புலம் பெயந்த நாடுகளில் கலை கலாச்சாரம் பேணுவதில் தமிழர்கள் எதிர் நோக்கும் நடை முறைசிக்கல்கள்

.
இக்கட்டுரை ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சமர்பிக்கப்பட்டதன்சுருக்கம் 
கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் நிவாசினி சுப்ரமண்யன்
இன்று உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய ஐம்பது நாடுகளில் எழுபது மில்லியன் தமிழர்கள்புலம் பெயந்து கால்பதித்து இருக்கிறார்கள்சென்ற இடமெல்லாம் மொழிபண்பாடு,பாரம்பரியம் கலாச்சார விழுமியங்களை பேணுவதற்கு அவர்கள் தவறுவதில்லைதொழில்,கல்விவாணிபம்அடிமைத் தொழில் மற்றும் உள் நாட்டு போர் போன்ற காரணங்களுக்காகசொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்து உலகின் பல்வேறு பாகங்களிற்கும் தமிழர்கள்சென்றுள்ளனர்.இப்படி உலக சக்தியாக விளங்கும் தமிழினம் தனது பாரம்பரியத்தையும் ,கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கைப் பிடித்துத்தர விழைகிறதுஆனால் அதில்அவர்கள் எதிர் நோக்கும் நடை முறைசிக்கல்கள் எண்ணற்றவை.
தமிழ் மொழிகலாச்சாரம்பண்பாடு பேணுதலில் தமிழர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்
1.            நடைமுறைத் தமிழ் பயிற்றல்
2.            வாரம் ஒருமுறையே தமிழ்கலை பயிற்சிகள் நடப்பதனால் கால இடைவெளியும்,அதிக நேரம் (4 மணித்தியாலம் ) நடப்பதனால் இளையோர் கட்டாயப்படுத்தப்படுவதாக ஓர்உணர்வை ஏற்படுத்தி அவர்கள் ஆர்வம் குறைகிறது.


3.            இளையோர் அன்றாட வாழ்வில் அதிக அளவில் ஆங்கிலப் பேச்சில் ஈடுபடுவதால் தமிழ்சார்ந்து கலைகளைக் கற்றலிலும்கற்பித்தலிலும் சிரமம் ஏற்படுகின்றது.
4.            மொழிப்புரிந்துணர்வு குறையும் போது பொருள் உணர்ந்து கற்றல்வெளிப்படுத்தல்சிக்கலாகிறது.
5.            பலருக்கு ஆர்வம் இல்லாமல் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவே பயிற்சிக்குவருகின்றனர்.
6.            இரு/பல் கலாச்சார சம நிலைப் பேணலில் தனி நபர் சூழ்நிலை சார்ந்துவாழ்க்கைக்குதேவையானதை தேர்ந்தெடுக்கத் தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வருதல்.
7.            பணிவாழும் சூழ்நிலைகள் கலாச்சார பேணலுக்கு சாதகமாக இல்லாமை.
8.            இனவாதம் , இனம் சார்ந்த கொடுமைகளை சந்திக்கும் வேளையில் கலாச்சாரஅடையாளங்களைப் பேணமுடியாமை.
9.            தமிழ் கலை கலாச்சாரம் வளர்க்க,  பின்பற்றக்கூடிய சாதகமான பின் புலம் இல்லாதஇடங்களில் இருத்தல்.
10.          இளையோர் தாமாகவே தமது கலாச்சாரம் விட்டு விலகிச் செல்லுதல்.
11.          வேறு கலாச்சார பின்னணி கொண்டோருடன் திருமணம் மற்றும்  உறவில்ஈடுபடுவதால் வேறுகலப்பு கலாச்சாரத்தை தழுவுதல்.
12.          தமிழை சரளமாகப் பேசுவதற்கும் ,வாசிப்பதற்கும் தடுமாறுவதால் அச்சு ஊடகம்இளையோரைக் கவர்வதில்லை
13.          வேறு கலாச்சாரம் சார்ந்த கலைகளில் ஈடுபாடு வளர்வது.
14.          புதிய கலாச்சாரம் சார்ந்து  இளையோரின் அணுகுமுறைகள் தமது கலாச்சாரவிழுமியங்களை நிராகரிப்பது.
15.          தமது கலாச்சாரம் தொடர்பான கட்டாயப்படுத்தலால் வரும் வெறுப்பு
16.          தமது கலாச்சாரம் தொடர்பான புரிந்துணர்வு இன்மை.
17.          தமது கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் ஆர்வம் குறைதல் –அதிகமாகத் திணிக்கப்படுவதால் அல்லது அல்லது  அறிமுகமின்மை காரணமாக.
18.          பெற்றோர் கலாச்சார விழுமியங்களை பின்பற்றாத காரணம்
19.          தொலைகாட்சி கலாச்சார பரப்புதலுக்கு உதவியாக இருந்தாலும் , இளையோர் தமிழ்பேசுவதில் உள்ள தடுமாற்றம் தடையாக இருக்கிறது.இது வானொலிக்கும் பொருந்தும்.
20.          இளையோர் தமிழை சரளமாக படிக்க எழுத  முடியாத காரணத்தினால் அச்சுஊடகங்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும்.(படித்தல்பங்களித்தல்)
21.          தமிழ் திரைப்படங்கள் , இப்போது வரவேற்பில் இருந்தாலும் அடுத்ததலைமுறையினரைக் கவர்வதில்லை.
22.          சமூக வலைத் தளங்கள் , இணைய தளங்கள் , வலைப்பூக்கள் மூலம் தமிழ்செயல்பாடுகள்-  தமிழில் தொடர்பாட எழுத்து மொழி அவசியம்.
23.          நூல்கள் வெளிட்யிடப்படுகின்றனஆனால் அடுத்த தலைமுறையினர் இலக்கு அல்ல.

பரிந்துரைகள்
1.            மொழியின் பயன்பாடு தொடர்பான சரியான புரிந்துணர்வை கற்பித்தலில் ஈடுபடுத்தவேண்டும்.
2.            தமிழில் பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும்.
3.            எளியநடைமுறைத்தமிழ்,  பயன் பாட்டுத்தமிழ் தமிழ் கற்பித்தலில்  நோக்கமாகஇருக்கவேண்டும்.தொன்மையை பாதுகாக்க தேவைதான்ஆனால்முதலில் அடிப்படையைநடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
4.            கலாச்சாரம்மொழி தொடர்பாக  பெற்றோருக்கு  வேறுபட்ட கருத்துக்கள் இருந்தால்விலக்கி அவற்றின்  முக்கியத்துவத்தை உணர்ந்து இளையவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
5.            கடும் மொழியில் இல்லாமல் இலகு தமிழில் உள்ளடக்கம் உள்ள அச்சுஇணையபடைப்புக்கள் தேவை.
6.            இளையவர்களுக்கு ஆர்வமூட்டும் பொருளில்  ஊடகஇணைய படைப்புக்கள் தேவை.
7.            இளையோருக்கு ஆர்வமூட்டுவதாக தமிழ் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
8.            மொழி வித்தியாசம் குறைக்கப்படவேண்டும் – இலங்கை – இந்திய தமிழ் வேறுபாடு.
9.            தமிழ் கல்வி நிலையங்கள்  கற்றுத் தருவதை வீட்டில் பயன்படுத்தும் சூழ்நிலையைஉருவாக்கித்தர மொழி வளம் செறிந்த இல்லங்கள் தேவை.
10.          தமிழ் நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
11.          இணையம் சார்ந்த பங்களிப்பில் இளையோர்  ஊக்குவிக்கப்படவேண்டும்.  வயது சார்ந்தவிடயங்கள் சேர்க்கப்படலாம்.அதற்கு நகைச்சுவை துணுக்குகள்சிறிய கவிதைகள்ஆரம்பமாக இருக்கலாம்.
12.          மொழிகலாச்சாரத்தின்  தொன்மையை மட்டுமே பேசுவதைவிட்டு எதிர்காலத்தில்நடைமுறையில் அவற்றை பயன்படுத்தி பராமரிக்கத்தக்க வகையில் தமிழ்ஊட்டப்படவேண்டும்.

மேற்படி முயற்சிகள் தமிழையும் கலாச்சாரத்தையும் கற்றல்பயன்படுத்தல் , கற்பித்தல்மற்றும் பராமரித்தலுக்கு வழிவகுக்கும்.
கலாச்சாரமும் மொழியும் பிணைந்தே செயல்படுவதால் மொழி சார்ந்த தளத்திலேயேகலாச்சாரமும் பயணிக்கின்றதுபிறமொழி மற்றும் கலாச்சாரத்தைத் தாண்டி தமிழ்மொழியையும் கலாச்சாரத்தையும் பேணுவது மிகச் சிக்கலான ஒன்றேஎளியநடைமுறையுடன் ஒன்றிய மொழிப்பயிற்சியும்வாழ்வுடன் தொடர்புறும் கலாச்சாரஅனுபவமுமே புலம் பெயந்த நாடுகளில் தமிழர்களின் கலை , பண்பாடு  மற்றும் கலாச்சாரம் பேணுவதில் எதிர் நோக்கும் நடை முறை சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

பின்குறிப்புஇக்கட்டுரையில்,  சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக சேகரிக்கப்பட்டதகவல்கள்ஒரு தமிழ் கல்விக்கூட ஆசிரியர்இளைய தலைமுறையில் இருந்து தமிழ்வளர்க்க உதவிய ஒருவர்மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டவை.

No comments: