பொழுதும் மனசும்.

.

சுருண்டு கிடக்கிறது
பொழுதும் மனசும்
கவிழும் ஓடாய்
இருள்.

உரலும் உலக்கையுமாய்
காற்றும் மரங்களும்.

நிலவின் ஒளி
நிசப்தத்தின் மேல்.
இரைச்சலுடன்.

அங்கங்கே
உதிரும் கூடுகள்
இறக்கையடித்தலில்.

துணித்தட்டியாய்
அசையும் குளம்.

இருள் முட்டை
வெளிச்சக்குஞ்சு பொறிக்கும்.

மனமுட்டையில்
உணர்வுக் குஞ்சுகள்
அலகு தீட்டும். 

Nantri Summa

No comments: