சிட்னி முருகன் ஆலய மூன்றாம் திருவிழா

.


அருள்மிகு சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் இருக்கின்றது 22.03.2010 திகதியான இன்று மூன்றாம் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.புலம்பெயர்ந்த நாடான ஒஸ்ரேலியாவில் பக்தர்கள் பகலிலும் இரவிலும் பெரும் திரளாக வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள்.முருகப்பெருமானின் கிருபையினால் காலநிலை மிகவும் நன்றாக அமைந்து யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் சன்னிதானத்திலே நிற்பதைப்போன்ற உணர்சியை ஏற்படுத்துகின்றது.தண்ணீர்பந்தல் மிகச்சிறப்பாக பலவகையான பானங்களை வழங்கி தாகசாந்தி செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் வாசித்த சங்கராபரணம் அற்புதமான இசையாக அனைவரையும் கவர்ந்து கொண்டது.
 
 

                                                                                                                                         





                                                                                                                       Photos By Gnani


No comments: