பிரதமராக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் மஹிந்தவினால் வெற்றிபெற முடியுமா?
கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது
அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்
அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்
ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்
தெற்காசிய முகநூல் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
பிரதமராக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் மஹிந்தவினால் வெற்றிபெற முடியுமா?
27/07/2015 மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகலில் போட்டியி டுபவர்கள் எவரும் அவருக்கு ஆதரவு வழங்கத் தயாராகவும் இல்லை. அவ்வாறா யின் மஹிந்த எவ்வாறு வெற்றி பெறுவது? கட்சியின் தலைவர் மஹிந்தவை பிரதமராக்கமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில் மஹிந்த எப்படி தேர்தலில் வெற்றிபெறப்போகின்றார்? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.
நாங்கள் புதிய பாதையை நோக்கிப் பயணிக்கின்றோம். புதிய சமூகத்தை கட்டி எழுப்புவதற்குப் புறப்பட்டுள்ளோம். நாட்டை முன்னேற்றி பொது மக்களுடைய கையில் பணபுழக்கத்தை ஏற்ப டுத்தி ஊழலை ஒழித்து நல்லாட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். இதற்காக ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குருணாகல் மாவட்டத்தில் மாவத்தகம தேர்தல் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவத்தகம சாமோதய விளையாட்டு மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனவரி எட்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தினோம். உலகம் ஆச்சரியப்படுமளவுக்கு உலக சம்பிர தாய முறைகளையும் உடைத்து இலங்கை சம்பிரதாய முறைகளை யும் மீறி குருணாகலுக்கு மஹிந்த ராஜபக் ஷ தேர்தலில் போட்டி போட வந்துள்ளார்.
ஜனவரி எட்டாம் திகதி தோல்வியுற்றதைப் போல் மீண்டும் தோல்வியடைபய் போகின்றார். அவருக்கு தற்போது வாக்குகள் இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இல்லை. அவருக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலுள்ளது. அவர் கட்சியின் தலைவர். அவரை பிரதமராக்குவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குரு ணாகலில் போட்டியிடுபவர்கள் எவ ரும் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் இல்லை. அவ்வாறாயின் அவர் எவ்வாறு வெற்றி பெறுவது? கட்சியின் தலைவர் பிரதமர் ஆக்கமாட்டேன் எனக் கூறினால் அவர் எப்படி தேர்லில் வெற்றி பெறப்போகின்றார்?
மஹிந்த ராஜபக் ஷ தலைகீழாய் நின்றாலும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியாது. ஜனவரி எட்டாம் திகதியை விட குறைந்தளவு தான் கிடைக்கப் போகிறது. எதற்கு வாக்குகளை வீண் விரயம் செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையாக மக்களுடைய எதிர்காலமே உள்ளது.
இந்த நாடு உங்களுடைய நாடாகும் என நினைத்துக் கொள்ளுங்கள். அன்று வாக்களித்தவர்கள் கூட இனிமேல் மஹிந்தவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எரிபொருள்களின் விலையைக் குறைக்க முடியாது என்று அன்று கூறினார்கள். நாங்கள் எரிபொருள்களின் விலைகளைக் குறைத்தோம். அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிப்போம் எனக் கூறினோம். அவர்களுடைய சம்பளத்தையும் அதிகரித்தோம். இதுபோல் எங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை உணர்ந்த மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதற்கு தயாராகிக விட்டார்கள். நாங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களில் இவ்வளவு அளப்பரிய சேவைகளை எங்களால் செய்ய முடியும் எனில் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் எத்தனையோ அபிவிருத்தி வேலைகளைச் செய்ய முடியும்.
பாடசாலை விட்டு வெளியேறும் அவர்களுக்கு தொழில் அவசியமாகும். 10 இலட்சம் பேர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 5 ஆண்டுகளில் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.
இதனை இலங்கையினால் மட்டும் தனியே செய்ய முடியாது. வெளிநாட்டவர்களின் உதவி தேவை, அந்த நாட்டவர்களுடைய அனைத்து வகையிலான மூல வளங்களும் கொண்டு நமது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்த வகையிலேயே கணிசமானளவு எமது நாட்டு இளைஞர்களுக்கு தொழில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் கார் உற்பத்தி கைத்தொழில் நிலையத்தை அமைத்து கார்கள் உற்பத்தி செய்வதற்கான வேலைகள் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீன நிறுவனம் வந்து மீண்டும் அம்பாந்தோட்டையிலுள்ள துறைமுகத்தை மீளத் திருத்தியமைத்து செயற்படுத்துவத்கான வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது நாடு நான்கு ஐந்து ஆண்டுகள் செல்லும் போது எமது நாட்டிலிருந்து ஆடைகளை விட கார் உற்பத்தி, ஏற்றுமதி அதி கரிக்கப்பட்டிருக்கும்.
கல்வியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றோம். க.பொ. த.சாதாண தரத்தில் சித்தியடைய வில்லை என்றால் படிப்பை இடை நடுவில் விடத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவுள் ளோம். விளையாட்டுத்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என் றார். நன்றி வீரகேசரி
கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது
28/07/2015 கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயதுடைய உதய குமார் யர்ஷிகா என்ற குழந்தையின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது உறவுக்கார சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நேற்றைய தினம் கிளி நொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியதாகவும் இதன் போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதிவரை அம்மாணவனை அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி குறித்த 3 வயதான யர்ஷிகா என்ற சிறுமி காணாமல் போயிருந்தார். வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் தாயாருடன் குளிக்கச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த சகோதர உறவு முறையிலான ஒருவரால் குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் தாயார் அங்கு சென்று பார்த்த போது அவர் காணாமல் போயிருந்ததாகவும் கிளிநொச்சி பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி குறித்த சிறுமி எலும்புக் கூடாக மீட்கப்பட்டார். யாழ். வைத்தியசாலையில் இது தொடர்பிலான மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிறு மியை இறுதியாக அழைத்துச் சென்ற சகோதர முறை உறவினரான 14 வயது சிறுவனே இரு நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அச்சிறுவனை தடுத்து வைத்து விசாரணை செய்து வந்த கிளிநொச்சி பொலிஸார் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் மன்றின் உத்தரவுக்கு அமைய அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசேட விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்
28/07/2015 மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்
28/07/2015 மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார்.
அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார்.
நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள்.
உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவுத்துக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்
28/07/2015 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இதற்கமைய ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நவீன்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரே இவ்வாறு சுதந்திரக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தெற்காசிய முகநூல் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
30/07/2015 முகநூல் சமூக வலைதளத்தின் தெற்காசியாவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment