புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு
பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை
மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி
யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ; மனைவி தலைமறைவு
மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்
Published By: Digital Desk 2
20 Jun, 2025 | 08:04 PM
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, “புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதி வேண்டும்” என்ற கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
1983ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மீது நடைபெற்ற படுகொலைகள், சட்டவிரோதமான கூட்டுக் கொலைகள், காணாமலாக்கங்கள் ஆகியவை இலங்கை அரசால், இந்திய இராணுவத்தால் மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதாக வலியுறுத்தினர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனுடன், வடமாநிலத்தில் தற்போதுவரை மூன்று முக்கியமான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
மன்னார் மனித புதைகுழி (2018) – பழைய சதோச வளாகத்தில் 323 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதில் 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், மெலிபன் பிஸ்கட் பை உள்ளிட்ட உணவுப் பொருள் சான்றுகளும் கிடைத்தன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் (2023) – 52 எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகள் போராளிகளின் சீருடைகள், உள்ளாடைகள், அங்கத்துவ இலக்க தகடுகள் ஆகியவை கிடைத்தன. பெரும்பாலானவை பெண்களுக்குரிய உடைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – செம்மணி (2025) – 13ம் திகதி மாசி மாதம் முதன்முறையாக கட்டுமான பணிகளின் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 19 எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன. இதில் 3 சிசுக்களுக்குரிய எலும்புக்கூடுகள் உள்ளன.
இவை தவிர, பல்வேறு நேரங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள், விசாரணைகளில் குறிப்பிட்ட இடங்களில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்கள். முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் செம்மணியில் 300க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், மண்டைதீவு, திராய்க்கேணி, சத்துருக்கொண்டான், மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில், அரசாங்கம் தங்களது பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை காட்டி, உண்மையை வெளிக்கொணர சுயாதீன விசாரணை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நீதிக்காக காத்திருப்பதாகவும், எம்மவர் உயிர்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை ஏற்க முடியாது எனவும் கூறப்பட்டது.
மேலும், இக்கோரிக்கை அரசாங்கம் மீது நீதியை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்க வேண்டிய அழுத்தத்தை உருவாக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு
Published By: Digital Desk 3
20 Jun, 2025 | 09:37 AM
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தது.
இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மீண்டும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை
Published By: Vishnu
20 Jun, 2025 | 03:12 AM
செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும்.
சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும்.
இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி
22 Jun, 2025 | 11:22 AM
மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர்.
மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான ஊடக அறிக்கையில்,
மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது.
அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும்.
மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம்.
கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது.
இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.
காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது.
மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.
மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர்.
மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக "காணி தினம்" இருக்கின்றது.
இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு "நிலமற்றோர்க்கு நிலம்" எனும் தொணிப்பொருளில் "மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது.
மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும்.
நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. நன்றி வீரகேசரி
யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ; மனைவி தலைமறைவு
19 Jun, 2025 | 04:45 PM
யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன், மனைவி ஆகிய இருவரும் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்துவருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்த நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட கணவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி
மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
21 Jun, 2025 | 03:41 PM
காணி உரிமை தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை (21) காலை முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான அமைதி வழிப்போராட்டம் எனும் தொனிப்பொருளில் அட்டன் பல்பொருள் அங்காடியிலிருந்து பஸ்தரிப்பிடம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.
மலையக மக்களின் காணி உரிமையை கோரிய கோசங்கள் பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள், அரசியல் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment