அமெரிக்காவின் நிதி நெருக்கடி முழு உலகிற்குமே பெரும் அச்சுறுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்
நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை
---------------------------------------------------------------------------------------------------------
14/10/2013 அமெரிக்காவின் கடன் பெறுவது தொடர்பான நெருக்கடி காரணமாக
அந்நாட்டு அரசாங்கம் ஒரு சில தினங்களில் மிகவும் அபாயகரமான
தருணமொன்றை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம்
எச்சரித்துள்ளார்.
14/10/2013 நவராத்திரி தின சிறப்பு பூஜையில் பங்கேற்க சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியதில் 109 பக்தர்கள் பரிதாப கரமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தட்டியா மாவ ட்டத்தின் ரத்னாகர் பகுதியில் உள்ளது மந்துளா தேவி கோயில். இங்கு, நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான நேற்று சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வழக்கம் போன்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண் டிருந்தனர்.
கோயிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர், பாதிக்கப்பட்டோரை உடனடியாக தட்டியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
14/10/2013 தீர்ப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுளைக் குறிக்க அல்லாஹ் என்ற
சொல்லைப் பயன்படுத்த முடியாது என மலேசிய நீதிமன்றமொன்று
தீர்ப்பளித்துள்ளது.
15/10/2013 வட கிழக்கு நைஜீரியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்
நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை
---------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் நிதி நெருக்கடி முழு உலகிற்குமே பெரும் அச்சுறுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை
14/10/2013 அமெரிக்காவின் கடன் பெறுவது தொடர்பான நெருக்கடி காரணமாக
அந்நாட்டு அரசாங்கம் ஒரு சில தினங்களில் மிகவும் அபாயகரமான
தருணமொன்றை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம்
எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை காலக்கெடு
முடிவடைவதற்கு முன் அரசாங்க கடன் வரையறையை உயர்த்துவதற்கு
அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்படிக்கையொன்றை எட்ட
வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நிதிச்சந்தையிலிருந்து
கடன் பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் அமெரிக்கத்
திறைசேரியானது நிதிப் பற்றாக்குறையுடன் செயற்பட நேரிடும் எனவும்
அத்தகைய நிலை முழு உலகிற்குமே ஆபத்தான ஒன்றாக அமையலாம் எனவும் கிம்
எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலை வட்டி வீதங்கள் உயரவும்
நம்பிக்கை வீழ்ச்சியடையவும் வளர்ச்சி மந்தமடையவும் வழிவகுக்கும்
என அவர் கூறினார்.
அமெரிக்க வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் அபிவிருத்தியடைந்த நாடுகளிலும்
பாரிய பொருளாதார ரீதியான அனர்த்தத்துக்கு வித்திடும் என அவர்
தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் அரசாங்க நிறுவனங்கள்
பகுதியாக மூடப்படுவதற்கு வழிவகுத்த அரசியல் ஸ்தம்பித நிலையை
எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது தொடர்பான
பேச்சுவார்த்தைகள் அந்நாட்டு செனட் சபைக்கு
கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
மேற்படி அரசியல் ஸ்தம்பிதநிலை
குறித்து செனட் சபையிலுள்ள ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்
கட்சித் தலைவர்களிடையே கடந்த சில வாரங்களில் முதல் தடவையாக
நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும்
எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதலாம்
திகதி வரவு – செலவுத் திட்டமொன்றை குறித்த காலக்கெடுவுக்குள்
அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நிறைவேற்றத்
தவறியதையடுத்து அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் பகுதியாக
மூடப்பட்டன.
அமெரிக்காவானது தனது கடன் வரையறையை அதிகரிக்க
வேண்டியதற்கான காலக்கெடுவை எதிர்வரும் வியாழக்கிழமை
எதிர்நோக்கியுள்ளது.
அது தொடர்பில் உடன்படிக்கையொன்று
எட்டப்படாவிட்டால் அமெரிக்க அரசாங்கம் தனது செலவுகளை மேற்கொள்ள
முடியாத பாரிய பாதிப்பொன்றை எதிர்கொள்ள நேரிடும்.
இது தொடர்பில்
ஜனநாயகக் கட்சி செனட் சபை உறுப்பினர் டிக் டுர்பின் விபரிக்கையில்,
திங்கட்கிழமை சந்தைகள் மீளவும் திறக்கப்படுவதற்கு முன் கடன்
வரையறையை விரிவுபடுத்துவது தொடர்பில் உட் படிக்கையொன்றை
எட்டுவதே தமது இலக்காகவுள்ளதாகக் கூறினார்.
செனட்சபையின்
பெரும்பான்மைத் தலை வர் ஹரி ரெயிட்டுக்கும் செனட் சபையின் குடியரசுக்
கட்சித் தலைவர் மிட்ச் மக்கொன்னலுக்குமிடையே சனிக்கிழமை நேரடி
பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க செனட்சபை
உறுப்பினர்களிடையே இத்தகைய நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவது
கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.
இந்தப்
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரெயிட் வெள்ளை மாளிகையில் அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எதிர்வரும்
ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை கடன் வரையறையை அதிகரிப்பதற்கு
அரசாங்கத்துக்கு அனுமதியளிக்கும் வகையில் குடியரசுக் கட்சி
உறுப்பினர் சூஸன் கொரின்ஸால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை அவர்
நிராகரித்துள்ளார்.
செனட் சபையில் பெரும்பான்மையை வகிக்கும்
ஜனநாயகக் கட்சி கடன் வரையறையை அதிகரிப்பதற்கான பிரேர ணையொன்றை
முன்னெடுப்பதற்கு போதிய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.
இதற்கு முன் பாராளுமன்றப் பிரதிநிதி சபைக்கும் வெள்ளை மாளிகைக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருந்தது.
நன்றி வீரகேசரி
மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
14/10/2013 நவராத்திரி தின சிறப்பு பூஜையில் பங்கேற்க சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியதில் 109 பக்தர்கள் பரிதாப கரமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தட்டியா மாவ ட்டத்தின் ரத்னாகர் பகுதியில் உள்ளது மந்துளா தேவி கோயில். இங்கு, நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான நேற்று சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வழக்கம் போன்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண் டிருந்தனர்.
கோயிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர், பாதிக்கப்பட்டோரை உடனடியாக தட்டியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி
முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்
14/10/2013 தீர்ப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுளைக் குறிக்க அல்லாஹ் என்ற
சொல்லைப் பயன்படுத்த முடியாது என மலேசிய நீதிமன்றமொன்று
தீர்ப்பளித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கத்தோலிக்க பத்திரிகையான த. ஹெரால்ட்டின் மலே மொழிப்
பதிப்பில் கிறிஸ்தவ கடவுளை குறிக்க மேற்படி சொல்லை பயன்படுத்துவதற்கு
அனுமதித்து கீழ் நீதிமன்றமொன்று அளித்த தீர்ப்பை மேற்படி புதிய தீர்ப்பு
மாற்றியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தீர்ப்பையடுத்து இடம்பெற்ற மதக்கலவரங்களின் போது பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் தாக்கப்பட்டன.
ஆதரவாக அளிக்கப்பட்ட மேற்படி தீர்ப்புக்கு எதிராக அரசாங்கத்தால்
செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மலேசிய மேன்முறையீட்டு
நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் தமது கடவுளைக்
குறிக்க அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்த முடியாது என்று
தீர்ப்பளித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை
No comments:
Post a Comment