சிட்னி முருகன் ஆலயத்தில் ஜந்தாம் திருவிழா

24.03.2010


சிட்னி முருகன் கோவிலின் ஜந்தாம் திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சியை காணக் கண் ஆயிரம் வேண்டும் என்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது.நாதஸ்வர இசையுடன் வீதிஉலா வந்த முருகனுக்கு நான்கு மூலையிலும் மண்டபபடி போட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கிழக்கு மூலையில் பிரசாதமாக வடை பரிமாறப்பட்டது பக்தர்கள் மகிழ்ச்சியோடு பிரசாதத்தை பெற்றுக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என்ற தில்லானா மோகனாம்பாள் படப் பாடலும் தொடர்ந்து வந்த தில்லானா இசையும் பக்தர்களை கொள்ளை கொண்டது. இதன்போது தவில் வித்துவான்கள் தவில் வாசித்தi அழகை மக்கள் புகழ்ந்து பேசியதை கேட்கக்கூடியதாக இருந்தது. பாடலைத் தொடர்ந்த தனித்தவில் கச்சேரி மனதை வருடிச்சென்றது

முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.

                                                                                                                                     Photos by Gnani.
                 முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே     
                                 பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சி

 


                                   தெற்கு வீதியில் நாதஸ்வர கச்சேரி இடம் பெறுகின்றது.

 
                             திரண்டு வந்திருந்த பக்தர்களின் ஒரு பகுதியினர் இங்கே
 

                                                                                                                                 Photos by Gnani

No comments: