ஆஸி. செல்ல முயன்ற மேலும் நால்வர் கைது

 _

எம்.நேசமணி 11/1/2012

சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் நால்வரை தங்காலை பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தங்காலை, அம்பாந்தோட்டை கடற்பரப்பில்வைத்து குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்காலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 14 பேரும் அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்த 7 பேருமாக 21 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி




No comments: