அவ்வை நடராசனுக்கு தினத்தந்தி "மூத்த தமிழறிஞர்' விருது

.

தினத்தந்தி நாளிதழ் சார்பில், இந்த ஆண்டுக்கான "மூத்த தமிழறிஞர்' விருது, முனைவர் அவ்வை நடராசனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பட்டயத்துடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டது இந்த விருது.
இலக்கியப் பரிசு ரூ.2 லட்சம் பெறுபவர், டாக்டர் ஜி.பாலன். இவர், காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய "விடுதலை இயக்கத்தில் தமிழகம்' என்ற நூலுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
மறைந்த சி.பா.ஆதித்தனாரின் 110-வது பிறந்த நாளான சனிக்கிழமை (செப்.27) மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். இரா.தாண்டவன் அவர்கள் தலைமை தாங்கி, இலக்கியப் பரிசுகளை வழங்கி, உரை நிகழ்த்துவார்.

No comments: