இலங்கைச் செய்திகள்


செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை

சீரற்ற காலநிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 44 ஆயிரத்து 91 பேர் பாதிப்பு

மாத்தறையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியது

 ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும் : மோடியுடனான சந்திப்பில் ஜெயலலிதா

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு

மொரட்டுவை விடுதியிலிருந்து வடபகுதி இளைஞர்கள் 13 பேர் கைது

புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
================================================================

செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை


02/06/2014  மட்டக்களப்பு செங்கலடி வர்த்தகர்களான சிவகுரு ரகு அவரின் மனைவியான சுந்தரமூர்த்தி விப்ரா இரட்டைக்கொலை வழக்கின் நான்கு எதிரிகளில் மூவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நான்காவது எதிரியான மேற்படி தம்பதியரின் மகளான ரகு தலக் ஷனாவின் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி. சந்திரமணியினால் இதற்கான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக தம்பதியினரான ரகு விப்ரா இருவரும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட ஏறாவூர் பொலிஸார் எஸ். அஜத், கு. நிலக்சன், பு. சுமன், ஆர். தலக் ஷனா ஆகியோரை கைது செய்ததுடன் அவர்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல்




செய்யப்பட்ட இவ்வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கு முதலாவது எதிரியான எஸ். அஜந் 4ஆவது எதிரியான ஆர். தலக் ஷனா ஆகிய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரியந்தி வேல் முருகு மனு தாக்கல் செய்தார். 2ஆவது எதிரியான கு. நிலக்ஷன் 3ஆவது எதிரியான பு. சுமன் ஆகிய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிறேம்நாத் மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து 1ஆம், 2ஆம், 3ஆம் எதிரிகளை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய அனுமதி அளித்து மட்டு. மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவர்கள் கடவுச் சீட்டு பெறவும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திங்கள் வியாழன் ஆகிய இரு தினங்களிலும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்தல் வேண்டும். அத்துடன் இவர்கள் நன்னடத்தையானது நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர்களால் கண்காணிக்கப்படவும் வேண்டும். 
2ஆம் 3ஆம் எதிரிகள் 50 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 10 இலட்சம் ரூபாவுக்கு சரீரப்பிணையும் செலுத்தல் வேண்டும். சரீரப்பிணையாளிகளில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும். முதலாவது எதிரிக்கு 75 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் விதிக்கப்பட்டது. சரீரப்பிணையாளிகளில் இருவர் அரச உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.
நன்றி வீரகேசரி 






சீரற்ற காலநிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு

03/06/2014 நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சீரற்ற காலநிலை காரணமாக 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி 








சீரற்ற காலநிலையால் 44 ஆயிரத்து 91 பேர் பாதிப்பு

04/06/2014    நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 44 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 103 வீடுகள் முழுமையாகவும், 683 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டவர்கள் 23 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 
நன்றி வீரகேசரி 








மாத்தறையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு ஏற்படும் அபாயம்

04/06/2014 மாத்தறை மாவட்டத்திலே நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு பிரதேச செயலாளர்  பிரிவுகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்  நிலவுவதாக மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி அதிகாரி ரஞ்சித் ஜயசிங்க ஆரச்சி தெரிவித்தார்.
கொட்டப்பொல பஸ்கொட முலடிய பிடபெத்தர ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு மண்சரிவு  ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழையின் காரணமாக நில்வளா மற்றும் ஜின்கங்கை என்பன பெருக்கெடுத்துள்ளதோடு அதனை  அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது. குறிப்பாக அக்குரஸ்ஸ - உடுகம, அக்குரஸ்ஸ - மாத்தறை, அக்குரஸ்ஸ - தெனியாய, அக்குரஸ்ஸ - கம்புறுப்பிட்டிய ஆகிய பாதைகளில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்பட்டதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. 
நேற்று மாலை அக்குரஸ்ஸ நகரில் வியாபார நிலையங்களுக்கு வெள்ள நீர் உட்புகுந்தமையால் வர்த்தக நிலையங்களிலிருந்து  பொருட்கள் சேதத்துக்குள்ளாகியுள்ளன. 
அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் 345 குடும்பங்களைச் சேர்ந்த 1118 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 
மழையுடன் கூடிய காலநிலையின் பொழுது தெனியாய – இரத்தினபுரி வீதி, தெனியாய – எம்பிலிப்பிட்டிய வீதிகளில் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். 
இதேவேளை ஜின்கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இனிதும, உடுகம, தெல்லவ ஆகிய பிரதேசங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. 
நன்றி வீரகேசரி











நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியது

04/06/2014  நாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலை வழமை நிலைக்கு திரும்பி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
சீரற்ற காலநிலை காரணமாக 22,500 ற்கும் அதிகமானோர் பதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி















 ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும் : மோடியுடனான சந்திப்பில் ஜெயலலிதா

04/06/2014   இலங்­கையில் தமிழர் வாழும் பகுதி­களைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்­தி­யிலும் புலம்பெயர்ந்த தமி­ழர்­க­ளி­டமும் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தக்­கோரி ஐக்­கிய நாடுகள் சபையில் இந்­தியா தீர்­மானம் கொண்­டு­வர வேண்­டு­மென பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா கோரிக்கை விடுத்­துள்ளார்.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை நேற்று புது­டில்­லியில் சந்தித்து பேசிய தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா,
இலங்கை, தமி­ழகம் தொடர்­பான பிரச்­சி­னைகள் குறித்த கோரிக்கை கடி­மொன்­றையும் கைய­ளித்தார். இலங்கை பிரச்­சினை குறித்து அக்­க­டி­தத்தில்இ ஜெய­ல­லிதாஇ இலங்­கையில் நடந்த இனப் படு­கொ­லையைக் கண்­டித்து ஐ.நா.வில் இந்­தியா கண்­டனத் தீர்­மானம் கொண்­டு­வர வேண்டும்.
தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமி­ழர்­க­ளி­டமும் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளி­டமும் வாக்­கெ­டுப்பு நடத்த வேண்­டு­மென அந்தத் தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்த வேண்டும்.
பாக்கு நீரி­ணையில் இந்­திய மீன­வர்­களின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­க­ளையும் அவர்­க­ளது பாது­காப்­பையும் உறு­தி­செய்ய வேண்டும்இ 1974இ 76ஆம் வருட ஒப்­பந்­தங்களை மத்திய அரசு இரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நன்றி வீரகேசரி










முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு

03/06/2014  நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் மற்றும் எதி­ரான நட­வ­டிக்­கை­களை உட­னுக்­குடன் அறிந்துகொண்டு உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் தடுத்து நிறுத்­து­வ­தற்கும் முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் வல்­லு­நர்கள் அடங்­கிய குழு­வொன்று செயலில் இறங்­கி­யுள்­ளது.
முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள், கல்­வி­யி­ய­லா­ளர்கள், உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், உள­வி­ய­லா­ளர்கள், சமூக சேவை­யா­ளர்கள் என பல துறை­களைச் சேர்ந்த 30 பேர் இக்­கு­ழுவில் அங்கம் பெற்­றுள்­ளனர்.
இக்­கு­ழு­வி­னரால் 24 மணி­நேர தொலை­பேசி சேவை­யொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட தொலை­பேசி எண்­க­ளுக்கு நாட்டில் எந்தப் பகு­தியில் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், தாக்­கு­தல்கள், நாச­காரச் செயல்கள் என்­ப­வற்றை உட­னுக்­குடன் தெரி­யப்­ப­டுத்­தலாம். குறிப்­பிட்ட முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபு­ணர்கள் அடங்­கிய குழு தேவை­யான சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­துடன் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுப்ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்ளும்.
நாட்டில் எப்­ப­கு­தி­யி­லென்­றாலும் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை உட­னுக்­குடன் அறியத்தரு­மாறு குறிப்­பிட்ட குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 24 மணி நேர சேவை­யி­லுள்ள தொலை­பேசி இலக்­கங்­க­ளா­வன 075 9700910, 075 9700911, 075 9700912, 075 9700913 இத்­தொ­லை­பேசி இலக்­கங்­களூடாகத் தெரிவிக்கப்­படும் சம்­ப­வங்கள் தொடர்பில் தேவை­யேற்­படின் குறிப்­பிட்ட குழு ஸ்தலத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­துடன், பதற்­ற­மான சூழ்­நி­லை­களை பாது­காப்புத் தரப்­பி­ன­ருடன் இணைந்து தீர்த்துவைப்­ப­தற்­கான பணி­களை மேற்­கொள்ளும். வழக்கு தாக்கல் செய்யும் நிலை­மை­யேற்­பட்டால் இக்­கு­ழு­வி­லுள்ள சட்­டத்­த­ர­ணிகள் மூலம் அதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.
மாவட்ட ரீதியில் சிங்­கள, முஸ்லிம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வினை வளர்ப்­ப­தற்கும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் இக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக சிங்­கள மக்­களின் உத­வி­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
ஊட­கங்­களில் சிங்­கள, முஸ்லிம் இனங்கள் தொடர்­பா­கவும் இடம்­பெறும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறுகல் சம்பவங்கள் தொடர்பாகவும் வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் காண்பதற்கு ஆலோசனை வழங்கப்படும். ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நன்றி வீரகேசரி










மொரட்டுவை விடுதியிலிருந்து வடபகுதி இளைஞர்கள் 13 பேர் கைது

06/06/2014   சட்­ட­வி­ரோ­த­மாக படகில் அவுஸ்­தி­ரே­லியா செல்­வ­தற்­காக மொரட்­டுவை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட லுனான பிர­தேச விடு­தி­யொன்றில் தங்­கி­யி­ருந்த வடபகுதியைச் சேர்ந்த 13 தமிழ் இளை­ஞர்கள் பொலி­ஸா­ரினால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரிடம் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா செல்ல இந்த இளை­ஞர்கள் தலா 10 ஆயிரம் ரூபா பணம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் இந் நிலை
யில் மொரட்­டு­வை­யி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல தயா­ராக இருந்த போதே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
மொரட்­டுவை, லுனான பகு­தியில் விடு­திக்கு முன்­பாக ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸ் குழு­வினரால் இந்த 13 இளை­ஞர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்கள் நெடுங்­கேணி, முள்­ளி­ய­வளை, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மற்றும் வவு­னியா ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் என ஆரம்ப கட்ட விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.
யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர், தம்­மிடம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்­பு­வ­தாகக் கூறி தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் மொரட்­டு­வை­யி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்­பு­வ­தாக அவர் தம்­மிடம் உறு­தி­ய­ளித்த நிலை­யி­லேயே தாங்கள் இப்­ப­கு­திக்கு வந்து குறித்த விடு­தியில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் கைதுசெய்­யப்­பட்ட இளை­ஞர்கள், பொலி­ஸா­ரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரிடமும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி














புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

05/06/2014 காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக இன்று காலை திட்டமிட்டபடி  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு நேற்று முதல் இராணுவ புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவற்றை தகர்த்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லை மண்ணில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் அவ் உறவுகளின் குரல்களை பலப்படுத்தும் வகையில் இன்று முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
காணாமல் போனாருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்படவேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று வடமாகாண சபை உறுப்பினர்  அனந்தி சசிதரன்pன் ஏற்பாட்டில் நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு முல்லைத்தீவில் ரவிகரன் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரனுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர்.
தனித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்லவேண்டாம் எனவும் தாம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வோம் எனவும் அவர்கள் கூறியதாகவும் இதனால் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளமுடியுமோ என்ற தமது ஐயங்களையும் மக்கள் தன்னிடம் வெளிப்படுத்தியதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் முயற்சிகளை தகர்க்கும் பொருட்டு ரவிகரனால் முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் முயற்சிகளை முன்னெடுத்தார்.
தொடர்ந்தும் இன்று முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இராணுவத்தினரால் குழப்பங்கள் விளைவிக்கப்படலாம். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலும் வந்து சேர அவற்றை மீறி ஆர்ப்பாட்டத்தினை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களின் அழுத்தங்களை மீறியதாய் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் ரவிகரன் சிவாஜிலிங்கம் அன்ரனி ஜெகநாதன் மேரி கமலா குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் மணிவண்ணன் ஆகியோருடன் வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்பவந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து ரவிகரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் தமது உரைகளையாற்றி 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.
நன்றி வீரகேசரி




No comments: