அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சல் நிகழ்ச்சி

.

சிட்னி முருகன் ஆலயத்தின் ரதோற்சவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 28.03.2010 அன்று நடைபெறஇருப்பதை முன்னிட்டு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் நிகழ்ச்சியை நடாத்த இருப்பதாக அறியக்கிடைத்தள்ளது. சிட்னி நேரப்படி காலை 10.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணிவரை இந்த நேரடி அஞ்சல் இடம்பெற உள்ளது. கோவிலுக்கு சென்று முருகனின் தேர் திருவிழாவில் பங்கு பற்ற முடியாத பக்தர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள் அதே போன்று தீர்த்த திருவிழாவையும் திங்கட் கிழமை காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை நேரடியாக அஞ்சல் செய்ய இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: