திருவாசக முற்றோதல் 2012


.
அன்புடையீர்!

வணக்கம். கடந்த ஆண்டுகளைப்போல, இந்த ஆண்டும் சிட்னி ஸ்ரீதுர்க்கை அம்மன் கோவிலில் திருவாசக முற்றோதல் நடைபெற திருவருள் கூடியுள்ளது. நமது சமய முதல் நூல்களில் ஒன்றான திருவாசகத்தின் சிறப்புக்கள் பல உள. ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

பரம்பொருளாகிய சிவபெருமானே தம் கைப்பட எழுதித் தந்தது.

சைவசமயத்தவரால் மிக அதிக அளவில் முற்றோதல் செய்யப்படும் பெருமை உடையது.

பாடும்போதெல்லாம் உள்ளத்தை உருக வைப்பது.

இத்தகைய திருவாசக முற்றோதலில் கலந்துகொண்டு வளமனைத்தும் பெறுவீர்.

திருவாசக முற்றோதலில் கலந்துகொள்ளும் அடியார்கட்கு அன்னதானம் வழங்கப்படும்.

இடம்: துர்க்கை அம்மன் கோவில், 21 & 23 Rose crescent , Regents park NSW - 2143

நாள் - 22 ஜனவரி 2012

நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 4.30 வரை

மேலும் தொடர்புகளுக்கு

Ph: (02) 9644 6682 (02) 9746 9724

Website: www.sydneydurga.org Email: sydneydurga@gmail.com

No comments: