சிட்னி முருகன் ஆலயத்தில் ஏழாம் திருவிழா கோலாகலமாக நடந்தது.

.

26.03.2010
சிட்னி முருகன் கோவிலின் ஏழாம் திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. இன்று வெள்ளிக் கிழமை ஆனதினால் பக்தர்கள் கூட்டம் என்றும் இல்லாதவாறு காணப்பட்டது. முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி மிக அழகிய காட்சியாக இருந்தது.
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த நலம் தானா நலம் தானா என்ற தில்லானா மோகனாம்பாள் படப் பாடல் மனதை கொள்ளை கொண்டது.

முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.



                          முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் காட்சி


                                ஆலயத்திற்கு வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்



             நாதஸ்வர தவில் கலைஞர்களின் கச்சேரி கோவில் வீதியில் இடம்பெறுகின்றது.


                                                                                                                                 Photos by Gnani

       சுவாமி வீதி உலா வந்து கிழக்கு வீதியில் நிற்கும்போது சிறு பெண் குழந்தை தேவாரம் பாடுகின்ற காட்சி

No comments: