இறந்தவர்களின் எண்ணிக்கை 48


.

கடல் சீற்றத்தால் பாறையில் மோதி உடைந்து தத்தளிக்கும் அகதிகள் படகுஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அருகே பாறைகளில் மோதி அகதிகளின் படகு நொறுங்கி நீரில் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இரான், இராக் மற்றும் குர்து அகதிகளை ஏற்றிய படகு சீற்றம் கொண்ட கடலில் கடந்த புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்களில் 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இரானியர்கள், இராக்கியர்கள் மற்றும் குர்து இனத்தவர்களுமாக அந்தப் படகில் 90 பேர் வரை இருந்திருக்கலாம் என்று ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.
ஆஸ்ரேலியக் கரைகளுக்கு அகதிகளை கடத்தி வருபவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான டொனி அபொட் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே கடலில் நீரின் அடியில் உள்ள குகைகளில் பொலிஸ் சுழியோடிகள் தேடுதல் நடத்திவரும் நிலையில் இந்த தகவலை ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Nanri- BBC

No comments: