இயற்றியவர்
பல்மருத்துவ கலாநிதி
பாரதி இளமுருகனார்
பழந்தமிழ்ப்
பெருமையைப் பறைசாற்றி வருவோர்தம்
வழக்கத்தில்; ஓம்பாரடி - கிளியே
வாய்ச்சொல்லில்
தீரரடீ!
நடைமுறையில்
ஓம்பிடாத நனிசிறந்த விழுமியங்கள்
நாளடைவில் நலியுமன்றோ? – கிளியே
நாளும்புழங்
கச்சொல்லுவாய்!
வாய்பேசாச்
சீவன்களை வேள்வியென்ற பாவனையில்
கோயிலில் உயிர்ப்பலியா? - கிளியே
கொடுமையிற்
கொடுமையடீ!
மனதைச் சலவைசெய்தே
சைவர்களை மதம்மாற்றத்
தினமும் முயலுகிறார்
– கிளியே
சிறுநெறி ஈனரடீ!
செந்தமிழ் வளர்ப்போரைத்
தேடிஇனங் கண்டுகொண்டேன்
சிந்தை மகிழுதடீ
– கிளியே
தேன்றமிழும்
வாழுமடி!
நாடுதோறும்
தமிழ்ப்பள்ளி நல்லதமிழ் பயிற்றிடவே
பாடுபடும் தொண்டர்களைக்
- கிளியே
பாராட்ட வேண்டுமடி!
மறக்காது செய்ந்;நன்றி மாண்பைப் போற்றுபவர்
சிறப்பாக வாழ்கின்றார்
- கிளியே
சீரியரை வாழ்த்திடடீ!
நல்லோரும் வாழ்வதனால்
நாட்டில் நிறைந்தமழை
எல்லோர்க்கும்
பெய்யுதடீ – கிளியே
இறைவனின் கருணையோடீ!
அன்று தமிழிற்
பூசை ஆற்றிய முறைமையெலாம்
இன்றினித்; தொடர்ந்திடுமோ – கிளியே
ஏற்காரோ தமிழ்மந்திரம்?
முன்னோர்கள்
இயற்றிவந்த முறையான தியானமுறை
இன்றோங்கிப்; பரவுதடீ – கிளியே
ஈடேற்றம் தோன்றுதடி!
நிராதார யோகமதை
நித்தம் பயில்வோரை
பராபரன் ஏற்பானடி
– கிளியே
பற்றையும் பற்றாரடி!
செந்தண்மை அந்தணராய்;ச் சிறந்திடச் சாதியேது?
இந்துமதம் மறுக்கலையே!
– கிளியே
எல்லோர்க்கும்; தகுதி உண்டே!
மூப்படைந்த
பெற்றோரை முறைப்பிள்ளை கைவிட்டால்
காப்பதற்கு
அரசாங்கம் - கிளியே
கரம் நீட்டும்
நாடிதுவே!
பல்லினத்து
மக்களையும் பாசத்துட ணணைத்து
நல்லனசெய் நாடிதுவே
– கிளியே
நன்றிசொலி வணங்குவமே!
ஓம்புதல் - நடைமுறையில் பாதுகாத்தல்;
விழுமியங்கள் - சிறந்த பண்புகள் சிறுநெறி - இழிந்த வழி சீரியர்- உயர்ந்தோர் முறைமை – வழக்கம் நிராதார யோகம்
- தற்போதம் இழந்து பரம்பொருளை நினைந்தவண்ணம் பற்றற்ற நிலையில் இயற்றும் தியானம் பராபரன்
- பரம்பொருள் செந்தண்மை அந்தணரர்; - சிறப்பான குணங்களைக் கொண்ட பெரியோர்;


No comments:
Post a Comment