200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

.
news
யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார்.

யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனை வெகு சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான ஒரு வருடமும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்து, நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி அன்று பாரிய நடைபயணம் ஒன்றினையும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த பண்புகளையும், சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன், அந்த நடை பயணத்தினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நடை பயணத்தின் மூலம் மத்திய கல்லூரியின் பெருமையும், பண்புகளையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.
Nantri 

onlineuthayan.com

No comments: