சிட்னி முருகன் ஆலயத்தில் நான்காம் திருவிழா

.
23.03.2010



இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் நான்காம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.வழமைபோல் பெருந்திரளான மக்கள் வருகைதந்திருந்தார்கள். நாதஸ்வர தவில் வாத்திய இசை முழங்க முருகப்பெருமான் இடபவாகனத்தில் சிவலிங்கத்துடன் அமர்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா என்ற திருவிளையாடல் பாடலை கேட்பதற்கு ஒருநாள் உண்மையிலேயே போதாமல் தான் போய்விட்டது.மிக அற்புதமான இசை வெள்ளத்தில் அனைவரையும் நனைத்து விட்டார்கள்.
இக் காட்சிகளை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.
 
 
 
                           சிட்னி முருகன் ஆலயத்தின் ஒரு பகுதியும் முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியும்



                                                தெற்கு வீதியில் நாதஸ்வர கச்சேரி இடம் பெறுகின்றது.



                              திரளாக வந்திருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்








                                                                                                                               Photos by gnani


No comments: