தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ் சேவை

.

நாளை ஞாயிற்றுக்கிழமை 28.03.2010 சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெறும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வெஸ்மீட் புகையிரத நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் ஆலயத்திற்கும் சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து வெஸ்மீட் புகையிரத நிலையத்துக்குமாக இந்த பஸ் வண்டிகள் செயற்படும். காலை எட்டுமணி முதல் மாலை ஜந்து மணிவரை இடம்பெற இருக்கும் இந்த சேவையில் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு பஸ் வண்டி புறப்பட இருக்கின்றது. கோவிலை அண்டிய பகுதிகளில் வாகனத் தரிப்பிட பற்றாக் குறையை போக்குவதற்கும் வாகனங்களில் வர வசதியற்றவர்களுக்குமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments: