மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-2 திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம்

.

எம்மைப் பெற்றவர்கள் பெருமையினைப் பேணிடுக
.மொட்டவிழ்ந்து மென்னிதழ் விரிந்;து மலராகும் தாய்மை
சொட்டும் அதன் மீதாக தியாகப் பனி வகிடு மூட்டம்
கட்டவிழ்ந்து காம்பினைத்தக்க கவர்ந்திழுக்கும் தந்தை..
வட்டமிட்டு உடன்பிறந்தோர் மலரும்முகம் பார்க்கும் காலம்!
விடுதலைக்கு விரித்து வைத்த விண்ணப்ப மலர்கள்
படுகிடப்பில் பக்குவமறியா விளை பாதகங்கள் சுழ..
விடுகதைகள் விடுவிக்க விரைந்திட்ட மேலோர் --வீணாகா
மலரும் முகம் காணும் வேளை மெல்லனவே உதிக்கும் !
பெண்களவர் தங்களை விடுவிக்க எழுந்தால் .குமுகாயம்
கண்கட்டு பூட்டுக்கள் சாவியற்றே கழன்று நிலைதேறும்
அன்னையவர் மநுநீதி அவளுள்ளே சரிநிகர் ஆட்சிகொளின்
திண்ணமாய் பூம்பொழுது புலர்திங்கே புத்துணர்வால் நிமிரும் !
மலருவதை தொலைத்தவர்கள் மங்கையர்கள் அல்லவே... -
மானுச நேயமது குடைக்கொன்றின் கீழாக மதியிட்டு சேரின்
தோளோடு சமதோளாக பால்பேத வேற்றுணர்வை துரத்தின்..
தொல்லைகள் தொலைந்தங்கே மலரும்முகம் பார்க்கும்காலம் !
காலத்தால் கனிவாகும் அக-புற காதலது புவிச்சுழல்வில்
கடுகதியாய் வன்முறைகள் வன்புணர்வு காணாத்துப் போகும்
அவலமது மோசடிகள் அந்நியமாய் அகன்று அகலும்..nஐக
அகமதில்ஆன்றோர் சான்றோர் அற்புதமாய் தலையெடுப்பின் !
தலைப்பினைத்தத்தெடுத்து தடைதாண்டி விடையாக..எழுமின்
திகைத்திடும் திமிராக திக்கெட்டும் ஓரே தீர்வாய் !
திருமதி. கோசல்யா  சொர்ணலிங்கம்

No comments: