செல்வ மகளும் சிதறிய கனவும்:


-சங்கர சுப்பிரமணியன்


 




அம்மாவின் சாயலிலே அப்படியே என்மகள்

இருப்பதாக

அக்கம் பக்கத்தில் ஆசையாய் பலரும்

சொன்னபோது

அள்ளி எடுத்தவளை அன்புடனே நான் 

உச்சி முகர்ந்தேன்

 

வெண்ணிலா வேண்டி அவள் விரும்பியே 

அழுதபோது

ண்ணீரில் பிம்பம் காட்டி கண்ணீரை நான்துடைத்தேன்

யானை மீது அம்பாரி போக அவள் ஆசைப்பட்டதுமே

நான் ஆனேன் யானையாக என் முதுகில் 

அவள் இருக்க

 

பட்டுச் சொக்காய் பாவடையில் பதவிசாய் நின்றவளும்

சட்டெனவே வளர்ந்தின்று தாவணியும்

அணிந்து நின்றாள்

தாண்டித் தாண்டியே பாண்டி விளையாடி 

வந்தவளும்

வேண்டாம் அதுவென்றே பல்லாங்க்குழி 

முன்னமர்ந்தாள்

 

பள்ளி சென்று படித்தவளும் கல்லூரியில் கால் வைத்தாள்

கணினியில் பட்டம் பெற்று கௌரவமாய் வேலை பெற்றாள்

 

திருமணம் முடிக்க எண்ணி வரன் 

பார்த்தோம் அவளுக்கு

அழகாய் இருக்கிறாளென்று சொல்லி 

ஆராதனை செய்தார்கள்

நல்ல நிறமென்றும் அவர்கள் நயம்படவும் மெச்சினார்கள்

பண்போடு வளர்த்திருப்பதாய் பாராட்டித் 

தள்ளினார்கள்

பணம் என்ன கொடுப்பீரென்றும் 

பண்பின்றிக் கேட்டார்கள்

 

என் நிலையை எடுத்துக் கூறியதும் 

எழுந்துமே சென்றார்கள்

வாடிநிற்கும் செல்லமகள்  நிலைதனை 

நான் என்னவென்பேன்?



 


No comments: