இலங்கைச் செய்திகள்


தேர்தலில் சந்திரிகா

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்பு

ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : டேவிட் கமரூன் வலியுறுத்தல்

அர்ஜுன மகேந்திரனிடம் ஆறரை மணி நேரம் விசாரணை




தேர்தலில் சந்திரிகா

15/04/2015 எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது. இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உட்­பட குழு­வினர் கடந்த காலங்­களில் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­த­தோடு, மஹிந்­த­விற்கு ஆத­ர­வாக பொது கூட்­டங்­க­ளையும் நடத்­தி­யோடு மஹிந்­தவும் ஜனா­தி­பதி தேர்­தலின் தோல்­விக்கு பின்னர் ஒதுங்­கி­யி­ருக்­காது விகா­ரை­களில் நடை­பெறும் விழாக்­க­ளிலும் மற்றும் மத அனுஷ்­டா­னங்­க­ளிலும் கலந்­து­கொண்­ட­தோடு அவ்­வப்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்டார்.
கொழும்பு நாரன்­ஹேன்­பிட்டி அப­ய­ராம விகா­ரையில் மஹிந்­த­வுக்கு என தனி­யான அலு­வ­ல­கமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மறு­புறம் ஏ.எஸ்.பி. லிய­ன­கே­வுக்கு சொந்­த­மான பீகொக் மாளி­கை­யையும் மஹிந்த தங்­கு­வ­தற்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு அங்கு தற்­போது யாகங்­களும் நடை­பெற்­றுள்­ளன.
இவ்­வாறு மீள அர­சியல் பிர­வே­ச­வத்­திற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரும் சூழ் நிலை­யி­லேயே, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கும் 19ஆவது திருத்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அரசு முன்­வைத்­தது.
இதற்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்­பாக அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஹெல உறு­மய மற்றும் சுதந்­திர கட்­சியின் சிலரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிலரும் முரண்­பா­டுகள் தலை­தூக்­கின.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும்இஜே.வி.பி.யும் இதற்கு ஆத­ரவை வெளி­யிட்­டன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவு 19 க்கு ஆத­ரவு வழங்கா விட்டால் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­வித்தார்.
இதன் பின்னர் கல­வ­ர­ம­டைந்த சுதந்­திர கட்­சி­யினர் ஜனா­தி­ப­தியை சந்­தித்து 19 க்கு ஆத­ரவு தெரி­விக்­கவும் அத்­தோடு 20 ஆவது திருத்­த­மாக தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தையும் கொண்டு வந்து நிறை­வேற்ற இணக்கம் தெரி­வித்­தனர்.
ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொது செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான சம்­பிக்­கவும் திருத்­தங்­க­ளு­ட­னான ஆத­ர­வுக்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.
இவ்­வா­றா­னதோர் நிலை­யி­லேயே மஹிந்­தவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தோடு பொது தேர்­தலில் சுதந்­தி­ர­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா போட்­டி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­து.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் புதிய அணி­யொன்றை உரு­வாக்கி பொதுத்­தேர்­தலில் கள­மி­றங்க மஹிந்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அத்தோடு பீகொக் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்கும் ஏ.எஸ்.பி. லியனகே தனது கட்சியான இலங்கை தொழிலாளர் கட்சியை மஹிந்தவுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் திகதிகளில் 19 ஆவது 20 ஆவது திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடுவதோடு தேர்தல் திருவிழாவும் ஆரம்பமாகி விடும்.  நன்றி வீரகேசரி 





இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறப்பு

15/04/2015 இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது.

கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியபாரா  முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது “வுளு” செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த  நூதனசாலையை பெரும் எண்ணிக்கையிலான உள்ளுார்  மற்றும் வெளியூர் மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி








முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். 

இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை  862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன்  488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி







யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்பு

16/04/2015 யாழ்ப்பாணம்- பண்டத்தரிப்பு  பகுதியிலிருந்து 10 கிலோகிராம் கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே பொலிஸார் குறித்த கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 25 இலட்சம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நன்றி வீரகேசரி







ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : டேவிட் கமரூன் வலியுறுத்தல்

16/04/2015 ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை தொடர்பில் மேற்­கொண்­டு­வ­ரு­கின்ற விசா­ரணை செயற்பாட்­டுக்கு இலங்கை முழு­மை­ யான ஆத­ரவை வழங்­க­வேண் டும் என்று பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்­துள்ளார்.

கடந்­த­கால விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிரிட்டன் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

சிங்­கள மற்றும் தமிழ் புத்­தாண்டை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயேபிரிட்டன் பிர­தமர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
இலங்­கையின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நான் கடந்த மாதம் சந்­தித்­த­போது கடந்த கால செயற்­பா­டு­களை ஆராய்­வ­தற்­காக முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டேன். 
ஆனால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை தொடர்பில் மேற்­கொண்­டு­வ­ரு­கின்ற விசா­ர­ணை­க­ளுக்கு இலங்கை முழு­மை­யான ஆத­ரவை வழங்­க­வேண்டும் என்ற விட­யத்­திலும் நான் தெளி­வாக இருந்தேன்.
இந்த புத்­தாண்­டா­னது இலங்­கையின் சமூ­கங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­துடன் கடந்­த­கால காயங்­களை ஆற்றும் என்று நம்­பு­கின்றோம். இதே­வேளை பிரிட்­டனின் தொழில் கட்சி தலைவர் எட் மிலிபேன்ட் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என்றும் அதற்­காக அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள புத்­தாண்­டுக்­கான வீடியோ வாழ்த்து செய்­தியில் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது.
இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்­துக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிப்போம். தொழில் கட்­சி­யா­னது எப்­போதும் தமிழ் மக்­களின் நண்­ப­னா­கவே இருந்­துள்­ளது.
அவ்­வாறே தொடர்ந்து இருப்போம். மேலும் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் நம்­ப­க­ர­மான சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம். அதற்­காக அழுத்தம் பிர­யோ­கிப்போம்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனை வலியுறுத்தியிருந்தேன். தமிழ் மக்களுக்கான எமது பொறுப்பு என்ன என்பது தொழில் கட்சியாகிய எங்களுக்கு தெரியும்.  நன்றி வீரகேசரி








அர்ஜுன மகேந்திரனிடம் ஆறரை மணி நேரம் விசாரணை

17/04/2015 மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ர­னிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு விஷேட விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்து வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்­துள்­ளது.

நேற்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு­வுக்கு அழைக்­கப்­பட்ட அர்ஜுன மகேந்­திரன் அங்கு வைத்து சுமார் ஆறரை மணி நேரம் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழுவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.
திறைசேரி முறிகள் மோசடி விவ­காரம் தொடர்பில் நேற்று காலை 9.00 மணி முதல் பிற்­பகல் 3.30 மணி வரை இந்த விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக் குழு­வுக்கு திறை­சேரி முறி மோசடி தொடர்பில் கிடைக்கப் பெற்­றி­ருந்த முறைப்­பா­டொன்றை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டுள்ள நிலை­யி­லேயே நேற்­றைய தினம் மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.
தனது மரு­ம­க­னுக்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றுக்கு அர்ஜுன மகேந்­திரன் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் திறை­சேரி முறிகள் பத்­தி­ரங்­களை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அதன்­போது, சலுகை அடிப்­ப­டையில் சிறப்பு வட்டி வீதங்கள் அளிக்­கப்­பட்­டமை ஒரு மோசடி நட­வ­டிக்கை என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே நேற்­றைய தினம் இலஞ்ச ஊழல் திணைக்­கள தலை­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டார்.
இத­னை­விட மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் விடு­மு­றையில் உள்ள நிலையில் கடந்த இரு வாரங்­க­ளாக அவ­ரது வெளி நாட்டு கடவுச் சீட்டும் முடக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.   நன்றி வீரகேசரி

No comments: