இலங்கைச் செய்திகள்


பிர­த­ம­ராக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் மஹிந்­த­வினால் வெற்­றி­பெற முடி­யுமா?

கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது

அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்

தெற்காசிய முகநூல் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு




பிர­த­ம­ராக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் மஹிந்­த­வினால் வெற்­றி­பெற முடி­யுமா?


27/07/2015 மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். குரு­நா­கலில் போட்­டியி­ டு­ப­வர்கள் எவரும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ரா­கவும் இல்லை. அவ்­வா­றா யின் மஹிந்த எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் மஹிந்தவை பிரதமராக்கமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில் மஹிந்த எப்­படி தேர்தலில் வெற்றிபெறப்­போ­கின்றார்? என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.
நாங்கள் புதிய பாதையை நோக்கிப் பய­ணிக்­கின்றோம். புதிய சமூ­கத்தை கட்டி எழுப்­பு­வ­தற்குப் புறப்­பட்­டுள்ளோம். நாட்டை முன்­னேற்­றி பொது மக்­க­ளு­டைய கையில் பணபுழக்­கத்தை ஏற்­ப­ டுத்­தி ஊழலை ஒழித்து நல்­லாட்­சியை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்ளோம். இதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­பெறச் செய்­யுங்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
குரு­ணாகல் மாவட்­டத்தில் மாவத்­த­கம தேர்தல் தொகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மாவத்­த­கம சாமோ­தய விளை­யாட்டு மைதா­னத்தில் இந்த கூட்டம் நடை­பெற்­றது.
அவர் தொடர்ந்து பேசு­கையில்,
நாங்கள் எல்­லோரும் சேர்ந்து ஜன­வரி எட்டாம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­பெறச் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தினோம். உலகம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­ம­ள­வுக்கு உலக சம்­பி­ர தாய முறை­க­ளையும் உடைத்து இலங்கை சம்­பி­ர­தாய முறை­க­ளை யும் மீறி குரு­ணா­கலுக்கு மஹிந்த ராஜ­பக் ஷ தேர்­தலில் போட்டி போட வந்­துள்ளார்.
ஜன­வரி எட்டாம் திகதி தோல்­வி­யுற்­றதைப் போல் மீண்டும் தோல்­வி­யடைபய் போகின்றார். அவ­ருக்கு தற்­போது வாக்­குகள் இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் இல்லை. அவ­ருக்கு தலை­மைத்­துவம் வழங்க வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் கையி­லுள்­ளது. அவர் கட்­சியின் தலைவர். அவரை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். குரு ணா­கலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் எவ ரும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயார் இல்லை. அவ்­வா­றாயின் அவர் எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் பிர­தமர் ஆக்­க­மாட்டேன் எனக் கூறினால் அவர் எப்­படி தேர்லில் வெற்றி பெறப்­போ­கின்றார்?
மஹிந்த ராஜ­பக் ஷ தலைகீழாய் நின்றாலும் இந்தப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெல்ல முடி­யாது. ஜன­வரி எட்டாம் திக­தியை விட குறைந்­த­ளவு தான் கிடைக்கப் போகி­றது. எதற்கு வாக்­கு­களை வீண் விரயம் செய்ய வேண்டும். மக்­க­ளுக்கு தேவை­யாக மக்­க­ளு­டைய எதிர்­கா­லமே உள்­ளது.
இந்த நாடு உங்­க­ளு­டைய நாடாகும் என நினைத்துக் கொள்­ளுங்கள். அன்று வாக்­க­ளித்­த­வர்கள் கூட இனிமேல் மஹிந்­த­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள். எரி­பொ­ருள்­களின் விலையைக் குறைக்க முடி­யாது என்று அன்று கூறி­னார்கள். நாங்கள் எரி­பொ­ருள்­களின் விலை­களைக் குறைத்தோம். அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சம்­பள உயர்வு அதி­க­ரிப்போம் எனக் கூறினோம். அவர்­க­ளு­டைய சம்­ப­ளத்­தையும் அதி­க­ரித்தோம். இதுபோல் எங்­க­ளு­டைய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இதனை உணர்ந்த மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு தயா­ரா­கிக விட்­டார்கள். நாங்கள் 100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் ஆறு மாதங்­களில் இவ்­வ­ளவு அளப்­ப­ரிய சேவை­களை எங்­களால் செய்ய முடியும் எனில் நாங்கள் வெற்­றி­பெறும் பட்­சத்தில் எத்­த­னையோ அபி­விருத்தி வேலை­களைச் செய்ய முடியும்.
பாட­சாலை விட்டு வெளி­யேறும் அவர்­க­ளுக்கு தொழில் அவ­சி­ய­மாகும். 10 இலட்சம் பேர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம். 5 ஆண்­டு­களில் இதனை நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டுவோம்.
இதனை இலங்­கை­யினால் மட்டும் தனியே செய்ய முடி­யாது. வெளிநாட்­ட­வர்­களின் உதவி தேவை, அந்த நாட்­ட­வர்­க­ளு­டைய அனைத்து வகை­யி­லான மூல வளங்­களும் கொண்டு நமது இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வகை­யி­லேயே கணி­ச­மா­னளவு எமது நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம்.
100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் குளி­யாப்­பிட்­டி­யவில் கார் உற்­பத்தி கைத்­தொழில் நிலை­யத்தை அமைத்து கார்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான வேலைகள் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
சீன நிறு­வனம் வந்து மீண்டும் அம்­பாந்­தோட்­டை­யி­லுள்ள துறை­மு­கத்தை மீளத் திருத்­தி­ய­மைத்து செயற்­ப­டுத்­து­வத்­கான வேலைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்றன. எமது நாடு நான்கு ஐந்து ஆண்டுகள் செல்லும் போது எமது நாட்டிலிருந்து ஆடைகளை விட கார் உற்பத்தி, ஏற்றுமதி அதி கரிக்கப்பட்டிருக்கும்.
கல்வியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றோம். க.பொ. த.சாதாண தரத்தில் சித்தியடைய வில்லை என்றால் படிப்பை இடை நடுவில் விடத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவுள் ளோம். விளையாட்டுத்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என் றார்.   நன்றி வீரகேசரி 






கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது

28/07/2015 கிளிநொச்சி - உருத்­திரபுரம் பகு­தியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்­டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வய­து­டைய உதய குமார் யர்­ஷிகா என்ற குழந்­தையின் மர்ம மரணம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் அவ­ரது உற­வுக்­கார சகோ­தரன் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

14 வய­து­டைய மாணவன் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவரை நேற்­றைய தினம் கிளி நொச்சி நீதிவான் நீதி­மன்றில் பொலிஸார் ஆஜர்­ப­டுத்­தி­ய­தா­கவும் இதன் போது எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திக­தி­வரை அம்­மா­ண­வனை அச்­சு­வேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி குறித்த 3 வய­தான யர்­ஷிகா என்ற சிறுமி காணாமல் போயி­ருந்தார். வீட்­டுக்கு அருகே உள்ள குளத்தில் தாயா­ருடன் குளிக்கச் சென்ற போது மோட்டார் சைக்­கிளில் வந்த சகோ­தர உறவு முறை­யி­லான ஒரு­வரால் குளத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் பின்னர் தாயார் அங்கு சென்று பார்த்த போது அவர் காணாமல் போயி­ருந்­த­தா­கவும் கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு அளிக்­கப்­பட்ட முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
இந் நிலை­யி­லேயே கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி குறித்த சிறுமி எலும்புக் கூடாக மீட்­கப்­பட்டார். யாழ். வைத்­தி­ய­சா­லையில் இது தொடர்­பி­லான மேல­திக பரி­சோ­த­னைகள் இடம்­பெற்று வரும் நிலையில் சிறு மியை இறு­தி­யாக அழைத்துச் சென்ற சகோ­தர முறை உற­வி­ன­ரான 14 வயது சிறு­வனே இரு நாட்­க­ளுக்கு முன்னர் சந்­தே­கத்தில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.
அச்­சி­று­வனை தடுத்து வைத்து விசா­ரணை செய்து வந்த கிளிநொச்சி பொலிஸார் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­துடன் மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசேட விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 








அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

28/07/2015 மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 










அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

28/07/2015 மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார்.

அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார்.
நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள்.

உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். 
உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவுத்துக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி










ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்

28/07/2015   ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து ஹிருணிகா பிரே­மச்­சந்­திர  உட்பட 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
 
இதற்கமைய ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நவீன்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரே இவ்வாறு சுதந்திரக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி









தெற்காசிய முகநூல் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

30/07/2015 முகநூல் சமூக வலைதளத்தின் தெற்காசியாவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி





No comments: