விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
யாழில் தனிச் சிங்களத்தில் அடையாள அட்டைகள்
உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச பொறிமுறை நிச்சயம் : அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை காலக்கெடு
விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்
25/09/2013 இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்தின்
முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
அடுத்த மாத ஆரம்பத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் குர்ஷித் விஜயம் செய்யவுள்ளார்.
அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல்
கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் விக்னேஸ்வரனையும் அவர் சந்திக்க உள்ளார். நன்றி வீரகேசரி
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
25/09/2013 இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு
26.1 வீதத்தால் அதிகரித்துள்ளதென இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி
அலுவலகம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்
இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை 79,256 ஆக
இருந்தது. அத்தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 100,224 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுவரையில் 711,446 பேர்
இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 வீத
அதிகரிப்பாகும்.
இந்தியா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளிலிருந்து
வருகைத் தரும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஒவ்வொரு மாதமும்
அதிகரித்துள்ளது என்று உல்லாசப்பயணத்துறை அபிவிருத்தி அலுவலகம் மேலும்
தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
யாழில் தனிச் சிங்களத்தில் அடையாள அட்டைகள்
26/09/2013 வட மாகாண சபைத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் முகமாக இடம்பெற்ற நடமாடும்
சேவையில் விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் தனிச் சிங்களத்தில் மட்டும்
விபரங்கள் எழுதப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு
தனிச்சிங்களத்தில் மட்டும் விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகள்
கிடைக்கப்பெற்றவர்கள் அதில் உள்ள விபரங்களை அறியமுடியாமல் இருப்பதுடன்
அதில் உள்ள விபரங்கள் சரியா அல்லது பிழையா என தெரியாத நிலையிலும்
திண்டாடுகின்றனர்.
இத்தகைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப்
பெற்றவர்கள் தமது விபரங்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் மற்றும் தேசிய
அடையாள அட்டைக்கான மூன்று படங்களையும் கிராம அலுவலர்கள் ஊடாக மீள அனுப்பி
குறிப்பிட்டதேசிய அடையாள அட்டைக்கு பதிலாக தமிழ், சிங்கள மொழிகள் அடங்கிய
விபரங்களுடன் தேசிய அடையாள அட்டையை மீளப் பெற முடியும் என தேசிய அடையாள
அட்டைகளை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நன்றி வீரகேசரி
உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச பொறிமுறை நிச்சயம் : அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை காலக்கெடு
No comments:
Post a Comment