துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி

.


துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடன நிகழ்ச்சி 25.07.2015 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 

துபாய் இந்திய துணைத் தூதரகம் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திர தனுஷ் என்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. 10-ஆவது முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரிபுராவின் தெய்வீக பெண்மையான பாலதேவி சந்திரசேகர் பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். துவக்கமாக குத்துவிளக்கினை அவர் ஏற்றி வைத்தார். 

நடன நிகழ்ச்கிக்குப் பின்னர் பாலதேவி சந்திரசேகருக்கு இந்திய துணைத் தூதரக கலாச்சார அதிகாரியும், ஹெச்.ஓ.சியுமான தீபா ஜெயின் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் துணைத்தூரக அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 





No comments: