் பயன்­ப­டுத்­துவோம்.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சமஷ்டி முறை தொடர்பில் எது­வி­த­மான பிரச்­சி­னையும் தலை தூக்­க­வில்லை.

எனவே அது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையும் இல்லை. நாம் விதைத்ததை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை எனவே எம்மால் அறுவடை செய்ய முடியாமல் போனது. உண்மையை மக்கள் புரிந்து கொள்ளவார்கள் அப்போது நாம் விதைத்ததை அறுவடை செய்வோம் என்றும் அநுர குமார திஸாநாயக தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி  

















No comments: