சிந்தடி வஞ்சிப்பா:
உரிமையென்பதே ஒவ்வொருவரின்
உடன்பிறந்ததே!
உரிமையதுவும் உன்தாயவள் உனக்களித்ததே!
பிறந்தநாளிலே பெற்றவுரிமைப்
பெருகவாழ்ந்திடு,
மறவனாகவே உரிமைகாத்திடு மறந்திடாமலே!
வங்கக்கடல் அலைக்குரிமையும் வழங்கலாகுமோ?!
திங்கள்தரும் ஒளிதனதெனத் திரியலாகுமோ?
வாக்களித்திடும் உரிமைதன்னையும்
வாங்கிநீயுமே
வாக்களித்திடத் தயங்கினாலுனை
வாழ்த்தலாகுமோ?
தனிச்சொல்:
எனவே,
சுரிதகம்:
உரிமை தன்னையே உதறி விடாமலே
பெரிதாய் அதனைப் பேணுவாய்!
உரிமை, உரிமை, ஒலிப்பாய் ஓங்கியே!
No comments:
Post a Comment