22/5/2012
ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த ரயில் விபத்தில் 25 பேர் பலியானதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ், பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பெட்டிகள் விபத்து காரணமாக தடம் புரண்டுள்ளதோடு அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment