1965ம் ஆண்டு வெளிவந்த படங்களுள் ஏழு படங்கள் ஆள்
மாறாட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதைக் களத்தைக் கொண்டிருந்தன. எங்க வீட்டுப் பிள்ளை, பஞ்சவர்ணக் கிளி, ஆசைமுகம், சாந்தி, இதயக் கமலம், நீ, என்ற வரிசையில் உருவான மற்றுமொரு படம்தான் கலங்கரை விளக்கம்.
இந்த மாதிரியான கதை என்றால் அதில் எம் ஜி ஆர் தான் இரட்டை
வேடத்தில் வருவார். ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு படத்தின் கதாநாயகி சரோஜாதேவிக்கு வழங்கப்பட்டது. இப்படி இரு வேடங்களில் நடிப்பதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய். அறுபது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப் பட்ட இந்த ரேட் சரோஜாதேவிக்கு அன்று இருந்த மவுசை வெளிப்படுத்தியது.
வேடத்தில் வருவார். ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு படத்தின் கதாநாயகி சரோஜாதேவிக்கு வழங்கப்பட்டது. இப்படி இரு வேடங்களில் நடிப்பதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய். அறுபது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப் பட்ட இந்த ரேட் சரோஜாதேவிக்கு அன்று இருந்த மவுசை வெளிப்படுத்தியது.
எம் ஜி ஆர் நடிப்பில் படகோட்டி படத்தை கலரில் எடுத்து விட்டு , இந்தப் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தார் தயாரிப்பாளர் ஜி .என் . வேலுமணி. படத்தின் கதையை எழுதும் பொறுப்பு கதாசிரியர் மா . லட்சுமணனிடம் விடப்பட்டது. 1958ம் வருடம் ஆல்ப்ரெட் ஹிட்ச்கொக் ஆங்கிலத்தில் இயக்கிய வெர்டிகோ என்ற மர்மப் படத்தின் கதைக் கருவை எடுத்து தமிழ் படுத்தியிருந்தார் லட்சுமணன் . சும்மா சொல்லக் கூடாது , ஹிட்ச்கோக்கே கலங்கரை விளக்கத்தை பார்த்தால் கூட இது ஆங்கிலத்தில் தான் இயக்கிய படம் என்று நம்பியிருக்க மாட்டார்.
ஆறு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் , சிவகாமியின் சபதம் நாவலின் இடைச் செருகல் இவை எல்லாம் வேர்ட்டிகோவில் இருந்தனவா என்ன! வேர்டிகோ என்றால் தலை சுற்றல் என்று அர்த்தம். தமிழ் படத்தை பார்த்திருந்தால் ஹிட்ச்க்கொக்கிற்கு அதுதான் ஏற்பட்டிருக்கும்!
பணக்கார குடும்பத்தை சேர்ந்த நீலா விபத்தொன்றில் சிக்கி சித்தப் பிரமைக்கு உள்ளாகிறாள். சிவகாமியின் சபதம் கதையை படித்த காரணத்தால் தன்னை சிவகாமியாக எண்ணி மனம் பேதலிக்க நிலையில் மகாபலிபுரத்தில் தந்தையுடன் வாழ்ந்து வருகிறாள். டாக்ட்ர் கோபால் அவளுக்கு சிகிச்சையளிக்க அமர்த்தப் பட்டுள்ளார். கோபாலை பார்ப்பதற்கு வரும் அவனின் நண்பன் வக்கீல் ரவி விபத்தில் இருந்து நீலாவை காப்பாற்றுகிறான். அவர்கள் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்து நீலாவை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறான். ஆனால் நீலாவின் சித்தப்பா நாகராஜன் சொத்துக்களை அடைய திட்டமிட்டு நீலாவை கலங்கரை விளக்கத்தின் உச்சியில் இருந்து கீழே தள்ளி கொன்று விடுகிறான். அந்த அதிர்ச்சியில் நீலாவின் தந்தையும் மாண்டு விடுகிறார். சொத்துக்கள் முழுவதும் நாகராஜனின் கைகளுக்கு வருகின்றன. காதலியை பிரிந்த துன்பத்தில் துவண்டு விடும் ரவியை மாறுதலுக்காக பாவேந்தர் பாரதிதாசன் தின விழாவுக்கு வற்புறுத்தி அழைத்து செல்கிறான் கோபால். அங்கே ரவி , கோபால் இருவருக்கும்
ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. இறந்து விட்டதாக கருதப்படும் நீலா மேடையில் பாரதிதாசன் பாடலை ஆடிப் பாடுகிறாள். அவள் நீலாவா, அல்லது வேறு பெண்ணா, மகாபலிபுரத்தில் நடந்ததென்ன என்பவற்றை எல்லாம் ரவியும், கோபாலும் அறிந்து கொண்டார்களாக என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் எம் ஜி ஆர் , நாயகி சரோஜாதேவி இருவருமே படம் முழுவதும் கலக்கத்துடனும், குழப்பத்துடனுமே காணப்படுகிறார்கள். நாயகியை சுற்றியிருக்கிற மர்மம்தான் அதற்கு கரணம். ஆனாலும் இருவரும் ஏற்ற பாத்திரத்தில் குறை வைக்கவில்லை. நம்பியார் வில்லனாக கண்ணாடி அணிந்து , வித விதமாக உடுத்தி ஜோராக வருகிறார். அவரின் காதலியாக வரும் ஜி . சகுந்தலா காதலனுக்கும், தங்கைக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவித்து ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார். அதே போல் எம் ஜி ஆரின் நண்பனாக வரும் வி. கோபாலகிருஷ்ணனின் நடிப்பும் இயல்பாகவே இருந்தது.
படம் தொய்வடைந்து விடாமல் காப்பாற்றுவது நாகேஷ், ஏ. வீரப்பன், மனோரமா ஆகியோரின் காமெடி. மகாபலிபுரத்தில் கைடாக இருக்கும் நாகேஷ், வீரப்பன் இருவரும் செய்யும் ரகளை சிரிப்பை கொண்டு வருகிறது. மனோரமாவுக்கு இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் கே. டி. சந்தானம், திருப்பதிசாமி, சி . ஐ . டி . சகுந்தலா ஆகியோரும் நடித்திருந்தனர்.
ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற போதும் அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தில் கதாப்பாத்திரமாக சிவகாமி, நரசிம்ம பல்லவர், பாரதிதாசன் பாடல் மாமல்லபுரம் என்றெல்லாம் இணைத்து படத்தின் கதையை தமிழ் சூழலுக்கு ஏற்ப எழுதிய மா . லட்சுமணனை பாராட்டலாம். படத்தின் வசனங்களை சொர்ணம் எழுதியிருந்தார். வசனங்கள் ஆங்காங்கே ரசிக்கும்படி இருந்தன.
படத்தில் பாரதிதாசனின் சங்கே முழங்கு பாடல் சிறப்பாக
படமாக்கப்பட்டது. பஞ்சு அருணாசலம் எழுதிய பொன் எழில் பூத்தது புது வானில் பாடல் இலக்கிய ரசனையோடு இதயத்தை கவர்ந்தது. வாலியின் காற்று வாங்க போனேன், பல்லவன் பல்லவி பாடட்டுமே பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ராமமூர்த்தியை விட்டு பிரிந்த பிறகு விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஒப்பந்தமான முதல் படம் இதுவேயாகும். பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன.
படமாக்கப்பட்டது. பஞ்சு அருணாசலம் எழுதிய பொன் எழில் பூத்தது புது வானில் பாடல் இலக்கிய ரசனையோடு இதயத்தை கவர்ந்தது. வாலியின் காற்று வாங்க போனேன், பல்லவன் பல்லவி பாடட்டுமே பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ராமமூர்த்தியை விட்டு பிரிந்த பிறகு விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஒப்பந்தமான முதல் படம் இதுவேயாகும். பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன.
படத்தின் இறுதி சண்டை காட்சி விறுவிறுப்பாக சியாம்சுந்தரால் அமைக்கப்பட்டிருந்தது. ஒளிப்பதிவை தம்பு கவனித்துக் கொண்டார். கே. சங்கர் இயக்கிய இரண்டாவது எம் ஜி ஆர் படம் இது. எம் ஜி ஆர் படம் என்பதை நினைவில் கொண்டு படத்தை இயக்கியிருந்தார் அவர். படம் சுமாரான வெற்றியை பெற்ற போதும் அறுபது ஆண்டுகளை கடந்தும் பாடல்கள் ஸ்வீட் சிக்ஸ்டியாக இன்றும் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு சிறப்பு தான்!
No comments:
Post a Comment