இலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி - செ பாஸ்கரன்

.

அடுத்தடுத்து அழைப்பு வந்து அழைத்துச் செல்கிறது. இலக்கிய தாகம் கொண்டவர்களையும் கலையார்வம் கொண்டவர்களையும் காலன் கணக்கேட்டில் பதிவு செய்துவிட்டானா? பொன்மணியை பிரசவித்து வீடுயாருக்கென்று கேள்வி எழுப்பி கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் சிகரம் தொட்ட காவலூர் ராஜதுரையின் இறந்த செய்தி அக்ரோபர் 14 இல் அவசரமாய் வந்து சேர்ந்தது. அதிலிருந்து மீழுமுன்பே அடுத்த செய்தி

"வேருக்கு நீர்"  என்ற நூலுக்கு விருதுகளால் மகுடம் சூடிய பெண்மணி, சாகித்திய மண்டலமே தலைசாய்த்து விருது கொடுத்த இடதுசாரி எழுத்தின் ஆழுமை , உடல் அங்கங்கள் அனைத்தையும் பொதுவில் வைத்த பரோபகாரி , ராஜம் கிறிஸ்ணன் என்ற அறிவின் சுடர் அணைந்து விட்டதாய் அக்ரோபர் 20இன் அகாலத்தில் செய்திவந்து ஆட்டிவைத்தது. காவலூர் ராஜதுரையின் உடல் அக்ரோபர் 21 இல் அக்கினியில் சங்கமித்த அந்தக்கணங்கள் மறைந்த அடுத்த மூன்று

தினங்களில் கலை உலகின் "ஆலயமணி" யின் அசைவு நின்றுவிட்டது. "பராசக்தியும் , சிவகங்கை சீமையும்"  கண்ணீர்மல்க "தெய்வப்பிறவி ' யாய்      காட்சிதந்த எஸ் எஸ் ராஜேந்திரன், கலைஉலகின் செல்லப்பிள்ளை
சென்றுவிட்ட சேதிவந்து எம்மைத்தொட்டது அக்ரோபர் 24 இல் சேதிவந்த நேரம் முதல் சோகம் தொட்டது. ஆறு முன்பே அடுத்தடுத்துக்  கேட்ட செய்திகளின் ரீங்காரம் அகலாமல் கிடக்கிறது. மக்களிடம் இலக்கிய தாகம் வறண்டு கொண்டு போகின்றது என வருத்தம் கொண்டு இந்த இந்த வல்லுனர்கள் வாழ்வை விட்டு போகின்றார்களா?

இலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி செய்திடுவோம்.

No comments: