பங்களாதேஷில் பெற்றோல் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி
ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் : 14 பேர் பலி
டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி
சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லையில் பூமியதிர்ச்சி
பங்களாதேஷில் பெற்றோல் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி
09/02/2015 பங்களாதேஷில்
பஸ்ஸொன்றின் மீதும் டிரக் வண்டியொன்றின் மீதும் பெற்றோல் குண்டுகளை
வீசி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 9 பேர்
பலியானதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக
அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் 70 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலின் ஆண்டு தினத்தையொட்டி பொது பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றுக்கு எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
அந்தத் தேர்தலை பங்களாதேஷ் தேசிய கட்சி பகிஷ்கரிப்புச் செய்திருந்தது.கயிபண்டாவாலிருந்து டாக்காவை நோக்கிச் சென்ற பஸ் மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் பரிஸல் மாவட்டத்தில் டிரக் வண்டியொன்றை இலக்கு வைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. நன்றி வீரகேசரி
கடந்த மாதம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் 70 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலின் ஆண்டு தினத்தையொட்டி பொது பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றுக்கு எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
அந்தத் தேர்தலை பங்களாதேஷ் தேசிய கட்சி பகிஷ்கரிப்புச் செய்திருந்தது.கயிபண்டாவாலிருந்து டாக்காவை நோக்கிச் சென்ற பஸ் மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் பரிஸல் மாவட்டத்தில் டிரக் வண்டியொன்றை இலக்கு வைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. நன்றி வீரகேசரி
ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் : 14 பேர் பலி
09/02/2015 வட ஈராக்கில் தற்கொலை குண்டுதாரியொருவர் நடாத்திய தாக்குதலில் 14 பேர் பலியானதுடன் 43 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கதிமியஹ் பிரதேசத்தில் அடென் சதுக்கத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அண்மையில் வந்து தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச்செய்துள்ளார்.
இது அந்நாட்டு தலைநகரில் 3 நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலாகும். நன்றி வீரகேசரி
கதிமியஹ் பிரதேசத்தில் அடென் சதுக்கத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அண்மையில் வந்து தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச்செய்துள்ளார்.
இது அந்நாட்டு தலைநகரில் 3 நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலாகும். நன்றி வீரகேசரி
டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி
11/02/2015 இந்தியாவின்
டில்லி மாநிலத்தின் சட்டப்பேர வைக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை
கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் அரவிந்த கெஜ்ரிவால் மீண்டும்
டில்லி முதல்வராகின்றார்.
டில்லி சட்டப் பரேவையில் மொத்தமாக காணப்படும் 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் டில்லியில் ஆட்சியமைக்கின்றது. இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் 31583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் 57213 வாக்குகளை பெற்று இத் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் நுபுர் சர்மாவிற்கு 25630 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கிரண் வாலியாவிற்கு 4781 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன.இதன் மூலம் டில்லியின் அடுத்த முதல்வராக கெஜ்ரிவால் எதிர்வரும் 14 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
டில்லி சட்டபேரவை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதன்போது எதிர்பார்ப்புகளை விட அதிகமான இடங்களை பெற்ற ஆம் ஆத்மி இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது
இதேவேளை இத்தேர்தலில் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிரண் பேடி தோல்வியை தழுவியுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான வழக்கறிஞர் எஸ்.கே. பக்காவிடம் 2277 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். பக்காவுக்கு 65919 வாக்குகளும், கிரண் பேடிக்கு 63642 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பன்சிலாலுக்கு 6189 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அமைத்த 49 நாட்களுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ஆம் திகதி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த பெப்ரவரி 14 ஆம் திகதியில் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். நன்றி வீரகேசரி
டில்லி சட்டப் பரேவையில் மொத்தமாக காணப்படும் 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் டில்லியில் ஆட்சியமைக்கின்றது. இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் 31583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் 57213 வாக்குகளை பெற்று இத் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் நுபுர் சர்மாவிற்கு 25630 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கிரண் வாலியாவிற்கு 4781 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன.இதன் மூலம் டில்லியின் அடுத்த முதல்வராக கெஜ்ரிவால் எதிர்வரும் 14 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
டில்லி சட்டபேரவை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதன்போது எதிர்பார்ப்புகளை விட அதிகமான இடங்களை பெற்ற ஆம் ஆத்மி இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது
இதேவேளை இத்தேர்தலில் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிரண் பேடி தோல்வியை தழுவியுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான வழக்கறிஞர் எஸ்.கே. பக்காவிடம் 2277 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். பக்காவுக்கு 65919 வாக்குகளும், கிரண் பேடிக்கு 63642 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பன்சிலாலுக்கு 6189 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அமைத்த 49 நாட்களுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ஆம் திகதி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த பெப்ரவரி 14 ஆம் திகதியில் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். நன்றி வீரகேசரி
சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லையில் பூமியதிர்ச்சி
12/02/2015 சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லைப்பிராந்தியத்தில் 6.7 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி நேற்று இரவு தாக்கியுள்ளது.
ஆர்ஜென்டீனாவின் அகுயிலா நகரின் மேற்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் 190 கிலோ மீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment