இனியும் பிறப்பாரா ஸ்ரீதர் பிச்­சை­யப்பா - கனிவுமதி

.
விடி­காலை என்று கூட சொல்ல முடி­யாது ஒன்று அல்­லது இரண்டு மணிக்கு என் கைப்­பேசி சிணுங்­கு­கின்­றது. அடுத்த பக்­கத்­தி­லி­ருந்து அழைப்­பது ஸ்ரீதர் என்று தெரிந்­து­விடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலை­பேசி எடுப்­பது அவ­ரா­கத்தான் இருக்கும் என்­பது என்­அ­சைக்க முடி­யாத நம்­பிக்கை.கைப்­பே­சியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்­கு­றியா? தூங்­கப்­போறியா? அல்­லது என் போனுக்கு காத்­தி­ருக்­கியா?" என அடுத்­த­டுத்து கேள்­வியை கேட்டு விட்டு சிரித்­துக்­கொண்­டி­ருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்­கப்­போறேன்''என  சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்­கா­லமே கிடை­யாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கல­க­லப்­புக்கு பின் இலக்­கியம் பேச ஆரம்­பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூலைப்­பற்றி அல்­லது ரசித்த திரைப்­படம் பற்றி ஓவி­யங்கள் பற்றி நாம் பேச ஆரம்­பிப்போம்.ஒரு படைப்பை இர­சித்து அதனை மற்­ற­வ­ரோடு பகிர்ந்து கொள்­கின்ற உயர்ந்த பண்­பினை அவ­ரிடம் நிறைய தடவை கண்­டி­ருக்­கிறேன்.  


'' இந்­த­ந­டு­சா­மத்தில் கைப்­பே­சியில் இலக்­கியம் பேசு­வது நாங்கள் இரு­வ­ரா­கத்தான் இருக்க வேண்டும் என நான் சொல்ல ''இத தான் கவிஞர் விடிய விடிய இலக்­கியம் பேசு­ற­துனு எல்­லோரும் சொல்­லு­வாங்க'' என்று சொல்லி என்னை சிரிக்க வைப்பார்.ஸ்ரீத­ரு­டைய   பெயரை போல அவ­ரு­டைய பேச்சில் வற்­றாத ஓடை­யாக சிரிப்­பலை எப்­போதும் இருந்­து­கொண்டே இருக்கும். அந்த வஞ்சக­மில்லா சிரிப்­புக்கு சொந்­தக்­காரன் என் இனிய நண்­ப­னாக அண்­ணானாக வாழ்ந்து மறைந்து, என்னுள் இன்றும் வாழ்ந்து வரும்  மாபெரும் கலைஞர் ஸ்ரீதர் பிச்­சை­யப்பா. அந்த கலை­ஞனின் ஈர நினைவு அலை­க­ளி­லி­ருந்து  சிறு துளி­களை மட்டும் இங்­கே­அள்­ளித்­த­ரு­கின்றேன்.
ஸ்ரீதர் பிச்­சை­யப்­பாவை நான் முதலில் சந்­தித்­தது 1995 ஆம் ஆண்­டு­களின் நடுப்­ப­கு­தியில் ஒரு இசை நிகழ்வில் சந்­தித்தோம். ஆனால் என்னால் பேச முடி­ய­வில்லை அப்­போது நான் இலக்­கிய துறைக்கு வந்த புதிது.மனதில் ஒரு சிறு பயமும் இருந்­தது. அப்­போது ஸ்ரீதர் பிச்­சை­யப்பா இலங்­கையின் அதி உச்­சத்தில் கொண்­டா­டப்­பட்ட ஒரு கலை­ஞ­னாக இருந்தார்.அதற்கு பிறகு 1997 இல் அதுவும் அந்த ஆண்டின் நடுப்­ப­குதி ஒன்றில் டவர் மண்­ட­பத்தில் (அதுவும் ஒரு இசை நிகழ்ச்சி தான்)    அன்று நான் ஸ்ரீதரை அருகில் சென்று சந்­திக்­கக்­கூ­டிய வாய்ப்பு கிடைத்­தது. உடனே அவர் என்னை இறுக அனைத்து என்­னைப்­பற்றி தெரிந்து கொண்­டதும் உன் கவி­தை­களை நான் வாசித்­தி­ருக்­கின்றேன் என கூறினார்.
எனக்கு ஆச்­சரி­ய­மாக இருந்­தது. இரு­வரும் அரு­க­ருகே இருந்து புகைப்­ப­டங்கள் எடுத்­துக்­கொண்டோம். அதற்கு பின் ஸ்ரீதர் பிச்­சை­யப்­பா­வுடன் இத்­தனை ஆண்­டு­காலம் பழகி வந்­தாலும் இரு­வரும் இணைந்து எடுத்­துக்­கொண்ட புகைப்­படம் என்று என்­னிடம் இருப்­பது ---97 களில் நாங்கள் எடுத்­துக்­கொண்ட அந்த ஒரே­யொரு புகைப்­படம் மட்­டும்தான் என்றும் நினை­வு­களை சுமந்த வண்ணம் உள்­ளது.ஸ்ரீதர் பிச்­சை­யப்­பாவை ஒரு பாட­க­னாக நடி­க­னா­க­ பாட­லா­சி­ரி­ய­ரா­கத்தான் எல்­லோ­ருக்கும் தெரியும். அதை­விட ஒரு சிறந்த ஓவி­ய­னா­கவும் எனக்குள் பரவ ஆரம்­பித்தார்.அந்த தரு­ணங்­களை என்னால் ஆயுள்  உள்ள வரை மறக்­கவே முடி­யாது. இப்­படி பன்­முக ஆற்­ற­லுடன் இலங்கை மண்ணில் வாழ்ந்து வந்த  ஸ்ரீதரின் வாழ்க்கைப் பய­ணத்தில் பல துன்ப அலை­களும் இல்­லா­ம­லில்லை. அவற்றை எல்லாம் கடந்து முன்­னோக்கி பய­ணித்த அவ­ரது வாழ்க்கை படகில் நானும்­ப­ய­ணித்­தி­ருக்­கிறேன் என்­பதை  உணரும் போது என்­னை­ய­றி­யாமல் கண்கள் ஈர­மா­கின்­றன. இதை­யெல்லாம் என்னால் கட்­டுப்­ப­டுத்­தவே இய­ல­வில்லை.
எனது  பதி­னாறு வயதில் எழு­திய கவி­தை­களை 1994 ஒரு தொகு­தி­யாக 2002 இல் வெளி­யிட முயற்சி செய்­து­கொண்­டி­ருந்த வேளையில்   எனது கவிதை தொகு­தியை இலங்­கையின்  மூத்த படைப்­பா­ளியும் மல்­லிகை இதழின்  ஆசி­ரி­ய­ரு­மான  டொமினிக் ஜீவா தன­து­  மல்­லி­கைப்­பந்தல் வெளி­யீ­டாக வெளி­யிட முன்­வந்­தார். எனது பல கவி­தை­களை மல்­லிகை இதழில் வெளி­வர செய்து இலக்­கி­யத்தின் கத­வு­களை திறக்­கச்­செய்த மல்­லிகை ஜீவாவுடன் ஸ்ரீதர் பிச்­சை­யப்­பாவும் மிக நெருக்­க­மாக பய­ணித்த தரு­ண­மொன்றில் எனது முதல் தொகுதி வெளி­வ­ரு­கிற ­தென்றால் எனக்கு பேரா­னந்­தமாய் இருந்­தது. என் கவிதை தொகு­தியை வெளி­யிட ஆயத்­த­மான வேளையில் கவி­தை­க­ளுக்­கு­ரிய அனைத்து படங்­க­ளையும் ஸ்ரீதர் பிச்­சை­யப்­பா­விடம் இருந்து தான் பெற்­றுக்­கொண்டேன்.
பத்து  படங்­களை தவிர பெரும்­பா­லான படங்கள் ஸ்ரீதர் பிச்­சை­யப்பா ஏற்­க­னவே பல சந்­தர்ப்­பங்­களில் வரைந்து வெளி­வந்­தி­ருந்த ஓவி­யங்­க­ளையும் இந்த தொகு­திக்­காக பயன்­ப­டுத்­தினோம் அதற்­காக ஸ்ரீதர் என்­னி­ட­மி­ருந்து பண­மெ­தையும் பெற­வில்லை. ''உன் புத்­தகம் நல்லா வர­வேண்டும்'' என்று வாழ்த்­தினார்.எனது முதல் புத்­த­க­மான அப்­பு­ற­மென்ன (2003) வெளி­வந்த போது என் கவி­தை­க­ளோடு ஸ்ரீதரின் ஓவி­யங்­க­ளும்­எல்லா திசை­யிலும் பேசப்­பட்­டது.அப்­போது தான் இலங்­கையின் பலபேர் ஸ்ரீதர் ஒரு ஓவிய கலைஞர் என்­பதை உணர்ந்து கொண்­டனர். இதுவும் எனக்கு  மகிழ்ச்­சியை தரும் ஒன்­றா­கவே அமைந்­தது.அதே போல் ஸ்ரீதர் தயா­ரித்த ஒரு புத்­த­கத்­துக்கு நானும் சில ஓவி­யங்­களை வரைந்து கொடுத்தேன்.
காலம் அந்த புத்­த­கத்தை வெளிக்­கொண்­டு­வ­ரா­ம­லேயே போய்­விட்­டது.இன்­னொரு விட­யத்­தையும் இங்கே  சொல்ல வேண்டும் இலங்கை இசைத்­து­றையில் தனி முத்­தி­ரைப்­ப­தித்த இசை­ய­மைப்­பா­ளர்­களில் பி.எஸ்.ஷாஜகானும் ஒருவர். அவ­ரு­டைய இசைத்­தொ­குப்­புக்­கான அனைத்து பாடல்­க­ளையும் நான் எழு­தி­யி­ருந்தேன்.அதில் ஒரு பாடல் ஒளிப்­ப­தி­வுக்கு வந்­தது அந்த முதல் பாடலை அதா­வது நான் எழு­திய முதல் பாடலை பாடி­யவர்     ஸ்ரீதர் பிச்­சை­யப்பா. இதுவும் எனக்­கொரு ஆனந்­தத்தை தந்த விட­ய­மாகும். இப்­ப­டியே ஸ்ரீத­ருக்கும் எனக்­கு­மான உறவு நீண்­டு­கொண்­டி­ருந்­தது. அதற்கு பிறகு இரு­வ­ரு­மாக இணைந்து பல சந்­தர்ப்­பங்­களில் கவிதை, சிறு­கதை, நாவல், கட்­டு­ரைகள் (பெரும்­பாலும் இந்­திய உலக) புத்­த­கங்­க­ளைப்­பற்­றியும் ஓவி­யங்­களைப் பற்­றியும் பேசிக்­கொண்­டே­யி­ருப்போம்.
அந்த பேச்சு எப்­போ­துமே எனக்கு மன­நி­றைவு தரு­வ­தா­கவே இருக்கும். அடுத்து எங்­கா­வது ஸ்ரீதர்    ஒளிப்­ப­தி­வுக்கு போக வேண்டும் என்றால் நான் ஓய்­வாக இருப்­பதை தெரிந்து கூட என்­னையும் அழைத்­துக்­கொண்டு செல்வார். ஒளிப்­ப­திவு செய்யும் இடத்தில் விளம்­ப­ரத்­துக்­கான தனது குரல் பதி­வு­களை செய்­து­விட்டு இரு­வ­ரு­மாக நடந்து வந்து அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு உண­வ­கத்தில் சாப்­பிட்­டு­விட்டு இலக்­கியம் பேசி­ய­ப­டியே வீடுகள் நோக்கி எம்  கால்கள் நடக்க ஆரம்­பிக்கும். இப்­படி பல சந்­தர்ப்­பங்கள் எனக்குள் அனு­ப­வங்­க­ளாக பர­வி­கி­டக்­கின்­றன. ஒரு கலை­ஞ­னாக ஒரு மாபெரும் உய­ரத்தை தொட்­ட­வ­னு­டைய வாழ்க்­கை­யிலே மிக இல­கு­வாக என்னை போன்ற ஒரு சாமா­னி­ய­னையும்  இணைத்­துக்­கொண்­டது  என்னை மிகவும் விசித்­தி­ரத்தில் ஆழ்த்­தி­யது. ஸ்ரீதரும் நானும் கடை­சி­யாக சந்­தித்­துக்­கொண்ட தரு­ணங்­களும் ஒரு இலக்­கிய தரு­ண­மா­கத்தான் இருந்­தது.
வீர­கே­சரி நாளி­த­ழிலே தம்பி எஸ்.ஜே.பிரசாத் செய்து வந்த நான் சித்தன் பகு­தி­யிலே ஒரு காதலர் தினத்­தன்று 2010 படங்கள் வரைந்து தரும்­படி என்­னிடம் கேட்­டி­ருந்தார். அதற்­கான படங்­களை வரைந்து கொடுத்­து­விட்டு  திரும்பும் வேளை ஸ்ரீத­ரையும் இதே வீர­கே­சரி அழைப்­பு­மண்­ட­பத் தில் வைத்து   சந்­தித் தேன்.அப்போது  உடல் கொஞ்சம் தளர்ந்து இருந்­தது. என்­னைக்­கண்­டதும் ஆரத்­த­ழுவி கட்­டிக்­கொண்டார்.பார்த்து வெகு நாட்­க­ளா­கி­றது என்றார்.காதலர் தினத்­துக்கு அவரும் படங்­களை வரைந்து கொடுக்­கப்­போ­கிறார் என நான்  அறிந்­தி­ருக்­க­வில்லை.அப்­போது அவரும் ஓவி­யங்­களை வரைந்து கொடுத்­துள்ளார்.எம் இரு­வ­ரது ஓவி­யங்­களும் காதலர் தினத்­தன்று வெளி­யா­கி­ய­தோ­டு­ மி­கவும் பேசப்­பட்ட ஓவி­யங்­க­ளா­கவும் காணப்­பட்­டது. அதுதான் ஸ்ரீதர் பத்­தி­ரி­கைக்கு வரை­கிற  கடைசி ஓவி­யங்­க­ளா­க ­இ­ருக்­கு­மென கனவில் கூட நினைக்­க­வில்லை.எப்­படி எனக்கு -97 களில் அறி­மு­க­மான ஸ்ரீதர் நினைவில் நிற்­கி­றாரோ அது போல சித்தன் பகு­தியில் வந்த அந்த கடைசி ஓவி­யங்­களும் நினைவில் உள்­ளன.
அதன் பிறகு நான் தொழில் நிமித்தம் தூர இடங்­க­ளுக்கு  எல்லாம் செல்ல  வேண்டி ஏற்­பட்­டது. (பாட­சாலை சுவ­ரொன்றின் கீதா­சார காட்­சியை வரைந்து தர சொல்லி என்னை கேட்­டி­ருந்­தார்கள் அந்த ஓவி­யத்தை வரைந்து முடிக்கும் தறு­வாயில் நின்ற வேளையில்...) 
அதே மாதம் ஒரு நாள் என் கைபேசி ஒலித்­தது எடுத்து கதைத்தேன் மறு­பு­ற­மி­ருந்து இசை­ய­மைப்­பாளர் ஷாஜகான் ஸ்ரீதர் இறந்­து­விட்­ட­தாக செய்­தியை எனக்கு சொல்ல நான் அப்­ப­டியே உறைந்து போனேன். என் நாவி­லி­ருந்து வார்த்­தைகள் வர மறுத்­தது. என் நிலையை புரிந்து கொண்ட  ஷாஜகான் ''வருத்­தப்­ப­டா­திங்க நம் இத­யங்­க­ளி­லி­ருக்கும் ஸ்ரீதரை யாராலும் கொண்டு போக முடி­யாது'' என்று எனக்கு ஆறு­த­ல­ளித்தார். வர்­ணங்கள் சித­றிக்­கி­டந்த தூரி­கை­களை ஓரத்தில் வைத்­து­விட்டு அரு­கி­லி­ருந்த படியில் அமர்ந்து கொண்டேன் என் சிந்­த­னையில் ஸ்ரீதரின் உருவமும் அவரின் குரலும் என்னுள் பரந்து விரிகிறது.
ஸ்ரீதர் மறைந்து விட்டார் என என்னால் நம்பவே முடியவில்லை. இனி என்னை '' டேய் கவிஞா '' என்று யார் அழைப்பார்கள், நான் வாசித்த படைப்புகள் குறித்து இனி யாரோடு பகிர்ந்து கொள்வேன் அதை விட சிரிக்க சிரிக்க பேசும் அவரின் நகைச்சுவை  உணர்வுகளும் குழந்தைத் தனமான அந்த வஞ்சமில்லா சிரித்த முகத்தையும் இனி யாரிடம் காண்பேன் என என்னுள்ளம் எதை எதையோ யோசித்து கண்ணீர் விட்டெழுந்து பாதையில் நடக்கின்றேன்.  தூரத்தில் சுவரில் நான் வரைந்த கிருஷ்ணன்  அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் கீதாசார காட்சி என்னுள் ஏதேதோ சொல்லிப்போவது போல் இருக்கிறது.  ஈடுசெய்ய முடியா இழப்பின் இடைவெளியை  நிரப்ப இனி இப்படியொரு மகா கலைஞன் பிறப்பானா என்று ஸ்ரீதரின் ஈரநினைவுகளுடன் காத்திருக்கிறேன்.
எழுத்தாக்கம் - கனிவுமதி
சித்திரங்கள் -  ஸ்ரீதர் பிச்­சை­யப்பாவினுடையது

nantri: virakesari.lk

No comments: