பல்­துறை ஆளு­மைப்­பே­ராசான் சிவத்­தம்பி -இணு­வையூர் ஆ. இர­கு­பதி பால­ஸ்ரீ­தரன்

.


தமிழ்ப்­பே­ரா­சி­ரியர் தகைசார் ஓய்வு நிலைப் பேரா­சி­ரியர் வரு­கைப்­பே­ரா­சி­ரியர் முது­நிலை ஆய்­வாளர் கர­வையூர் தந்த கண்­மணி இலக்­கியம், விமர்­சனம், சமூக வர­லாறு, நாடகம், கவின்­கலை, அர­சியல் அனைத்­திலும் கரை­கண்ட பேராசான் கால­மாகும் வரை கொழும்புத் தமிழ்ச்­சங்­கத்தின் காப்­பாளர் என்­றெல்லாம் உல­கெங்கும் உள்ள தமிழ்­பேசும் மக்­களால் போற்­றிப்­பு­க­ழப்­பட்ட பல்­துறை ஆளுமைப் பேராசான் தமி­ழி­யலின் தலைமைப் பேரா­சி­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி இன்று நம் மத்­தியில் இல்லை. அன்னார் மறைந்து மூன்று ஆண்­டுகள் ஓடி விட்­டன.
அன்னார் தமிழை நேசிக்கும் எங்கள் அனை­வ­ரி­ட­மி­ருந்தும் மனைவி ரூப­வதி, மகள்மார், மரு­மக்கள், பேரப்­பிள்­ளைகள் அனை­வ­ரி­ட­மி­ருந்தும் 06.07.2011 அன்று பிரிந்தார்.
யாழ்ப்­பாணம் கர­வெட்­டி­யிலே 10.05.1932 அன்று பண்­டிதர் கார்த்­தி­கேசு - வள்­ளி­யம்மை தம்­ப­தி­யருக்குப் புதல்­வ­ராகப் பிறந்தார் சிவத்­தம்பி. அவர் நட­ராஜா தம்­பி­யி­ன­ரது மகள் ரூப­வ­தியைத் திரு­மணம் செய்து மூன்று பெண் பிள்­ளை­க­ளுக்குத் தந்­தை­யாகி மகிழ்ந்தார்.


தமது ஆரம்பக் கல்­வியை கர­வெட்டி விக்கி­னேஸ்­வராக் கல்­லூ­ரியில் ஆரம்­பித்­து ­பின்னர் தமது கல்­வியை கொழும்பு ஸாஹி­ராக்­ கல்­லூ­ரியில் தொடர்ந்தார். அக்­கல்­லூ­ரியில் சிறிது காலம் ஆசி­ரி­ய­ரா­கவும் பணி புரிந்தார்.
இக்­கால கட்­டத்தில் கலை இலக்­கியத் தொடர்­புகள் ஆரம்­ப­மா­கின. அப்­போது வானொ­லியும் ஒரு முக்­கிய சாத­ன­மாக விளங்­கி­யது. அச்­ச­ம­யத்தில் திரு­வா­ளர்கள் கமால்தீன், சண்­மு­க­ரத்­தினம், அஸீஸ், சிவ­கு­ரு­நாதன், சமீம் போன்­ற­வர்­க­ளுடன் தொடர்பு ஏற்­பட்டு அம­ர­ரது நல்ல நண்­பர்­க­ளா­னார்கள். தமது பத்­தொன்­ப­தா­வது வயதில் 1951ஆம் ஆண்டு கலா­சூரி இ. சிவ­கு­ரு­நாதனுடன் இணைந்து தமிழ் ஒளி என்ற சஞ்­சி­கையை நடத்­தினார்.
1956இல் கலை மாம­ணிப்­பட்­டப்­ப­டிப்பு முடித்து கொழும்பு ஸாஹி­ராக் ­கல்­லூரி ஆசி­ரி­ய­ரா­கவும் பாரா­ளு­மன்ற சம­நேர மொழி பெயர்ப்­பா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.
1954இலி­ருந்து முற்­போக்கு இலக்­கி­யத்­துடன் இணைந்து தொழிற்­படத் தொடங்­கினார். அப்­ப­டிப்­பட்ட முற்­போக்கு இலக்­கி­ய­வா­தி­களில் குறிப்­பி­டத்­தக்­கவர் தொ.மு.சி. ரகு­நாதன்.
வானொலி நாடக நடி­க­ரா­கவும் பிர­கா­சித்தார். வானொலி நாட­கங்­களில் சானா, சுந்­த­ர­லிங்கம், மயில்­வா­கனம், செந்­தி­மணி ஆகி­யோ­ருடன் பங்­கேற்ற பெருமையுமுண்டு.
பல்­க­லைக்­க­ழக நாட­கங்­களின் மூலம் பேரா­சி­ரி­யர்கள் சு. வித்­தி­யா­னந்தன், கண­ப­திப்­பிள்ளை ஆகி­யோ­ருடன் இணைந்தார். பேரா­சி­ரியர் கைலா­ச­ப­தியும் இவரும் சம­கால மாண­வர்கள். கைலா­ச­ப­தியும் சிவத்­தம்­பியும் இலங்­கையின் இரட்­டையர் என்றார் தமி­ழ­கத்து பிர­பல எழுத்­தாளர் கோமல் சாமி­நாதன். இரு­வ­ருமே அக்­கா­லத்தில் முற்­போக்கு அணி­யி­னரின் இலக்­கி­யப்­பேச்­சா­ளர்கள் என்று அழைக்­கப்­பட்­டார்கள்.
பர்­மிங்ஹாம் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரியர் தாம்­சனின் பண்­டைய தமிழ்ச்­ச­மூ­கத்தின் நாட­கக்­கலை ஆய்­வினைச் செய்து முனைவர் (P.H.D) பட்­டம்­பெற்று பின்னர் தஞ்சைப் பல்­க­லைக்­க­ழகம், உப்­ப­சலா பல்­க­லைக்­க­ழகம், ஸ்காண்டி நேவியா பல்­கலைக்­க­ழகம், அமெ­ரிக்­காவில் உள்ள கலி­போர்­னியா, விஸ்­கான்­வியன், பெர்க்­கிஸி ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் பணி­யாற்­றினார்.
1978ஆம் ஆண்டு தொடக்கம் ஏறத்­தாழ 17 ஆண்­டுகள் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்­றிய பேரா­சி­ரியர் மட்­டக்­க­ளப்பு கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டு காலமும் தமி­ழா­ராய்ச்சி நிறு­வ­னத்தின் வரு­கைப்­பே­ரா­சி­ரி­ய­ராக ஓராண்டு காலமும் பணி­பு­ரிந்தார். மேலும் இந்­தியா, ஜேர்­மனி இங்­கி­லாந்து போன்ற நாடு­க­ளி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் வரு­கைப்­பே­ரா­சி­ரி­ய­ராகப் பெரும் பணி­யாற்றி பேரும் புகழும் பெற்றார்.
1956 முதல் இலக்­கிய விமர்­ச­னத்­து­றையில் தளம் பதித்தார். எனினும் 1966முதல் தான் அவ­ரது விமர்­சன நூல்கள் வெளி­யாகத் தொடங்­கின.
இவர் எழுத்­து­லகில் தொடாத துறை­யில்லை எனலாம். தமிழ், சமயம், மானி­ட­வியல், அர­சியல், சமூ­க­வியல், நாடகம், விமர்­சனம், வர­லாறு, கவின்­கலை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்­னாரின் படைப்­புக்­களில் சில­வற்றை இங்கே குறிப்­பி­டு­வது சாலப்­பொ­ருத்­த­மாகும்.
'தனித்­தமிழ் இலக்­கி­யத்தில் அர­சி­யற்­பின்­னணி' 'பண்டைத் தமிழ்ச்­ச­மூ­கத்தில் நாடகம்' 'இலக்­கி­யமும் கருத்து நிலையும்' 'பண்டைத் தமிழ்ச்­ச­மூகம் வர­லாற்றுப் புரி­தலை நோக்கி...' 'நாவலும் வாழ்க்­கையும்' 'தமிழ் இலக்­கி­யத்தில் மதமும் மானு­டமும்' 'யாழ்ப்­பாணம் - சமூகம், பண்­பாடு, கருத்­து­நிலை' 'இலங்கைத் தமிழர் - யார் எவர்?' 'தமிழ்ப்­பண்­பாட்டில் சினிமா ' என்­பன சில.
மேலும் கொழும்புத் தமிழ்ச்­சங்­கத்தின் மாத சஞ்­சி­கை­யான ஓலையை அன்­னா­ரது 75ஆவது அக­வையை தனது 2007ஆம் ஆண்டு வைகாசி / ஆனி 2007 சிறப்­பி­த­ழாக வெளி­யிட்டு கெள­ர­வித்­தது. தனது காப்­பா­ள­ருக்குச் செய்ய வேண்­டிய கட­மையை அவ­ரது வாழ்­நா­ளி­லேயே செய்து அவ­ரையும் கெள­ர­வித்து தானும் புகழ்­கொண்­டது.
ஞானம் பதிப்­பகம் கார்த்­திகை மாதம் 2007ஆம் ஆண்டு பவள விழா மலர் வெளி­யிட்டு சிறப்­பித்­தது.
அமரர் சிவத்­தம்­பியின் முன்னாள் கல்­லூ­ரி­யான கர­வெட்டி விக்கி­னேஸ்­வராக் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்தின் கொழும்­புக்­கிளை பேரா­சி­ரியர் கா. சிவத்­தம்­பியின் ஆளுமை விமர்­சிப்பின் சில ஊற்­றுக்­களை அழ­காக அரு­மை­யாகப் பதிவு செய்யும் வகையில் கர­வை­யூற்று என்ற தலைப்பில் ஒரு நூலை வெளி­யிட்­டது.
இவை­யெல்லாம் அந்தப் பெரி­யவர் வாழும் போதே பெற்­றுக்­கொண்ட கெள­ர­வங்கள் பெரு­மைகள்.
தமி­ழ­கத்து எழுத்­தாளர் கோமல் சாமி­நாதன், கார்த்­தி­கேசு சிவத்­தம்பியை நேர்­காணல் ஒன்றின் போது இலங்­கையின் தேசியம் பற்­றிக்­கேட்டார்.
பேரா­சி­ரியர் அழுத்தம் திருத்­த­மாகச் சொன்ன பதில் இதோ:
துர­திஷ்­ட­வ­ச­மாக பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் இலங்கை எமது நாடு இது எமக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறு­கிற இன­வாதக் குரல் இந்த நாட்­டுடன் நாங்கள் இணைந்து கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களைத் தடுத்து விடு­கி­றது. இது எங்கள் நாடு என்ற நினைப்பை சிங்கள தேசிய வாதம் எங்களுக்குக் கொடுக்கவில்லை. எங்களுக்கு தேசியம் என்பதில் உள்ள பிரச்சினை இதுதான்.
என்ன தீர்க்க தரிசனமான பதில். கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு காப்பாளராகிய நீங்கள் உங்களால் இயலாத வேளையிலும் பிறரின் உதவியுடன் முச்சக்கர வண்டியிலும் நடை வண்டியிலும் வருகை தந்து முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு எங்களுக்கு அறிவுரையும் ஆசியுரையும் வழங்கியதை எண்ணிப்பார்க்கிறோம்.
Nantri Verakesari

No comments: