புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது
இலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்
வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு
ஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்
இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது
===================================================================
புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது
19/05/2014 விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர்
மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். நன்றி வீரகேசரி
இலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்
19/05/2014 இலங்கையில் பெற்றோலிய அகழ்வுப் பணிகளில் ஈடுபட பிரான்ஸின் சர்வதேச எண்ணெய் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய கடற்பகுதியில் இந்த பணிகள் இடம்பெறுவதற்கான உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
உலகின் 6பாரிய எண்ணெய் நிறுவனங்களில் பிரான்ஸின் சர்வதேச எண்ணெய் நிறுவனமும் உள்ளடங்குகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அந்த நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்
19/05/2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் கடமையாற்றிய இசைப்பிரியா இராணுவ காவலரண் முன்னால் பிறிதொரு போராளிப் பெண் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் உயிரோடு உள்ள புகைப்படங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே இவ்வாறான பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு தொடர்ந்தும் ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தொடர்பிலும் அதில் கவனம் செலுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.
குறித்த தொலைகாட்சியானது ஏற்கனவே பல புகைப்படங்களை ஆதராங்கள் இன்றி போலியாக முனவைத்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கும் என தாம் நம்புவதாகவும் விசாரணையின் இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
போலி ஆவணத்தை கொண்டு இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இவ்வாறான போலி புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிட்ட பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இவ்வாறான புகைப்படங்களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டார்.
ஏற்கனவே பாதுகாப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆதரங்களை விஷேட ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அந்த ஆய்வினுள் இந்த புகைப்படங்கள் தொடர்பிலான விடயமும் உள்ளடங்கியிருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக படையினரால் இசைப்பிரியா மீட்கப்பட்டு அழைத்து வருவது போன்ற காட்சிகளை சனல் 4 வெளியிட்டிருந்தது. எனினும் இறுதி யுத்தத்தின் போது படையினருடனான மோதலில் இசைப்
பிரியா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே இசைப் பிரியா படையினரின் காவலரன் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு
20/05/2014 இராணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜனநாயகம் பற்றி பேசிய ஜனாதிபதிஇ வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லையென்பதை நிரூபித்துவிட்டார். வடக்கில் நினைவுகூரல் நிகழ்விற்கு தடை விதித்தமை தவறான செயற்பாடாகுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

அழைப்பு விடுக்காமையினாலேயே நாம் யுத்த வெற்றி விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்தது. யுத்த வெற்றி விழா நிகழ்வில் எதிர்க்கட்சி பங்கேற்காமை மற்றும் வடக்கில் மே 18 நிகழ்வுகளுக்கு தடை விதித்தமை தொடர்பில் வினவியபோதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டாறு தெரிவித் தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இராணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகம் பற்றியும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் பேசினார். மூவின மக்களையும் ஆதரிப்பதாகக் கூறிய ஜனாதிபதி, வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடை விதித்தது ஏன்? அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் வடக்கில் அதிகளவில் இராணுவத்தினையும்இ பொலிஸாரையும் குவித்துதமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைமீறும் வகையில் செயற்பட்டதுஏன்? யுத்த வெற்றிக் கொண்டாட்டம் அவசியமானதாக இருந்தாலும் இழப்புக்களை சந்தித்த மக்களின் வேதனையினையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில்இ யுத்தத்தில் இழப்புகளை அதிகளவில் சந்தித்தது வடக்கில் வாழும் அப்
பாவி தமிழ் மக்களே.
அவர்களை நிம்மதியாக அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்ள விட்டிருந்தால் ஜனாதிபதி குறிப்பிட்ட ஜனநாயகம் அர்த்தப்பட்டிருக்கும். ஆனால், மே தின வெற்றி விழாவில் ஜனாதிபதி பேசிய வார்த்தைகள் அனைத்தையும் பொய்யென நிரூபிக்கும் வகையில் இராணுவம் வடக்கில் செயற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் இதனை நிச்சயமாக அவதானித்திருக்கும். இலங்கையின் உண்மை நிலைமையினையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
யுத்த வெற்றி விழாவில் எமக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை தேசிய ரீதியில் அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்குமானால் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.
ஆயினும், இவ் வெற்றியானது தனியே அரசாங்கத்தினால் மட்டும் கொண்டாடப்பட வேண்டும். யுத்த குற்றங்களை புரிந்தும் பொதுமக்களை அழித்தும் பெற்ற வெற்றி
யில் நாம் கலந்துகொள்ளப் போவது மில்லை. அதேபோல் முக்கியமான நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொள்ளவில்லை என்பதும் சிந்திக்க வைத்துள்ளது. ஏனெனில், இவ்வாறான நிகழ்வுகளில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது தெரிந்த விடயமெனினும், சர்வதேச நாட்டுத் தூதுவர்களுக்கு அரசாங்கம் அழைப்புவிடுக்காது இருந்
திருக்க வாய்ப்பில்லை.
எனவே, அவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் வராதிருந்தமை ஏன் என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமே எனவும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி ஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்
20/05/2014 ஈழத் தமிழர்களுக்கு உங்களது அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என ம.மு.தி.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தியாவின் புதிய பிர தமராகப் பதவியேற்கவுள்ள நரேந்தி ரமோடியை நேற்று திங்கட்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியே ற்கவுள்ள நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பொன னாடை போர்த்தி மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்ததன் பின்னரே வைகோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன் போது பதிலளித்த நரேந்திர மோடிஇ ஈழத் தமிழர்கள் விடயத்தில் என்றும் உறுதுணையாக செயற் படுவேன் என வைகோவிடம் உறுதியளித்துள்ளார்.
குஜராத் பவனில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது வைகோ மோடியிடம் கூறியதாவது,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே மாதம்ஈழத் தமிழர்களுக்குத் துயரமான மாதம் .இத்தகைய நிலமைக்கு சோனியா காந்தி தலைமையிலான அவரது காங்
கிரஸ் அரசே காரணமாகும்.ஈழத்தமிழருக்கு....
எனவே உங்களது அரசு ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வெளிவிவகார துறையில் ஆக்கிரமித்து உள்ள சோனியாவின் ஆதரவு அதிகாரிகளை அப்புறப்படுத்துங்கள் நதி நீர் இணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமாகும். ஆகவே முதல் கட்டமாக தென்னக நதிகள் இணைப்பை செயல்படுத்துங்கள். அதே போன்று உங்கள் அரசு ஈழ தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வெளிவிவகார மற்றும் நீர்ப்பாசன துறையில் ஆக்கிரமித்து உள்ள சோனியாவின் ஆதரவு அதிகாரிகளை அப்புறப்படுத்துதல் இங்கு பிரதானமானதாகும்.
இந்திய விடுதலைக்குப் பிறகு வரலாற்றில், ஒரு மகோன்னதமான வெற்றியை ஈட்டி இருக்கின்றீர்கள். இந்திய நாட்டுக்கு ஒரு புதிய விடியலை நீங்கள் தருவீர்கள் என்று கோடானுகோடி மக்கள் நம்பிக்கையோடு வாக்ககளித்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு நீங்கள் ஒரு புதிய விடியலைத் தருவீர்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
"தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், நீங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய நன்றி உரை, அற்புதமான உரை ஆகும். நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் நன்றி உரைகளைக் கேட்டு இருக்கிறேன். முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை. உங்கள் உரை எல்லாவற்றையும் விடச் சிறந்தது" "தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் வாழ்த்துச் சொன்னது, உங்கள் உயர்ந்த தலைமைப் பண்பைக் காட்டுகிறது. அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கைத் தெரிவிக்கிறது"
சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை, நரேந்திர மோடி அரசு ஒருபோதும் செய்யாது. இலங்கை அரசுக்கு உதவாது; ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு மோடி அரசில் வழிபிறக்கும் என்று குறிப்பிட்டேன். எப்படி இருப்பினும் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறினார்.
இவை அனைத்தையும் செவிமடுத்த நரேந்திர மோடி எனது முதற் பணியாக நதி நீர் இணைப்புக்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு செயலாற்றுவேன். அத்துடன் ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயற்படுவேன். அது மாத்திரமன்றி காங்கிரஸ் ஆட்சியின் வெளியுறவு துறை அதிகாரிகளை மாற்றியமைக்காவிட்டால் தவறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் மோடி வைகோவிடம் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்
20/05/2014 இரத்தினபுரி நகர சபை பகுதியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாநகரசபையின் ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர் மொஹமட் ஷியாம் தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரிலுள்ள 5 பாடசாலைகளில் டெங்கு அபாயம் காணப்படுவதுடன் இதில் ஒரு பாடசாலையில் 15இற்கு மேற்பட்ட மாணவர்களும் அப்பாடசாலையின் அதிபரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரத்தினபுரியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் முற்றாக ஒழிக்க முடியவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது

64 வயதுடைய பத்மாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மீளிணைய முயற்சிக்கும் விடுதலைப் புலிகளின் எதிர்கால பயன்பாட்டிற்காக காணி ஒன்றை குறித்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும் அக் காணிக்கான பணத்தை விடுதலைப் புலிகளே குறித்த பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment