உலகச் செய்திகள்



கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு

மத்தியதரைக்கடலை கடந்து இத்தாலி செல்ல முயற்சித்த 2,000 குடியேற்றவாசிகள் மீட்பு

எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு தீபற்றியது..!

பாகிஸ்தானில் பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பேர் எரியூட்டப்பட்டு படுகொலை


கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு

16/02/2015 எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிணைக் கைதிகள் 21 பேரை வரிசையாக வைத்து, அவர்களது தலையை துண்டிக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.





இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஐ.எஸ். அமைப்பு நேற்று ஞாயிற்றுகிழமை இரவு வெளியிட்டுள்ளது. 
அதில், எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை கடற்கரைப் பகுதியில் வரிசையாக முழந்தாளிட வைத்து, அவர்களுக்கு பின்னால் ஐ.எஸ். அமைப்பினர் முகமூடியுடன் நிற்பதாகவும் காண்பிக்கப்படுகிறது.
பின்னர், அவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பேசும் காட்சியும், சிறிது இடைவெளியில் கடற்கரையில் 21 பேரின் இரத்தத்தை அலைகள் அடித்துச் செல்லும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் தோன்றிப் பேசும் குறித்த உறுப்பினர் கிறிஸ்தவர்களை குறிப்பிடும்படியாக, 
"சிலுவைப் போராளிகளே, அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக ஒன்றுப்பட்டு இயங்கும் நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒசாமா பின் லேடனை புதைத்த இந்தக் கடலில் உங்களது இரத்தத்தைக் கலப்போம் என்று அல்லாவுக்கு உறுதி அளிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தோன்றுபவர்  ஐ.எஸ் க்கு ஆதரவான லிபிய நாட்டவர் என்று தன்னை வட அமெரிக்க ஆங்கில மொழித் தோரணையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐ.எஸின் இந்த கொடூரச் செயலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. எகிப்து அரசு, இந்த சம்பவத்தை அடுத்து தங்களது நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனை எகிப்தில் உள்ள சன்னி இஸ்லாமியர்களின் தலைமையாகமான அல்-ஹஷாரும் கண்டித்துள்ளது. 
இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 "அல்-ஹஷாருக்கு அப்பாவி எகிப்தியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி கிடைத்தது. மிகவும் வருந்தக்கூடிய விடயம்.
ஐ.எஸ். நடத்தும் செயற்பாடுகளுக்கும் இஸ்லாமியத்துக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் செய்வது மனிதாபிமானத்துக்கும் இஸ்லாமியத்துக்கும் எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 







மத்தியதரைக்கடலை கடந்து இத்தாலி செல்ல முயற்சித்த 2,000 குடியேற்றவாசிகள் மீட்பு

17/02/2015 இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மேற்­கொண்ட பிர­தான தேடுதல் நட­வ­டிக்­கையின் போது, 2000 க்கு மேற்­பட்ட குடி­யேற்­ற­வா­சி­களை மீட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்த தேடுதல் நட­வ­டிக்­கையின் போது லிபி­யா­வி­லி­ருந்து அதி­வேக பட­கு­களில் இத்­தா­லியை நோக்கி வந்த துப்­பாக்­கி­களை ஏந்­திய குழு­வொன்றால் கரை­யோர காவல் படை­யினர் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
கடந்த வாரம் மத்­தியதரைக் கடலில் பட­குகள் மூழ்­கி­யதால் குறைந்­தது 300 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­டனர்.
இந்­நி­லையில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற பிந்­திய மீட்பு நட­வ­டிக்­கையில் ஒரு விமானம், 4 கரை­யோர காவல்­படை கப்­பல்கள், இரு பட­குகள், ஒரு கடற்­படை கப்பல் என்­பன ஈடு­பட்­டன.
அந்தக் குடி­யேற்­ற­வா­சிகள் 12 பட­கு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்டு இத்­தா­லிக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ள­தாக இத்­தா­லிய போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­தது.

இந்த மீட்பு நட­வ­டிக்­கையின் போது துப்­பாக்­கி­யுடன் காணப்­பட்ட 4 ஆண்கள், குடி­யேற்­ற­வா­சிகள் பயணம் செய்த படகு ஒன்­றுக்கு திரும்ப கரை­யோர காவல் படை­யி­ன­ருக்கு உத்­த­ர­விட்டு விட்டு படை­யி­னரின் படகில் ஏறி தப்பிச் சென்­ற­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சர் மோரி­ஸியோ லுபி கூறினார்.
கடந்த ஆண்டில் ஐரோப்­பாவை சென்­ற­டையும் முக­மாக மத்­தியதரைக்கட­லைக் ­க­டக்க மேற்­கொண்ட முயற்­சியின் போது 3500 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
அக் காலப் பகுதியில் 200,000 பேருக்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.    நன்றி வீரகேசரி 







எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு தீபற்றியது..!




17/02/2015 அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க்டவுனுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே திடீரென தடம் புரண்டது. இதனால், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 பீப்பாய்களும் கவிழ்ந்து தீபற்றியுள்ளன. 
இவ்விபத்திலிருந்து வெளியாகும் தீ பொது மக்களின் இருப்பிடங்களுக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து நடந்த பகுதியான விர்ஜினியாவில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு, எங்கும் பனிபடர்ந்து கிடப்பதனால் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.   நன்றி வீரகேசரி 









பாகிஸ்தானில் பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி


18/02/2015 பாகிஸ்­தானின் லாகூர் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்­தது 8 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.

குண்டு வெடிப்­பா­னது அந்­ந­க­ரி­லுள்ள பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.
பாகிஸ்­தானின் இரண்­டா­வது மிகப் ­பெ­ரிய நகரும் பிர­தமர் நவாஸ் ஷெரீப்பின் அதி­கார தள­மா­கவும் லாகூர் நகர் விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

வட­மேற்கு நக­ரான பெஷா­வரில் பள்­ளி­வா­ச­லொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூடு மற்றும் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் 22 பேர் பலி­யான சம்­ப­வத்­துக்கு சில நாட்­களில் இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னிய தலிபான் தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் டொக்­டர் உஸ்மான் என்ற போரா­ளிக்கு நிறை­வேற்­றப்­பட்ட தூக்குத் தண்­ட­னைக்கு பழி­தீர்க்கும் முக­மா­கவே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அந்தக் ­குழு தெரி­வித்­துள்­ளது.
பெஷா­வ­ரி­லுள்ள பாட­சா­லையில் 150 க்கு மேற்­பட்­ட­வர்கள் தலியான் துப்­பாக்கி தாரி­களால் படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பாகிஸ்தானில் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதில் நிலவிய ஸ்தம்பித நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  நன்றி வீரகேசரி 






ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பேர் எரியூட்டப்பட்டு படுகொலை


19/02/2015 மேற்கு ஈராக்­கிய நக­ரான அல்-பக்­டா­டியில் 45 பேர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் எரி­யூட்­டப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்ளூர் பொலிஸ் தலைவர் தெரி­வித்தார்.

அவர்கள் எதற்­காக கொல்­லப்­பட்­டுள்­ளார்கள் என்­பது அறி­யப்­ப­டாத நிலையில், அவர்­களில் சிலர் பாது­காப்­புப்­படை உறுப்பி­ன ர்கள் என நம்­பு­வ­தாக பொலிஸ் தலை­வ­ரான கேணல் காஸிம் அல் -பெய்டி தெரி­வித்தார்.
அயின் அல் -அஸாத் விமான தளத்­திற்கு அண்­மை­யி­லுள்ள அந்­ந­கரின் பெரு­ம­ள­வான பிர­தே­சங்கள் ஐ.எஸ். போராளிக் குழுவால் கடந்த வாரம் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.
மேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது ஐ.எஸ். போரா­ளிகள் பாது­காப்பு மற்றும் உள்ளூர் உத்­தி­யோ­கத்­தர்­க­ளது குடும்­பங்­களின் வீடு­களை உள்­ள­டக்­கிய வளா­கத்தை தாக்­கி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் ஈராக்­கிய அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் தமக்கு உதவ வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். உக்­கிர மோதல்கள் மற்றும் தொடர்­பாடல் வச­தி­யின்மை கார­ண­மாக மேற்­படி 45 பேரும் எரித்து படு­கொலை செய்யப்பட்டதாக வெளியான செய் தியை உறுதிப்படு த்த முடியாதுள்ள தாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.  நன்றி வீரகேசரி

No comments: