தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

. விக்ரோறியப் பல்லினக்கலாச்சாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க விக்ரோறிய மானில அரசினால் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான பட்டயப் புலமைப்பரிசில்(diploma scholarship)அறிவிக்கப்பட்டு மெல்பேர்ண் RMIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றமை அனைவரும் அறிந்ததே.


தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும்நோக்கத்துடனும், தமிழ்ச்சமூகத்தின் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கு முகமாகவும் அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக வழங்கப்பட்ட புலமைப்பரிசில் கற்கைநெறி தற்போது நிறைவு பெற்று 4 பெண்களும் 6 ஆண்களுமாகப் 10 தமிழர்கள் DIPLOMA வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NAATI என்று சுருக்கமாகக் கூறப்படுகின்ற NATIONAL ACCREDITATION AUTHORITY FOR TRANSLATORS AND INTERPRETERSஇற்கான தகைமையையும் பெற்றிருக்கிறார்கள். இவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:-

1) A. அமிர்தநேசன்
2) R. அருள்நாவலன்
3) ஒன்னப்பன் அசோகராஜன்
4) லக்க்ஷ்மி பாலகிருக்ஷ்ணன்
5) பத்மபிரியதர்க்ஷினி குகன்
6) றஜனி சோமசுந்தரம்
7) சாந்தினி புவனேந்திரராஜா
8) க்ஷண் குமரன்
9) நடேசன் சுந்தரேசன்
10) முகமது சலீம்

No comments: