உலகச் செய்திகள்

 அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம்

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் - பல இலக்குகள் உள்ளன – டிரம்ப்

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து வடகொரியா சீற்றம்

காசாவில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் டாங்கிதாக்குதல் - 45 பேர் பலி



அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

22 Jun, 2025 | 07:26 AM

அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக  ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன

ஃபோர்டோ அணு உலையில் வடக்கு ஈரானின் மலைகளில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளது மேலும் யுரேனியத்தை அதிக தூய்மை தரங்களுக்கு செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மையவிலக்குகள் உள்ளன. அதன் ஆழம் காரணமாக அமெரிக்காவின் "பதுங்கு குழி" bunker busters குண்டுகள் மட்டுமே இந்த அணு உலையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது

மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் வசதிகளும் தாக்கப்பட்டதை இஸ்ஃபஹானின் துணை பாதுகாப்பு ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ஊடுருவல்களை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார் "எதிரி இலக்குகளை எதிர்கொள்ள" வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது ஆனால் "பல வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

ஈரானிய ஊடகங்களின்படி அந்த நிலையங்கள் முன்பே அகற்றப்பட்டுவிட்டன.   நன்றி வீரகேசரி 

 




அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம்

22 Jun, 2025 | 11:23 AM

ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டுமாடிக்கட்டிடங்கள் பலத்தசேதமடைந்துள்ளன ,சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது.

வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டுஅகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 




சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் - பல இலக்குகள் உள்ளன – டிரம்ப்

22 Jun, 2025 | 08:23 AM

ஈரான் சமாதானத்தை நாடாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கின் மிரட்டல்காரனான ஈரான்  இப்போது சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும்,அது நடைபெறாவிட்டால் எதிர்கால தாக்குதல்கள் மிகப்பெரியவையாக காணப்படும் என அமெரிக்காவிற்கான உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சமாதானம் அல்லது ஈரானிற்கு பெரும் துயரம் நிகழலாம் இது கடந்த 8 நாட்களாக நாம் பார்த்ததை விட பெரிய விடயங்கள் இடம்பெறலாம், மேலும் பல இலக்குகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏனைய இலக்குகளை துல்லியமாக வேகமாக திறமையுடன் அமெரிக்காவினால் தாக்கமுடியும்,ஒரு சில நிமிடங்களில் தாக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

 



அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து வடகொரியா சீற்றம்

20 Jun, 2025 | 03:41 PM

ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்து வடகொரியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் வெளியுறவுஅமைச்சு  ஈரான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலின் அரசபயங்கரவாதத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் என  குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தற்போது மத்திய கிழக்கில் புதிய யுத்தம் மூளும் ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் வடகொரியாதெரிவித்துள்ளது.

இஸ்ரேலை அமைதியை பாதிக்கும் புற்றுநோய் என வர்ணித்துள்ள வடகொரியா சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச குற்றவாளி இஸ்ரேல் என தெரிவித்துள்ளது.

ஈரானின் சட்டபூர்வ இறையாண்மை உரிமை பற்றி பேசுவதன் மூலம் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் யுத்தத்தின் தீப்பிழம்புகளை மூட்டிவிடுகின்றன என தெரிவித்துள்ள  வடகொரியா ஈரான் பாதிக்கப்பட்டநாடு  என தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 





காசாவில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் டாங்கிதாக்குதல் - 45 பேர் பலி

Published By: Rajeeban

17 Jun, 2025 | 02:08 PM

காசாவின் கான்யூனிஸ் பகுதியில் உணவுவாகனங்களிற்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கான்யூனிசின் பிரதான கிழக்கு வீதியில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் டாங்கி தாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில் காயமடைந்த உயிரிழந்த 300க்கும் மேற்பட்டவர்கள் நாசா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என மருத்துவர் முகமெட சஹெர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையை கையாள முடியாத நிலையில் மருத்துவமனை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





No comments: